You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. சட்டப்பேரவை சபாநாயகர் ஆனார் ஜேசிடி பிரபாகர்

    தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வானார்.

    ஜேசிடி பிரபாகர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். சபாநாயகராக ஆவதற்கான வேட்பு மனுவை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் நேற்று அவர் வழங்கினார்.

    வேறு யாரும் போட்டியிடாத சூழலில் அவர் இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அவரது இருக்கையில் அமரவைத்தனர்.

    அதன்பிறகு, பேரவையின் துணைத் தலைவருக்கான வேட்புமனு சட்டப்பேரவை முதன்மை செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

    அதன்படி ரவிசங்கர் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்ததாகவும் அமைச்சர் செங்கோட்டையன் வழிமொழிந்ததாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

    ரவிசங்கர் தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனு அளிக்காததால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ரவிசங்கர் துறையூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவராவார்.

  2. சட்டப்பேரவையில் விஜயை பாராட்டிப் பேசிய அமமுக எம்எல்ஏ

    அமமுக எம்எல்ஏ காமராஜ் முதலமைச்சர் விஜயை சட்டப்பேரவையில் பாராட்டி பேசியுள்ளார்.

    அமமுக எம்எல்ஏ காமராஜ் சட்டப்பேரவையில் பேசுகையில், “தமிழ்நாட்டு முதலமைச்சர் நல்லாட்சி தருவார் என நம்புகிறோம். அவர் முதலில் அறிவித்த மூன்று திட்டங்களும் மக்களுக்கு உதவும் திட்டங்கள். காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. முதலமைச்சர் விஜய் ஐந்தாண்டுகால சிறப்பான ஆட்சியை தர வேண்டும். நீங்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும். இளைஞர்களும் நாங்களும் உங்களை நம்புகிறோம். முதலமைச்சர் விஜய் முதலில் இலவசங்களை அறிவிப்பார் என எதிர்பார்த்தார்கள், ஆனால் உண்மையில் மக்களுக்கு உதவும் திட்டங்களை அறிவித்துள்ளார். கடந்த காலத்தில் ஏதேனும் பேசியிருந்தால், அது அன்றைக்கிருந்த அரசியல் சூழலில் பேசியது” என்றார்.

    முன்னதாக, அடுத்து ஆட்சியமைப்பது யார்? என்ற சூழல் நிலவிய போது காமராஜ் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்ததாக, ஆளுநரிடம் கடிதம் வழங்கப்பட்டதாகவும் ஆனால், அவ்வாறு அவர் வழங்கவில்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார்.

    டிடிவி தினகரன், “ஆளுநரிடம் நகல் கடிதத்தை வழங்கிய தவெக-வினர் அசல் கடிதத்தை வழங்காதது ஏன்? அசல் கடிதம் எங்கே உள்ளது? என்னுடைய ஒப்புதலுடன் தான் கடிதம் வழங்கினார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், காமராஜ் கையெழுத்திட்டதாக தவெகவினர் வெளியிட்ட காணொளி ஏஐ-ஆகக் கூட இருக்கலாம் என்றும் தினகரன் விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், காமராஜ் முதலமைச்சர் விஜயை பாராட்டியுள்ளார்.

  3. பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து 4-வது தோல்வி: ஷ்ரேயாஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகிறதா?

  4. தவெகவுக்கு அதிமுகவின் ஒரு தரப்பு ஆதரவு - சி.வி.சண்முகம் பேசியது என்ன?

    தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அதிமுகவில் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் பேசினார்.

    அப்போது, "அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறது. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள் உள்ளோம். தவெகவுக்கு குறிப்பாக முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர் முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்." என்று அவர் கூறினார்.

    மேலும் பேசிய அவர், "தேர்தலுக்கு பிறகு கலந்தாலோசித்தபோது அதிமுகவின் பொதுச் செயலாளர் சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார். திமுகவை எதிர்த்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறோம். இந்த நிலையில், நாங்கள் எதிர்த்த 'திமுகவின் ஆதரவுடன் அதிமுக என்னை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டுள்ளனர், அதனை நாம், ஒப்புக்கொள்ள வேண்டும்' என அவர் சொன்னபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை." என்றார்.

    “அதனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘அதிமுக புதிதாக கூட்டணியை அமைக்க வேண்டும்’ என கூறினோம். முதலமைச்சர் விஜயின் ஆட்சியை ஆதரிப்பதாக அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.” என்றார்.

    மேலும், சட்டப்பேரவை அதிமுக குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொறடாவாக சி.விஜயபாஸ்கர், துணை தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

    விரைந்து அதிமுக பொதுக்குழுவை பொதுச் செயலாளர் கூட்ட வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.

  5. தாய், சகோதரிகள் அனுபவித்த சித்ரவதையை அறிந்ததும் தந்தையை கொன்ற மகன் - நாடே கொந்தளிப்பது எதற்காக?

  6. 717 மதுக்கடைகளை 2 வாரங்களுக்குள் மூட விஜய் உத்தரவு

    வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வுசெய்து கண்டறியுமாறு முதலமைச்சர் விஜயால் உத்தரவிடப்பட்டது.அதன்படி, இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

    வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. இந்திய குடும்பங்கள் தங்கம் வாங்குவது நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?

  8. காணொளி: ஸ்டாலின், சீமான், அன்புமணி - நேரில் சென்று வாழ்த்து பெற்ற விஜய்.. நடந்தது என்ன?

  9. ஸ்டாலின் முதல் சீமான் வரை: தலைவர்கள் வீட்டிற்கே சென்று சந்தித்த விஜய் - புகைப்பட தொகுப்பு

  10. காணொளி: விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்

  11. காணொளி: வைகோ, அன்புமணியை சந்தித்த விஜய்

  12. காணொளி: தமிழக முதல்வர் விஜய் ஸ்டாலினை சந்தித்தார்

  13. காணொளி: பிரேமலதா வாழ்த்தியதும் விஜய் என்ன செய்தார்?

  14. எம்எல்ஏவாக பதவியேற்ற கீர்த்தனா

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில், சிவகாசி எம்எல்ஏவும் அமைச்சருமான கீர்த்தனா தான் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால் முதலில் பதவியேற்கவில்லை. பின்னர் சான்றிதழை காண்பித்து பதவியேற்றுக்கொண்டார்.

  15. சபாநாயகர் பதவிக்கு தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் போட்டி

    தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அவர் வழங்கினார். அப்போது முதலமைச்சர் விஜயும் உடனிருந்தார்.

    ஜேசிடி பிரபாகர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஆவார்.

    சபாநாயகர் பதவிக்கு போட்டி இருந்தால் நாளை (மே 12) குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலை தற்காலிக சபாநாயகர் கருப்பையா நடத்துவார்.

    ஜேசிடி பிரபாகர் முன்பு அதிமுக சார்பாக எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

  16. விஜய் - ராகுல் வீடியோ, படம் இன்ஸ்டாவில் முடக்கமா? கிரிஷ் புகார்

    தமிழக முதல்வர் விஜயுடன் ராகுல் காந்தி சேர்ந்திருந்த வீடியோ, புகைப்படம் இன்ஸ்டாகிராமில் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தன் எக்ஸ் பக்கத்தில், “பதவியேற்பு வீடியோக்களை முடக்கும் (block) அளவுக்கு தவெக-காங்கிரஸ் கூட்டணி மீது மோதி மிகுந்த அச்சத்தில் உள்ளாரா?

    விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ராகுல் காந்தியின் ரீல் மற்றும் அவர் விஜயுடன் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பிளாக் செய்துள்ளது. இந்த பொது ஜனநாயக நிகழ்ச்சி குறித்த என்னுடைய பதிவும் நீக்கப்பட்டுள்ளது. " என தெரிவித்துள்ளார்.

    "அந்த வீடியோ ஒரு மணிநேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. அப்புகைப்படம் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக 46 மில்லியன் பேரை சென்றடைந்திருந்தது.

    அரசியலமைப்பு ரீதியான பதவியேற்பு நிகழ்ச்சியின் காட்சிகளில் அப்படி என்னதான் ஆபத்து உள்ளது?

    இது, இணையவெளியில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் மீது மேற்கொள்ளப்படும் பாரபட்சமான தணிக்கை மற்றும் ஒடுக்குமுறை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.” என பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து பாஜக எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை.

  17. புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய கும்பல் - இந்த வைரல் நடிகை மீண்டது எப்படி?

  18. "வாழ்த்துகள்பா" - விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து

  19. காணொளி: திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் விலகினோமா? - செல்வப்பெருந்தகை பதில்

  20. திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் விலகினோமா? - செல்வப்பெருந்தகை பதில்

    திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் காங்கிரஸ் விலகியதா என்பதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.