"மக்களின் நம்பிக்கையே இந்த வெற்றி" - டெல்லியில் நரேந்திர மோதி உரை

மத்திய, மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த ஆட்சி நிர்வாகம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த வெற்றி என்று கூறியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. “நான் தீவிரவாதி அல்ல, இந்த நாட்டின் உண்மையான மகன் என நிரூபணமாகியுள்ளது”: கேஜ்ரிவால்

    அரவிந்த் கேஜ்ரிவால்

    பட மூலாதாரம், @ArvindKejriwal

    பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசியபோது, பஞ்சாப் மக்கள் அதிசயங்களை நிகழ்த்தியிருப்பதாக தெரிவித்தார்.

    “பஞ்சாபில் பெரிய தலைவர்களின் நாற்காலிகள் அசைக்கப்பட்டுள்ளன. கேப்டன் (அமரிந்தர் சிங்), சுக்பீர் சிங் பாதல், பர்காஷ் சிங் பாதல், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தோல்வியடைந்துவிட்டனர். சுதந்திரத்திற்கு பின்னர் இந்த அமைப்பு மாறாவிட்டால், எதுவுமே மாறாது என பகத் சிங் ஒருமுறை தெரிவித்தார்” என அவர் தெரிவித்தார்.

    மேலும், “கடந்த 75 ஆண்டுகளாக இந்த அமைப்பு மாறவில்லை. மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக இவர்கள் வைத்திருந்தனர். நேர்மையான அரசியலை நாங்கள் தொடங்கினோம். பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் கனவுகள் நனவாகியுள்ளது. நாட்டை முன்னேற விடாமல் தடுக்கும் பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்து உள்ளன. அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் பெரிய சதிகளை தீட்டி கேஜ்ரிவால் தீவிரவாதி என்று கூறினார்கள். இந்த முடிவுகள் மூலம், கேஜ்ரிவால் தீவிரவாதி அல்ல, இந்த நாட்டின் உண்மையான மகன், நாட்டுப்பற்று உடையவன் என இந்த நாடு தெரிவித்துள்ளது” என கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. உத்தராகண்டில் பெரும் வெற்றியை நோக்கி பாஜக – 47 இடங்களில் முன்னிலை

    உத்தராகண்ட்

    பட மூலாதாரம், ANI

    உத்தராகண்ட் மாநிலத்தில் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில், பாஜக 47 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

    தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பகுஜன் சமாஜ்வாதி கட்சி 2 இடங்களிலும், இரண்டு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.

    உத்தராகண்ட் தேர்தல்

    பட மூலாதாரம், Election commission

    தற்போதைய நிலவரப்படி, பாஜக 44 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. 39 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெறும். 5 சதவீத வாக்குகளை பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் 3.5 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சியும் பெற வாய்ப்புள்ளது.

  3. “இனி கிராமங்களிலிருந்து பஞ்சாப் ஆளப்படும்”: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்

    அரவிந்த் கேஜ்ரிவால் / பகவந்த் மான்

    பட மூலாதாரம், Getty Images

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. இது வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான தீர்ப்பு என, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    தான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராவேன் என தெரிவித்த அவர், தனது அரசாங்கம் தங்களுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்களுக்கு இடையே எவ்வித வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் எனக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் தவறான வார்த்தைகளை உபயோகித்தனர். அவர்களை மன்னியுங்கள், ஆனால், மூன்றரை கோடி பஞ்சாப் மக்களை அனைவரும் மதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

    “நாம் அனைவரும் இணைந்து பஞ்சாப் மாநிலத்தை ஆட்சிசெய்ய வேண்டும். பெரிய கதவுகள் கொண்ட வீடுகளிலிருந்து பஞ்சாப் அரசாங்கம் முன்பு நடத்தப்பட்டது. ஆனால், இன்று முதல் கிராமங்கள், வார்டுகள், நகரங்களிலிருந்து பஞ்சாப் ஆளப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. “இன்னும் 60% வாக்குகள் எண்ணப்பட வேண்டும்”: கட்சியினர் கண்காணிப்புடன் இருக்க சமாஜ்வாதி அறிவுறுத்தல்

    அகிலேஷ் யாதவ்

    பட மூலாதாரம், Getty Images

    உத்தர பிரதேச தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைத் தாண்டி, பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 இடங்களுக்குமான முன்னிலை விவரங்கள் வெளிவந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, பாஜக 255 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி 116 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

    இது தொடர்பாக, சமாஜ்வாதி கட்சி தன் டிவிட்டர் பக்கத்தில், “100 இடங்களில் முன்னிலை வித்தியாசம் 500 வாக்குகள் என்ற அளவில் உள்ளது. கட்சி பணியாளர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டும். சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி வேட்பாளர்களின் முன்னிலை விவரம் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மிகவும் மெதுவாக பதிவேற்றப்படுகிறது. அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் உடனடியாக பதிவேற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளது.

    மற்றொரு பதிவில், “இன்னும் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்பதை சமாஜ்வாதி கட்சியினர் கருத்தில்கொள்ள வேண்டும். இறுதி முடிவுகள் வரும்வரை கவனமாக இருக்க வேண்டும். சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி வேட்பாளர்களின் இடங்களில் வாக்குகள் ஏன் மெதுவாக எண்ணப்படுகின்றன? தேர்தல் ஆணையம் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் முதல்வர் 'மகாராஜா' ஆக மாறியது எப்படி?

      • எழுதியவர், திவ்யா ஆர்யா
      • பதவி, பிபிசி செய்தியாளர்
    யோகி ஆதித்யநாத்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    கோரக்பூரின் மூத்த பத்திரிகையாளரான மனோஜ் சிங் அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து, "முதல்வர் அங்கு வந்தவுடன், அரங்கில் பேசிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, "பாருங்கள், நம்முடைய முதல்வர் வந்து விட்டார்; நம்முடைய கடவுள் வந்துவிட்டார்", என்று கோஷமிட்டனர்," என்று கூறுகிறார்.

  6. பிரதமர் பதவிக்கு தகுதியுள்ள நபரா யோகி ஆதித்யநாத்? – ஹேமமாலினி பதில்

    ஹேமமாலினி

    பட மூலாதாரம், Getty Images

    உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்துவருகிறது. இந்நிலையில், மதுரா பாஜக எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினி, உத்தர பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    என்டிடிவி தொலைக்காட்சிக்கு ஹேமமாலினி அளித்த பேட்டியில், யோகி ஆதித்யநாத், பிரதமர் பதவிக்கு தகுதியுள்ள நபரா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹேமமாலினி, “இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலாது. ஆனால், இருவரும் (யோகி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி) சிறந்த மனிதர்கள்” என தெரிவித்தார்.

  7. உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 2ஆவது முறையாக வெற்றியை நோக்கி பாஜக; இது சாத்தியமானது எப்படி?

    பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவர் வானதி சீனிவாசனுடன் டெல்லியில் இருந்து நேரலை

  8. ஆம் ஆத்மி தேசிய அரசியலில் முன்னேறுவதாக கட்சி தலைவர்கள் மகிழ்ச்சி

    சஞ்சய் சிங்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சஞ்சய் சிங்

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை நோக்கி செல்கிறது.

    மாற்று அரசியலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது எனவும், கேஜ்ரிவால் அரசியலை மக்கள் விரும்புவதாகவும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுள் ஒருவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பஞ்சாப் மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சி தற்போது நாட்டிலேயே நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது எனவும், அக்கட்சி இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    தேசிய அரசியலை நோக்கி ஆம் ஆத்மி கட்சி உறுதியுடன் முன்னேறும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

    அரவிந்த் கேஜ்ரிவாலின் திட்டங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளதாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் இழுபறியில் உள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமாக 117 இடங்கள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலி தளம் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  9. "பஞ்சாப் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்": நவ்ஜோத் சிங் சித்து

    பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியமைக்க 59 இடங்கள் தேவை. இந்நிலையில், பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களைத் தாண்டி 91 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

    இந்நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என பதிவிட்டுள்ளார்.

    பஞ்சாப் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. உத்தராகண்ட்: பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைத் தாண்டி பாஜக முன்னிலை

    உத்தராகண்ட் தேர்தல்

    உத்தராகண்ட் மாநிலத்தில் நண்பகல் 12:30 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு ஆட்சியமைக்க 36 இடங்களே தேவையான நிலையில், அதற்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

    அதேவேளையில், காங்கிரஸ் கூட்டணி 22 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

  11. “புரட்சிக்கு வித்திட்ட பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துகள்”: அரவிந்த் கேஜ்ரிவால்

    அரவிந்த் கேஜ்ரிவால்

    பட மூலாதாரம், bbc

    பஞ்சாப் மாநிலத்தில் தற்போது 90 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. அங்கு ஆட்சி அமைக்க 59 இடங்களே தேவை. இந்நிலையில், பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், தன் டிவிட்டர் பக்கத்தில், “புரட்சிக்கு வித்திட்ட பஞ்சாப் மாநில மக்களுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். அத்துடன், பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் உடனான புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. கோவா: பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக

    கோவா தேர்தல்

    கோவாவில் நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 18 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும் மற்றவை 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  13. பஞ்சாப்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் ஆதரவாளர்கள் சங்ரூரில் அமைந்துள்ள அவருடைய வீட்டின் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. பஞ்சாப்: ஆளும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை

    ஆம் ஆத்மி

    பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத்தள்ளி அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

  15. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: தற்போதைய முன்னணி நிலவரம் என்ன?

    ஆம் ஆத்மி
    படக்குறிப்பு, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம்

    தற்போதைய நிலவரப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 244 இடங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களிலும்மணிப்பூர் மாநிலத்தில் பாஜக கூட்டணி 19 இடங்களிலும் கோவாவில் பாஜக கூட்டணி 19 இடங்களிலும் உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 42 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  16. பகவந்த் மான் அரசியல், கலை வாழ்க்கை வரலாறு: நகைச்சுவை நடிகர் முதல் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் வரை

    BHAGWANT MANN/FB

    பட மூலாதாரம், BHAGWANT MANN/FB

    பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது. தனது நம்பிக்கைக்குரிய தலைவரான பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. அவரது பெயரை கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.

    பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தபிறகு அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஆகியிருக்கும் சர்தார் பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாப் மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கின்றனர். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் எல்லா பஞ்சாபி மக்களின் முகத்திலும் பகவந்த் மான் மீண்டும் புன்னகையை வரவழைப்பார் என்று நான் நம்புகிறேன்,"என்று பதிவிட்டார்.

    பகவந்த் மானை ஒரு நகைச்சுவை நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மக்கள் அறிவார்கள். அவர் பஞ்சாபில் உள்ள சங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.

  17. உத்தர பிரதேச தேர்தல்: பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைத் தாண்டி பாஜக முன்னிலை

    உத்தர பிரதேச தேர்தல்

    காலை 11 மணி நிலவரப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 237 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க 202 இடங்கள் தேவையான நிலையில், பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

  18. மணிப்பூர்: தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக முதல்வர் பிரேன் சிங் கூறியது என்ன?

    பிரேன் சிங்

    பட மூலாதாரம், ANI

    மணிப்பூர் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என, தற்போதைய முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    அவர் அளித்த பேட்டியில், “அமைதி மற்றும் வளர்ச்சியுடன்கூடிய கடந்த 5 ஆண்டு கால ஆட்சியைப் போன்றே வரும் 5 ஆண்டுகளும் இருக்கும். பாஜக அறுதி பெரும்பான்மையுடன் மணிப்பூரில் ஆட்சியமைக்கும்” என தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    தற்போதைய நிலவரப்படி மணிப்பூரில் பாஜக கூட்டணி 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

  19. பஞ்சாபில் முன்னிலை: "மக்கள் விழித்துக்கொண்டனர்” – ஆம் ஆத்மி

    ராகவ் சதா

    பட மூலாதாரம், Getty Images

    பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆரம்பகட்ட நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 86 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிப்பதால் அக்கட்சி தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராகவ் சதா, “பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி மக்கள் விழித்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கான மாற்று ஆம் ஆத்மி கட்சி” என தெரிவித்துள்ளார்.

    “மற்றொரு மாநிலத்தில் நாங்கள் ஆட்சியமைக்கப் போகிறோம் என்பது அல்ல விஷயம், தேசிய அளவில் நாங்கள் ஒரு மாற்றாக வருகிறோம் என்பதுதான் முக்கியம்” என அவர் தெரிவித்துள்ளார்.

  20. கோவா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக கூட்டணி 19 இடங்களில் முன்னிலை

    கோவா தேர்தல்

    கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 19 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும் மற்றவை 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.