சட்டப்பேரவை சபாநாயகர் ஆனார் ஜேசிடி பிரபாகர்
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வானார்.
ஜேசிடி பிரபாகர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஆவார். சபாநாயகராக ஆவதற்கான வேட்பு மனுவை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் நேற்று அவர் வழங்கினார்.
வேறு யாரும் போட்டியிடாத சூழலில் அவர் இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அவரது இருக்கையில் அமரவைத்தனர்.
அதன்பிறகு, பேரவையின் துணைத் தலைவருக்கான வேட்புமனு சட்டப்பேரவை முதன்மை செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அதன்படி ரவிசங்கர் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்ததாகவும் அமைச்சர் செங்கோட்டையன் வழிமொழிந்ததாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
ரவிசங்கர் தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனு அளிக்காததால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரவிசங்கர் துறையூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவராவார்.