விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. தவெக அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள்

    விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

    பட மூலாதாரம், TVK

    படக்குறிப்பு, விஜயுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, புரொஃபஷனல் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் தவெக அலுவலகத்துக்கு சென்று தற்போது விஜயை சந்தித்துள்ளனர்.

    உடன் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உள்ளனர்.

    தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவு கடிதம் விஜயிடம் வழங்கப்பட்டது.

  2. விஜய்க்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் தரப்பு விளக்கம்

    காணொளிக் குறிப்பு, தவெகவிற்கு ஆதரவு அளிப்பதற்கான காரணத்தை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விளக்கியுள்ளார்.

    தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆதரவளித்தது ஏன் என, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த காணொளியில் கூறியுள்ளார்.

  3. "விஜய் நல்லாட்சி தருவார் என நம்புகிறேன்" - தொல். திருமாவளவன்

    தொல் திருமாவளவன்

    பட மூலாதாரம், THIRUMA OFFICIAL FACEBOOK page

    விஜய் நல்லாட்சி தருவார் என நம்புவதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தொல். திருமாவளவன், "ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு தவெக தலைவர் விஜய் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து நாளை (வியாழக்கிழமை) எங்கள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்றார்.

    "விஜய் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நல்லாட்சி தருவார் என நம்புகிறேன்." என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது குறித்த கேள்விக்கு, "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக நீண்ட காலமாக பயணித்திருக்கிறது. இப்போதும் அந்த நட்பு நீடிக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் என்ன முடிவெடுத்திருக்கின்றன என்பதைத் தாண்டி, முன்னணி பொறுப்பாளர்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்போம்." என்றார்.

    வகுப்புவாத சக்திகளை கூட்டணியிலிருந்து வெளியே வைக்க வேண்டும் என்கிற காங்கிரஸின் நிபந்தனை குறித்து பேசிய திருமாவளவன், "பாஜக ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது. தவெக ஆட்சி அமைக்க பாஜக தாக்கம் செலுத்தும் என நினைக்கவில்லை." என்றார்.

  4. தோற்றாலும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுக்கும் மமதா - அரசமைப்பு கூறுவது என்ன?

  5. 10 ஆண்டுகள் கழித்து முறிந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி

    மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி (கோப்புப்படம்)

    கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முதல் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி முறிந்துள்ளது.

    தமிழ்நாட்டை பொருத்தவரை, 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்காக நீண்ட இடைவெளி கழித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இந்த கூட்டணி 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடர்ந்து.

    2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது. அந்த தேர்தலை காங்கிரஸ் தனித்துச் சந்தித்தது.

    அதன்பிறகு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்தன. அதனைத் தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்தக் கூட்டணி தொடர்ந்து.

    2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு நீண்ட இழுபறிக்குப் பின்பே இரு கட்சிகளுக்கும் கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

  6. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு

    விஜய்

    பட மூலாதாரம், X/TVK

    தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பெயரில் வெளியான அறிக்கையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    இந்திய அரசமைப்பில் நம்பிக்கை இல்லாத வகுப்புவாத சக்திகளை கூட்டணியிலிருந்து வெளியே வைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக கிரிஷ் சோடங்கர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்திருப்பதாகவும் பனையூர் சென்று நேரில் அதை தெரிவிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கவர்த்தி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

    "அடுத்தடுத்த தேர்தல்களுக்கும் கூட்டணி தொடரும்"

    மேலும் அந்த அறிக்கையில் "தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மிகத் தெளிவான, வலுவான தீர்ப்பை அளித்து, அடுத்த அரசை அமைப்பதற்காக விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டு மக்களின் இந்த தீர்ப்பை மதித்து, பாதுகாத்து, நிறைவேற்றுவது எங்களின் அரசியலமைப்பு கடமையாகும். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுவும், அரசு அமைப்பதற்காக தவெகவிற்கு முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.

  7. "காங்கிரஸ் நம்பகத்தன்மை இல்லாத கூட்டாளி" - திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கருத்து

    திமுக, காங்கிரஸ், தவெக

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, காங்கிரஸை நம்ப முடியாது என்கிற நிலையை உருவாக்கும் என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

    தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் விவாதித்து வரும் நிலையில் அக்கட்சி நம்பகத்தன்மை இல்லாத கூட்டாளி என திமுக தெரிவித்துள்ளது.

    திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதனை முதுகில் குத்துவது என நாங்கள் கூறுகிறோம். வெற்றிச் சான்றிதழ் வருவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி அணி மாற முடிவெடுத்துள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் திருப்திகரமானதாக இல்லை."

    "பாஜகவை வெளியில் வைக்க தான் இந்த முடிவெடுப்பதாக கூறுகிறார்கள். விஜய் எப்போதுமே பாஜக, ஆர்.எஸ்.எஸுக்கு எதிராகப் பேசியதில்லை. தவெக வெற்றி பெற்ற உடன் வாக்காளர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்காமல் நேரடியாக முதலில் பிரதமர் மோதிக்கு தான் விஜய் நன்றி தெரிவித்திருந்தார். விஜயின் முக்கியத்துவம் என்னவென்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்."

    "பாஜக தோற்கடிப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். காங்கிரஸ் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவசர கதியில் காங்கிரஸ் எடுக்கும் இந்த முடிவின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும். கூட்டணியில் மற்றவர்களும் இருக்கிறார்கள்."

    "காங்கிரஸ் இவ்வாறு நம்பகத்தன்மை இல்லாத கூட்டாளியாக இருந்தால் மற்ற தலைவர்களின் எண்ணத்தில் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? தவெகவிற்கு எதிராக போட்டியிட்டார்கள், தற்போது அவர்களுடன் சேர்கிறார்கள். காங்கிரஸை நம்ப முடியாது என்கிற நிலையை தான் இது உருவாக்கும். காங்கிரஸ் தலைமை ஏன் இதை அறிவிக்கவில்லை. இந்த முடிவை ஏன் மாநில தலைமையிடம் கொடுத்துவிட்டார்கள். நாளை ஏதாவது தவறாகச் சென்றால் அதிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவே இந்த முடிவு." எனத் தெரிவித்தார்.

  8. "வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி தேவை" - விஜய்க்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

  9. "திமுக அரசுக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பு" - காங்கிரஸ் எம்,பி மாணிக்கம் தாகூர்.

    காங்கிரஸ், திமுக, தவெக

    பட மூலாதாரம், Manickam Tagore / Facebook

    படக்குறிப்பு, காங்கிரஸ் முன் இரண்டு கேள்விகள் இருப்பதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்கிற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் திமுக அரசுக்கு எதிராக வந்துள்ளது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "இந்த தீர்ப்பு திமுக அரசுக்கு எதிராக வந்துள்ளது. அமைச்சரவையில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்களின் இடங்களில் தோற்றுள்ளனர். எந்த தவறும் செய்யாமல் நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது பாஜக தமிழ்நாட்டின் மீது கண் வைத்துள்ளது."

    மேலும் "நம் முன்னால் இருக்கும் கேள்வி தெளிவாக இருக்கிறது. மக்களின் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டவர்கள் உடன் நிற்பதா அல்லது பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட சக்தியுடன் இணைந்து பாஜக தமிழ்நாட்டை ஆள்வதை தடுப்பதற்கு சண்டையிடுவதா." என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  10. திமுக கூட்டணியில் தொடர்வோம் - ஐயுஎம்எல் அறிவிப்பு

    திமுக, முஸ்லிக் லீக்

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளில் வென்றுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில் வேறு எந்தக் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளிக்கும் என்பது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

    இந்தச் சூழலில் தமிழகத்தில் தொங்கு சட்டசபை முஸ்லிம் லீக்கின் நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் பெயரில் அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில். "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம்! இன்றும் இருக்கிறோம்!! நாளையும் இருப்போம்!!!," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறவு என்பது தேர்தல் காலத்து உறவு அல்ல, இது கொள்கை ரீதியான கூட்டணி." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய இரு தொகுதிகளில் முஸ்லிம் லீக் வென்றுள்ளது.

  11. விஜய் உடன் எந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது?

  12. காணொளி: விபத்தில் கையை இழந்தும் ஒற்றைக் கையில் எம்பிராய்டரி செய்யும் பெண்

  13. "தோனியின் பாணியில் சாம்சன்" - சிஎஸ்கேவுக்கு பிரகாசமாகும் பிளேஆஃப் வாய்ப்பு

  14. விஜய்க்கு முதல் தேர்தலிலேயே பெருவெற்றி வசப்பட்டது எப்படி?

  15. காணொளி: 'ஆட்சியமைக்க விஜய் ஆதரவு கேட்டார் -' காங்கிரஸ் கட்சியின் பதில் என்ன?

  16. காணொளி: விஜய் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் ஆதரவு?

  17. 'கோட்டையாக' கருதப்பட்ட சென்னையில் திமுக தோல்வி ஏன்?

  18. காணொளி: 'ஸ்டாலின் உடன் நெருங்கி பழகியவன்' - கொளத்தூரில் வெற்றி பெற்ற தவெகவின் வி.எஸ். பாபு

  19. காணொளி: 'தவெகவை கணிக்க தவறிய திமுக' - தோல்விக்கான 5 காரணங்கள்

  20. '1 ஓட்டு முதல் 976 ஓட்டுகள்' வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த 15 பேர் யார்?