சந்திர பிரபா சைக்கியானி: பெண்களுக்கு திரைபோடும் வழக்கத்தை ஒழித்து ஒளி பாய்ச்சிய போராளி
(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரம்மிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் மூன்றாவது அத்தியாயம் இது.)
அஸ்ஸாமை சேர்ந்த, ஆணித்தரமாக பேசும் வல்லமை கொண்ட சந்திரப்பிரபா சைக்கியானி, 1901 ஆம் ஆண்டு, மார்ச் 16 ஆம் தேதி, காம்ரூப் மாவட்டத்தின் தோயிசிங்காரி கிராமத்தில் பிறந்தார்.
பெண்கள் கல்வி கற்க வலியுறுத்திய அவர், தனது 13 வயதில் ஆரம்ப பள்ளியை திறந்தார்.
பெண்களின் கல்விக்காக போராடிய அவர்,பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
அஸ்ஸாமில் அப்படி செய்த முதல் பெண் சந்திர பிரபா சைக்கியானி.
இவரை பற்றி நீங்கள் மேலும் இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த செய்தியின் கட்டுரை வடிவம்: சந்திர பிரபா சைக்கியானி: அஸ்ஸாமில் திரையிடும் வழக்கத்தை நீக்கிய போராளி
வரலாற்றில் பெண்கள் தொடரின் பிற அத்தியாயங்கள்:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: