BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது? எந்தெந்த கட்சிகள் புறக்கணித்தன?
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
'இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி' - அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றம்
அமெரிக்க செனட், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதும் அடங்கும்.
'கைதானவர் சிறையில் உயிரிழப்பு... சிகிச்சையில் அதிகாரி' - பழனி நில விவகாரத்தில் என்ன நடக்கிறது?
பழனியில் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு மதுரை சிறையில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடன் மோதல் வெடித்தால் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் பற்றிய பார்வை
சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை சௌதி அரேபியாவின் மெக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதன்படி, இந்தியாவுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் ஒரு பார்வை
ஏ.ஐ மூலம் முதல் முறையாக புதிய வைரஸ்கள் உருவாக்கப்பட்டது ஏன்?
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முற்றிலும் புதிய வைரஸ்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் ஆய்வகத்தில் செயல்படக்கூடியவையாகவும், தங்களைத் தாங்களே பெருக்கிக்கொள்ளக்கூடியவையாகவும் உள்ளன.
'நான் கர்ப்பமாக இருப்பதை எனக்கு முன்பே என் உடல்நல கண்காணிப்பு கருவி கண்டுபிடித்தது'
விடுமுறைக்காக தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ரவிகா, தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, உடல்நல கண்காணிப்பு சாதனத்திலிருந்து எதிர்பாராத ஒரு செய்தியை பெற்றார்
மாநிலக் கட்சிகளில் முதலிடம்: திமுகவுக்கு ஓராண்டில் ரூ.365.78 கோடி நன்கொடை வந்தது எப்படி?
இந்தியாவில் 2024-25ஆம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. திமுகவுக்கு ஓராண்டில் ரூ.365.78 கோடி நன்கொடை வந்தது எப்படி? அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளன?
எவரெஸ்டில் 30 ஆண்டாக உள்ள இந்தியர் உடலை கீழே கொண்டு வருவது ஏன் சவாலானது? குடும்பம் கூறுவது என்ன?
‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது. இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
ரூ. 2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? மத்திய அரசு நடவடிக்கையால் எழும் ஊகம்
பணம் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மசோதா வியாழன் அன்று மக்களவையில் நிறைவேறியது. அதன்படி, ரூ. 2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா?
ஹிட்லரை சந்தித்தவர்: 'இந்தியாவின் எடிசன்' ஜி.டி.நாயுடு வாழ்க்கையை காட்டும் 'ஜிடிஎன்' எப்படி உள்ளது?
கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, சுதந்திரத்துக்கு முன்பே, பலவிதமான கண்டு பிடிப்புகளால் இந்தியாவின் எடிசன் (Edison of India) என்றும், அற்புத மனிதர் (Miracle Man) என்றும் போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான (பயோபிக்) ஜிடிஎன் (GDN) ஆகஸ்ட் 7 அன்று திரையில் வெளியாகியிருக்கிறது.
குருவாயூர் கோயில், சிருங்கேரி மடத்திற்கு வாரி வழங்கிய திப்பு சுல்தான் மீது 'மத வெறியர்' முத்திரை விழுந்த கதை
திப்பு ஒரு கொடுங்கோலன், மத வெறியன் என 1784-வரை ஆங்கிலேயர்களால் சித்தரிக்கப்படவில்லை. இந்தியாவில் பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக எண்ணியிருந்த ஆங்கிலேயர்கள் திப்புவின் பிரெஞ்சுக்காரர்களுடனான தொடர்பால் அச்சுற்றனர். எனவே ஆங்கிலேயர்களுக்கு திப்புவே பிரதான எதிரியாகத் தெரிந்தார்.
கேரளா: இரட்டையரை மணந்த இரட்டை சகோதரிகள் - பாதிரியாரும் இரட்டையராக அமைந்த சுவாரஸ்யம்
இரட்டையர்கள், இரட்டையர்களை திருமணம் செய்துகொள்வது என்பது புதிதல்ல. ஆனால், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அகில் தாமஸ்- நிகில் தாமஸ் என்ற இரட்டையர்கள், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மேகி மேரி- மரியா மேரி என்ற இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்துகொண்டது சமூக ஊடகங்களில் வைரலானது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ரூ.10,000 கடனால் கொத்தடிமை ஆனேன்': நாமக்கல் அருகே தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த 26 பேர் மீட்பு
நாமக்கல் கரும்புத் தோட்டங்களில் தாங்கள் வாங்கிய சிறு கடனுக்காக ஊதியமின்றி கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 பழங்குடிக் குடும்பங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஊதியமின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு பல்வேறு அனுபவித்த இன்னல்களை அனுபவித்தர்களின் தற்போதைய நிலை என்ன?
'அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி': நிபுணர்கள் கூறும் நடைமுறை சவால்கள்
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாக நிபுணர்கள் கூறுவது என்ன?
அதிக கட்டணம் வந்திருந்தால் மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி?
"வழக்கமாக எனக்கு இரு மாதங்களுக்கு 4,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வரும். இப்போது இருமடங்கு, அதாவது 8,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்துள்ளது. திடீரென இவ்வளவு உயர்ந்தது ஆச்சர்யமாக உள்ளது. எப்படி புகார் அளிப்பது என தெரியவில்லை."
புதுக்கோட்டை அருகே சாதிய தீண்டாமையா? ஆதி திராவிடர் வழிபாட்டு உரிமை தொடர்பாக மோதல் - பதற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆதிதிராவிட மக்களுக்கு மண்டகப்படி வழங்க மறுத்த காரணத்தால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருவிழா நிறுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலவரம் என்ன?
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையுமா? திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதிலால் எழும் கேள்விகள்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
'25 கிலோ அரிசி மூட்டை ரூ.2,000' - தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவையில் சிறு வயதில் தொலைந்த மகனை 23 ஆண்டு கழித்து பஞ்சாபில் இளைஞராக மீட்ட தாய் நெகிழ்ச்சி
23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தனது மகன் பிரகாசத்தை பஞ்சாப் மாநிலத்தில் சந்தித்த தாய் சுந்தரி, இன்று (ஜூலை 30) அவருடன் கோவைக்கு திரும்பினார்.
'மொட்டை அடித்தால் ரூ.15,000': சேலத்தில் 3 பெண்களை நூதன முறையில் ஏமாற்றிய நபர் - என்ன நடந்தது?
"புதிய வகை தொற்றுநோய் பரவி வருகிறது. தலைமுடி வழியாக நோய் பரவுவதால் மொட்டை அடித்தால் தமிழக அரசு ரூ.15,000 வழங்கும்" என்று கூறி வந்த ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மூன்று பெண்கள் மொட்டையடித்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீரஜ் சோப்ராவை முந்தி தங்கம் வென்ற இலங்கை வீரர் - கிரிக்கெட்டை விட்டு ஈட்டி எறிதலுக்கு மாறிய அவர் யார்?
"பயிற்சியாளர் டோனி தான் எனக்கு ஈட்டி எறிதலை அறிமுகப்படுத்தினார். அடிப்படை நுட்பங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டு, அதில் உறுதியாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அதற்குப் பலன் கிடைக்கும் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் எனக்குப் பயிற்சியாளர் மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்குக் கற்றுத் தருகிறார்"
'துணை ராணுவத்தை அழைக்கலாம்': உச்ச நீதிமன்ற உத்தரவால் மேகமலை கிராமங்கள் கவலை - பின்னணி என்ன?
"இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?"
பெண்களை அதிகம் பாதிக்கும் பித்தப்பை கற்கள் உருவாவது எப்படி? அறிகுறி, சிகிச்சை உள்பட 14 முக்கிய விஷயங்கள்
பித்தப்பை கற்கள் என்பது உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட இரைப்பை குடல் நோயாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கும் பல ஆண்டுகளுக்கு அதன் அறிகுறிகளே இருக்காது. ஆனால் சிலருக்கு அது கடுமையான வலி, தொற்று, மஞ்சல் காமாலை மற்றும் கணைய அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
'தூத்துக்குடி அருகே சுமார் 200 ஏக்கரில் பழங்கால சங்கு ஆலை' - புதிய கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுவது ஏன்?
தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில், அப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான பண்டைய சங்கு தொழிற்சாலை ஒன்று இயங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































