இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம்: இந்த படங்கள் உங்களை பாதிக்கலாம்

டெல்லியில் ஒரு மயானத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை எரியூட்டும் காட்சி

பட மூலாதாரம், DANISH SIDDIQUI / REUTERS

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3.6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3,293 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், இறந்தவர்களின் உடல்கள் எப்படிப்பட்ட சூழலில் எரியூட்டப்படுகின்றன என்பதை விவரிக்கும் இந்த படங்களுக்கு படவரிகள் அவசியமில்லை.

அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பிபிஇ கிட் அணிந்து கொண்டு தன் உறவினருக்காக மயானத்தில் விறகு சேகரிக்கும் குடும்பௌறுப்பினர்.

பட மூலாதாரம், NAVEEN SHARMA/SOPA IMAGES/SHUTTERSTOCK

சடலங்களைக் கடந்து செல்லும் சுகாதாரப் பணியாளர்

பட மூலாதாரம், ADNAN ABIDI / REUTERS

சடலங்களை ஒன்றாக எரியூட்ட தயார்படுத்தும் மக்கள்

பட மூலாதாரம், ADNAN ABIDI / REUTERS

இந்தியாவில் சில மயானங்களில் 24 மணி நேரமும் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.

பட மூலாதாரம், COPYRIGHTDANISH SIDDIQUI / REUTERS

இடைவெளி இன்றி பணியாற்று மயானப் பணியாளர்கள்

பட மூலாதாரம், COPYRIGHTADNAN ABIDI / REUTERS

டெல்லிக்கு அருகில் சடலங்களை ஒன்றாக எரியூட்டிய காட்சி

பட மூலாதாரம், DANISH SIDDIQUI / REUTERS

ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்ளும் காட்சி

பட மூலாதாரம், ADNAN ABIDI / REUTERS

இறந்த தங்கள் உறவினர்களை எரியூட்ட பல மணி நேரம் காத்திருக்கும் உறவினர்கள்

பட மூலாதாரம், COPYRIGHTADNAN ABIDI / REUTERS

இறந்தவர்களின் உறவினர்கள் எரியூட்டப்பட்ட இடத்திலேயே கண்ணீர் விடும் காட்சி

பட மூலாதாரம், COPYRIGHTADNAN ABIDI / REUTERS

பிணங்கள் எரிந்து முடிந்த பின் மயானத்தில் புகை விலகும் காட்சி

பட மூலாதாரம், ADNAN ABIDI / REUTERS

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரத்தில், ஹிண்டன் சுடுகாட்டில் எரியூட்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் சடலங்கள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் தவிக்கும் பெண் ஒருவருக்கு, காசியாபாத்தில் இருக்கும் குருதுவாராவில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்ட போது அப்பெண் நன்றி தெரிவிக்கும் படம்.

பட மூலாதாரம், Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: