நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி.
இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.
இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.
- யுக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோஃப், யுக்ரேனின் விமான போக்குவரத்து இப்போது வரை செயல்பட்டு வருகிறது என்றும் 10 விமான நிறுவனங்கள் அவற்றின் விமான சேவைக்கான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
- கடந்த மாதம் அரியலூர் மாணவி உயிரிழந்த வழக்கில், சிபிஐ ஐ.ஜி வித்யா குல்கர்னி தலைமையில், எஸ்பி, டிஎஸ்பி உட்பட சுமார் 10 அதிகாரிகள் கொண்ட குழு இன்று முதல் விசாரணையை தொடங்கினார்கள்.
- கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க இலங்கையைச் சேர்ந்த 50 பேர், இந்தியாவைச் சேர்ந்த 50 பேர் என மொத்தம் 100 பேர் மட்டும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
- பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீதான ஐந்தாவது ஊழல் ஊழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 60 லட்சம் அபராதமும் விதித்து ஜார்கண்ட் மாநில தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

















