நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 218 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு

பட மூலாதாரம், TWITTER
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கனவே 218 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப். 22) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதனிடையே, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 4 பேர், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 18 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 196 பேர் என, மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என, முன்னதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மேலும், மாநகராட்சி, நகராட்சிகளில் தலா 1, பேரூராட்சியில் 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.




