You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு எப்போது? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு?

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு இன்னும் 2 தொகுதிகளுக்கு முடிவு, இன்று அறிவிக்கப்படவுள்ளது. எனவே கள நிலவரம் குறித்த அண்மைய தகவல்களை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி, பிபிசி தமிழ் பக்கத்தில் சந்திப்போம்: https://bbc.com.im/tamil%3C/span%3E%3C/span%3E%3C/h3%3E%3Cdiv class="css-cuu7rs">

    நேற்று மே 2 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தமிழ்நாடு, புதுவை தேர்தல் முடிவுகள் குறித்த நேரலைப் பக்கத்தை பிபிசி தமிழ் நடத்திக்கொண்டிருந்தது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான நிலையில் இந்த நேரலைப் பக்கத்தை நிறைவு செய்கிறோம். தேர்தல் முடிவுகள் குறித்த புதிய கோணங்கள், பார்வைகள், விமர்சனங்கள், மேலதிகச் செய்திகளை தனிச்செய்தியாக தொடர்ந்து வெளியிடுகிறோம். அவற்றை நேயர்கள் பிபிசி தமிழின் முகப்புப் பக்கத்தில் தொடர்ந்து காணலாம். முகவரி: https://bbc.com.im/tamil%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3Cdiv dir="ltr" class="css-1k9op6x e17x9cvu0">

    இணைந்திருந்த நேயர்களுக்கு பிபிசி தமிழின் மனமார்ந்த நன்றி.

  • எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதி, வாக்கு?

    தமிழ்நாடு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முற்றிலும் முடிந்து 234 தொகுதிகளுக்குமான முடிவுகள் முழுவதையும் தேர்தல் ஆணையம் தமது முடிவுகள் தளத்தில் வெளியிட்டுவிட்டது. எல்லா தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையத் தளம் வெளியிடுவதற்கு திங்கள்கிழமை மாலை ஆகிவிட்டது. இந்த இறுதித் தரவுகளின்படி திமுக 133 இடங்களைப் பெற்றுள்ளது. இதில், திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் அடக்கம்.திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 இடங்களும் பெற்றன. மொத்தம் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது.

    அதிமுக 66 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வென்றுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் பதிவான வாக்குகளில் திமுக 37.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 4.27 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.09 சதவீத வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 0.85 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. அதிமுக 33.3 சதவீத வாக்குகளையும், பாட்டாளி மக்கள் கட்சி 3.8 சதவீத வாக்குகளையும், பாரதிய ஜனதா கட்சி 2.62 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. அங்கீகரிக்கப்படாத பிற கட்சிகள் எல்லாம் சேர்த்து 14.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் (நோட்டா) சதவீதம் 0.75.

  • எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

  • புதுச்சேரியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி

  • புதுச்சேரியில் அமைச்சரவை குறித்து மூன்று நாட்களில் முடிவு

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து பாஜக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சி மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைச்சரவை அமைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைப்பதற்காக அடுத்த மூன்று தினங்களுக்குள் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் முதல்முறையாக அமைச்சரவையில் பாஜக இடம் பெறுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு இடம் கூட பாஜக பெறவில்லை என பாஜகவை விமர்சித்த காங்கிரஸ் இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். பூஜ்ஜியத்திலிருந்த பாஜக இன்று அமைச்சரவையில் இடம் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளது. புதுச்சேரியை முன்னணி மாநிலமாக மாற்றுவோம். இந்த தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி, ரங்கசாமி தலைமையில் தான் சந்தித்தோம். இந்த கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து யார் முதல்வர் என்று இன்று அல்லது நாளைக்குள் முடிவெடுக்கப்படும். இதையடுத்து அமைச்சரவை அமைப்பதற்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்குள் ஆளுநரை சந்திப்போம்," என்று பாஜக புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

  • மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவுக்கு எப்படி உதவும்?

  • தமிழ்நாடு தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறார்கள் இலங்கை தமிழர்கள்?, இணைந்து பயணிக்க விரும்புவோர் என்ன சொல்கிறார்கள்?

    திமுக ஆட்சி எப்படி இருக்கும், எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து இலங்கைத் தமிழர்களில் பல்வேறு தரப்பினரும் கூறுவது என்ன? தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் குறித்த அவர்கள் பார்வை என்ன? விருப்பார்வங்கள் என்ன? விரிவாகப் படிக்க...

  • கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற பின் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணாதுரை ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

  • மு.க. ஸ்டாலின் பதவிப் பிரமாணம் எங்கே, எப்போது?

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை தி.மு.க. கைப்பற்றியிருக்கும் நிலையில், புதிய முதல்வர் பதவியேற்கும் நிகழ்வு மிக எளிமையாக, ஆளுநர் மாளிகையிலேயே நடக்குமென அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

    சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற மு.க. ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு அதற்கான சான்றிதழைப் பெற்றார். அதற்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    இதற்குப் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "10 ஆண்டு காலமாக தமிழ்நாடு ஒரு பாதாளத்திற்குப் போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து, அறிந்து, அதை சரிசெய்ய தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்போடு இந்த வெற்றியைத் தந்திருக்கிறார்களோ, எந்த நம்பிக்கையோடு இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்களோ நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் அந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களுடைய ஆட்சி நிச்சயம் அமையும்" என்றார்.

    மேலும், "அவர் (மு. கருணாநிதி) இருந்த காலத்திலேயே தி.மு.க. ஆறாவது முறையும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணியிருந்தோம். அது ஏக்கமாகவே போய்விட்டது. இன்று அந்த ஏக்கம் ஓரளவுக்கு நீங்கியிருக்கிறது. மக்கள் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, எங்களுக்கு வாக்களத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து எங்கள் பணி அமையும். என்னென்ன பணிகளைச் செய்வோம் என்று வாக்களித்திருக்கிறோமோ பதவியேற்றதிலிருந்து ஒவ்வொன்றாக அவற்றை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்வோம். தொலைநோக்குத் திட்டத்தில் சொல்லப்பட்டவற்றையும் நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றும் தெரிவித்தார்.

    பதவியேற்பு எப்போது?

    பதவியேற்பு விழா எப்போது நடக்குமெனக் கேட்டபோது, "இன்னும் பல தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் சான்றிதழைக்கூட பெற முடியாத நிலை இருக்கிறது. இன்று இரவோ, நாளை காலையோதான் இவையெல்லாம் முடிவடையும். அவையெல்லாம் பெற்ற பிறகு, நாளை மறுநாள் தேர்வுசெய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டி, முறையாக தலைவரைத் தேர்ந்தெடுத்து அதற்குப் பிறகு அரசு அதிகாரிகளோடு கலந்து பேசி, எப்போது பதவிப்பிரமாணம் செய்வது என்பதை அறிவிப்போம்.இப்போது கொரோனா காலம். அதை மனதில் வைத்து பதவிப் பிரமாணம் நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்தாமல், எளிமையாக ஆளுநர் மாளிகையிலேயே நடத்த முடிவுசெய்திருக்கிறோம். அது எந்தத் தேதி என்பதை, நாளையோ நாளை மறுநாளோ அறிவிப்போம்" என்று தெரிவித்தார் மு.க. ஸ்டாலின்.

  • "உங்கள் ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை", எடப்பாடியிடம் ஸ்டாலின் - நாகரிக அரசியல் மலர்கிறதா?

    முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் தெரிவித்தார் வெளியேறுகிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    அதை ஏற்றுக்கொண்டு ட்விட்டர் மூலமே அவருக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின், மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்தவரை மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களைப் பார்த்தாலே, சிரித்தாலே நடவடிக்கை பாயும் என்ற அச்ச நிலை அதிமுகவில் நிலவியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அந்த இறுக்கம் குறைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்க உள்ள நிலையில் எடப்பாடி - ஸ்டாலின் ஆகிய இரு தலைவர்களும் இப்படி நாகரிக அரசியலை முன்னெடுத்துள்ளது அந்த திசையில் தமிழ்நாடு இன்னும் சற்று முன்னோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையை பலருக்கும் விளைவித்துள்ளது. சமூக ஊடகங்களில் இது நேர்மறையாக விவாதிக்கப்படுகிறது.

  • வெற்றி, தோல்வி அடைந்த அமைச்சர்களின் முழு விவரம்

  • இந்திய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் தமிழக ஹேஷ்டேகுகள் #Annamalai, #ResignStalin

    இந்திய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் தமிழக ஹேஷ்டேகுகள் #Annamalai, #ResignStalin என தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான சில ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன. கோவையில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றதற்கு கோவை மக்கள் தவறாக வாக்களித்து விட்டார்கள் என அம்மக்களை விமர்சிக்கும் வகையிலும், சென்னை முழுக்க திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததால், சென்னை மக்களை விமர்சிக்கும் வகையிலான ஹேஷ்டேகுகளும் இந்திய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.

    குறிப்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வெற்றி பெறாததை விமர்சித்தும், அவரை ஆதரித்தும் ட்வீட்டுகள் ஹேஷ்டேகுகளோடு பதிவிடப்பட்டு வருகின்றன.

    திமுக தலைவர் மு க ஸ்டாலின் மே 7-ம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள்ளாகவே ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவரது கட்சியை விமர்சித்தும் #ResignStalin டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.

  • தமிழக அரசின் ஆலோசகர், அரசு தலைமை வழக்கறிஞர் ராஜிநாமா

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம், அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட விஜய் நாராயணன் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

    பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசுகள், இதுபோன்ற பதவிகளை அவற்றின் அதிகாரத்துக்கு உட்பட்டு அரசியல் நியமனங்களாக மேற்கொள்ளும். அந்த வகையில் ஒப்பந்த அடிப்படையில் அரசின் ஆலோசகர் பதவிக்கு சண்முகம் நியமிக்கப்பட்டார். சட்ட அனுபவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் வழக்கறிஞர் விஜய் நாராயணன் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தமது ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிய அடுத்த சில நிமிடங்களில் சண்முகமும் விஜய் நாராயணனும் தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

  • மு.க. ஸ்டாலினுடன் அரசு தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் சந்திப்பு

    தமிழ்நாட்டில் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைவதையடுத்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் திங்கட்கிழமை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை சேலத்தில் இருந்தபடி அவர் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த நிலையில், தலைமை செயலாளரும் ராதாகிருஷ்ணனும் மு.க. ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்கள்.

    இந்த சந்திப்பு முதலில் ஒன்றாகவும் பிறகு தனித்தனியாகவும் நடந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அரசு அமைவதற்கான ஏற்பாடுகள், பதவி ஏற்பு நிகழ்வுக்கான உத்தேச தேதி குறித்து ஸ்டாலினுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதேவேளை, ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று சூழல் குறித்து விளக்கியதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

  • தமிழகத்தில் 9 தொகுதிகளின் முடிவுகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை

    திமுக 126 இடங்களில் வென்று 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 64 இடங்களில் வென்று 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 9 இடங்களில் இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    அதிமுக முன்னிலை வகிக்கும் தொகுதிகள்:

    தொண்டாமுத்தூரில் கிராம புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சுமார் 42,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

    விராலிமலையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சுமார் 22,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறார்.

    திமுக முன்னிலை வகிக்கும் தொகுதிகள்:

    பல்லாவரம் தொகுதியில் கருணாநிதி சுமார் 34,000 வாக்குகளும், தாம்பரம் தொகுதியில் எஸ் ஆர் ராஜா சுமார் 35,000 வாக்குகளும், மதுரவாயலில் கணபதி சுமார் 30,000 வாக்குகளும் கூடுதலாகப் பெற்றிருக்கிறார்கள்.

    ஆலந்தூரில் டி எம் அன்பரசன் சுமார் 39,000 வாக்குகளும், பெரியகுளம் தொகுதியில் கே எஸ் சரவணகுமார் சுமார் 19,500 வாக்குகளும், சோழிங்கநல்லூரில் அர்விந்த் ரமேஷ் சுமார் 35,000 வாக்குகளும், சைதாப்பேட்டையில் மா சுப்ரமணியன் சுமார் 29,000 வாக்குகளும் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கிறார்கள்.

  • பாஜகவில் நான்கு பேர் வெற்றி

    நீண்ட நேரமாக இழுபறியில் இருந்த நாகர்கோயில் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.

    பாஜகவின் எம் ஆர் காந்தி திமுகவின் சுரேஷ் ராஜனை விட சுமார் 12,000 வாக்குகள் அதிகம் வாங்கியதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆக மொத்தம் பாஜக இந்த தேர்தலில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வென்று இருக்கிறது.

    கோவை தெற்கு - வானதி ஸ்ரீனிவாசன்

    நாகர்கோயில் - எம் ஆர் காந்தி

    திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

    மொடக்குறிச்சி - சி சரஸ்வதி

    ஆகிய பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முதல்வர் பதவியிலிருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எடப்பாடி பழனிசாமி

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் முதல்வர் பதவியிலிருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி இருப்பதாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  • அதிமுகவில் பாதி அமைச்சர்கள் மட்டுமே கரை சேர்ந்தனர்

    தமிழக அமைச்சரவையில் மொத்தம் 30 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அவர்களில் நிலோஃபர் கஃபீல் (தொழிலாளர் துறை அமைச்சர்), ஜி பாஸ்கரன் (காதி மற்றும் கிராம தொழிற்சாலை அமைச்சர்), எஸ் வளர்மதி (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மைனாரிட்டி நலன் அமைச்சர்) ஆகியோருக்கு இந்த முறை தேர்தலில் நிற்க அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.

    மீதமுள்ள 27 அமைச்சர்களில் 16 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள் அல்லது முன்னிலையில் இருக்கிறார்கள். மீதமுள்ள 11 அமைச்சர்கள் தோல்வியடைந்து இருக்கிறார்கள் அல்லது பின்னடைவில் இருக்கிறார்கள் என தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன.

    வெற்றி பெற்ற அதிமுக அமைச்சர்கள் அனைவரும் கடந்த 2016 தேர்தலிலும் அதே தொகுதியில் நின்று வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மு .க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி

  • சென்னையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

    சென்னையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    திமுக எம்எல்ஏக்கள் கூடி கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மு.க. ஸ்டாலினை தேர்வு செய்யும் நடைமுறைகளை அந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

    அதன் பிறகு திமுக எம்எல்ஏக்கள் பலத்தை நிரூபிக்கும் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை மு.க. ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் அளிப்பார் என்றும் அதைத்தொடர்ந்து புதிய அரசின் பதவியேற்பு தொடர்பான தேதி தெரிய வரும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.