அதிமுக தலைமை இனி ஈபிஎஸ் வசம்: ஓபிஎஸ், சசிகலாவுக்கு முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?

பிரசுரிக்கப்பட்டது

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதிமுகவை தீர்மானகரமாக எடப்பாடி முகாமின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது என்பது பொதுவான பார்வையாக உள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி அணியால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்துக்குப் பிந்தைய அரசியல் நிகழ்வுகளில், முன்பே கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் ஆகியோர் முன்பு உள்ள அரசியல் வாய்ப்புகள் என்ன என்ற கேள்வி எழுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: