10 முக்கிய தகவல்கள்
வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் உருவான நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
நிகர் புயல் குறித்த 10 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிவர் புயல் கடந்த 21ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தி வந்த நிலையில், அது முழுமையாக வியாழக்கிழமை கரையைக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் உருவான நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
நிகர் புயல் குறித்த 10 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி.
எல்லாம் முடிந்த பின் வெட்டப்பட்ட மரங்களை வேறு இடங்களில் நட கோரி ஒருவர் பகிர்ந்த ட்வீட்டிற்கு ‘கண்டிப்பாக தம்பி` என ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மு.க. ஸ்டாலின் சென்னையில் புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதாக திமுக ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செம்பரபாக்கம் ஏரியை பார்வையிட்டு வருகிறார். 12 மணிக்கு இங்கிருந்து 1000 கனஅடி திறக்கப்படப்பட்டது. ஏரி முழு கொள்ளவை எட்டிய உடன் ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குளத்தூர் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் தணிகாசலம் நகர் கால்வாய் வழியாக B - கால்வாய்க்கு வெளியேற்றப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு 1000 கனஅடி திறக்கப்படப்பட்டது. ஏரி முழு கொள்ளவை எட்டிய உடன் ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலால் விழும் மரங்களை அப்புறப்படுத்த, சென்னை மத்திய பகுதி- 3, வடக்கு - 2, தெற்கு - 1 என மொத்தம் 6 மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவர் புயல் தற்போது, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து 220 கிலோமீற்றர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலும் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரதேசங்களுக்கு இடையில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் பிரதேசங்களை அண்மித்து ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றதுநிவர் புயல் சுமார் 120 முதல் 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த புயல் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.நாட்டில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன், சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம், மணிக்கு 80 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரை வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசையிலிருந்து வீசும் என திணைக்களம் தெரிவிக்கின்றது,குறித்த கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றமையினால், கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நண்பகல் 12 மணிக்குள் பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‛நிவர்' அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, புதுச்சேரியில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு அளிப்பதுடன், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கனமழை காரணமாக இன்று நற்பகல் 12 மணியளவில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கும்.
நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 8ஆம் எச்சரிக்கை கூண்டு என்பது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பொருள்.
நிவர் புயல் கடலூரில் இருந்து தென்கிழக்கே 290 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகவும், நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவிலோ, நவம்பர் 26 அதிகாலை நேரத்திலோ தமிழ்நாடு - புதுவை கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அடுத்த 12 மணிநேரங்களில் அது தீவிர புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.