You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
நீட் தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் என்ன நடந்தது?
காணொளி: காஸாவில் சர்வதேச பாலத்தீன மாரத்தான் போட்டி
காணொளி: இலங்கையில் கட்டிலை தூக்கிக்கொண்டு ஓடும் பந்தயம்
அதிமுகவில் ஒரு தரப்பை நேரில் சந்தித்த விஜய் - அடுத்து என்ன?
அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்த விஜய் - என்ன நடக்கிறது?
காணொளி: அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்களை விஜய் சந்தித்தபோது நடந்தது என்ன?
தவெகவின் 'இருமுனை கத்தி' சமூக ஊடக பிரசாரம் ஆட்சியை கைப்பற்ற உதவியதா?
சவாலை சந்திக்க இந்தியர்கள் தயாராக வேண்டுமா? மோதி பேச்சால் எழும் விவாதம்
தவெக அரசு கடனே வாங்காமல் ஆட்சி புரிய முடியுமா? கஜானா காலி என்ற விஜய் கூற்று பற்றிய ஒரு பகுப்பாய்வு
காணொளி: முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது குறித்த ரஜினியின் எதிர்வினை என்ன?
தொங்கு சட்டப்பேரவையில் சவாலான சபாநாயகர் பதவியில் அமர்ந்துள்ள ஜேசிடி பிரபாகரின் பின்னணி.
காணொளி: சட்டப்பேரவை சபாநாயகரானார் ஜேசிடி பிரபாகர்
காணொளி: 'தவெக அரசுக்கு ஆதரவு' - சி.வி.சண்முகம் பேசியது என்ன?
காணொளி: 'நாம் 3 பேரும் ஒரே கல்லூரியில் படித்தோம்' - உதயநிதி பேசியதும் விஜய் புன்னகை
காணொளி: 'திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்றார்' - பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து - தேசிய தேர்வு முகமை கூறியது என்ன?
மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின் பேரிலேயே இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இத்தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Admit Card) வெளியாகும் அட்டவணைகள் ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக வெளியிடப்படும்.
சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தேசிய தேர்வு முகமை, "இப்பிரச்னை குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இத்தேர்வை மீண்டும் எழுதுவதற்கு மாணவர்கள் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; அதற்கெனக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கெனவே செலுத்தியிருந்த தேர்வுக் கட்டணம் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும். மேலும், இத்தேர்வு NTA-வின் சொந்த வளங்களைப் பயன்படுத்தியே நடத்தப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு குறித்து ராகுல் காந்தி கேள்வி
நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, திங்களன்று நீட் தேர்வு குறித்துக் கேள்விகளை எழுப்பினார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் 2026 வினாத்தாள் கசிந்ததாக வந்த செய்தியை நான் அறிந்தேன். இதுவொரு தேர்வு இல்லை; நீட் இப்போது ஒரு ஏலமாக மாறிவிட்டது. தேர்வு தொடங்குவதற்குச் சரியாக 42 மணிநேரத்துக்கு முன்பே, பல கேள்விகள் வாட்ஸ்ஆப் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன." என தெரிவித்துள்ளார்.
"22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், ஓராண்டு முழுவதும் இரவும் பகலும் பாராமல், உறக்கமின்றிப் படித்துத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டனர். ஆனால் ஒரே இரவில், அவர்களின் எதிர்காலம் பகிரங்கமாக ஏலம் விடப்பட்டுள்ளது. இது நடப்பது முதல்முறையல்ல. கடந்த 10 ஆண்டுகளில், 89 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன; 48 முறை மறுதேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் அதே வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன; அதைத் தொடர்ந்து அதே மௌனமே நிலவுகிறது."
ராகுல் காந்தி மேலும் "பிரதமர் மோதி, ஒவ்வொரு தோல்விக்கும் நீங்கள் பொதுமக்களையே குறை கூறுகிறீர்கள் என்றால், அதில் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலமும் அடங்கும். 22 லட்சம் மாணவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் இளைஞர்களின் கனவுகளுக்கு, மோதி அரசை விடப் பெரிய அச்சுறுத்தல் வேறு எதுவும் இருக்க முடியாது." என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பிற தலைவர்களும் இப்பிரச்னை குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
"திமுக ஆதரவோடு முதலமைச்சராக முயன்றார்" - எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
அதிமுகவில் மீண்டும் பிளவா? எடப்பாடி பழனிசாமி மீது எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் அதிருப்தி
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக எம்எல்ஏவுக்கு தடை
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (மே 13) நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு கவனம் பெறுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பது ஒரு அசாதாரணமான சூழ்நிலை என்று வாதிட்டதாக ‘லைவ் லா’ செய்தி தெரிவிக்கிறது.
பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் திரும்பி வந்துவிட்டதாகவும், ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சென்று சேர்ந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களின் பங்கு முடிந்துவிட்டதாகவும், தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் விக்டோரியா கௌரி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்ததாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், “நம்பிக்கை தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம், நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது அவையின் எண்ணிக்கை பலம் குறித்த எவ்வித சோதனைகளிலும் அடுத்த உத்தரவு வரும் வரை சீனிவாச சேதுபதி வாக்கு செலுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இருப்பினும், இந்த உத்தரவு சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்வதாகக் கருதப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த உத்தரவு பெரியகருப்பனைத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்க எந்த உரிமையையும் அளிக்காது என்றும் அது கூறியது.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.