நேஷனல் ஹெரால்டு வழக்கு: மீண்டும் நாளை ஆஜராக சோனியாவுக்கு உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சௌக் பகுதி வரை பேரணியாக செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. நீரஜ் சோப்ராவுக்கு காயம்

    இந்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார் என்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் ராஜிவ் மேத்தா தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதிப்போட்டியின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் விளையாட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, டெல்லியில் ராகுல் காந்தி கைது

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சௌக் பகுதி வரை பேரணியாக செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. திருவள்ளூர் மாணவி மரணம் - உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

    திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட கீழச்சேரி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

    மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மப்பேடு காவல் துறையினர் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

    இதனிடையே காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்தனர். தடயவியல் வல்லுநர் குழுவும் ஆய்வு செய்தது.இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    திருவள்ளூர் சிபிசிஐடி ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் வந்து பள்ளி மற்றும் விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பள்ளி விடுதி காப்பாளர்களிடம் மாணவியின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடலை பெறமாட்டோம்

    இந்நிலையில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிவிரைவு படைப்பு போலீசார் மருத்துவமனை வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மாணவி எப்படி உயிரிழந்தார் என்று முறையாக தெரிவிக்காத வரை நாங்கள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என மாணவியின் அண்ணி ரேவதி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    மாணவியின் அண்ணி ரேவதி
    படக்குறிப்பு, மாணவியின் அண்ணி ரேவதி
  4. திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி

    திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

    44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மதுரையிலிருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பெற்றுக்கொண்டார்.

    அதனை விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், காவலர்கள் உள்ளடங்கிய ஜோதி ஓட்டக் குழுவினரிடம் வழங்கி, திருச்சியில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு ஜோதி ஓட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இந்த ஓட்டம் திருச்சி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வழியாக மன்னார்புரம், ரயில்வே ஜங்சன், மேம்பாலம் ரயில்வே ஜங்சன், தலைமை அஞ்சல் நிலையம், மகாத்மா காந்தியடிகள் சிலை ரவுண்டானா, மாநகராட்சி சாலை, கோர்ட்ரோடு, சாலைரோடு, காவிரிப் பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் முக்கொம்பு வரை சென்று பின்னர் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடையும். அதன்பின்னர், இன்று மாலை இந்த ஜோதி சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    செஸ் ஒலிம்பியாட் ஜோதி
    படக்குறிப்பு, திருச்சி - செஸ் ஒலிம்பியாட் ஜோதி
  5. கள்ளக்குறிச்சி வன்முறையில் விட்டுச்சென்ற 141 வாகனங்களை மீட்க யாரும் வரவில்லை - காவல்துறை

  6. வணக்கம் நேயர்களே!

    ஜூலை 25ஆம் தேதி நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    • குடியரசு தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
    • “ஓபிஎஸ் உடன் சமரச பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது” என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    • கனடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்கள் கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • தேனி மாவட்டத்தில் அரசு நிலங்களை சட்டவிரோதமாக பட்டா போட்டு கொடுத்த வழக்கில் துணை தாசில்தார் மோகன் ராமுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
    • கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை பெண்ணின் தந்தை வெட்டிக் கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளித்தனர்.

    பிபிசியின்டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

  7. வணக்கம் நேயர்களே!

    நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலைப்பக்கத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்