தஞ்சாவூர் களிமேடு திருவிழா விபத்து: ''துயரத்திலும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.''தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராம திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். அந்த கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு - அதிமுக சார்பில் நிதியுதவி அறிவிப்பு

    தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் களிமேடு கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தமிழ்நாடு அரசு விரைந்தும், முழுமையாகவும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள 11 பேரின் குடும்பங்களுக்கு அதிமுகவின் சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும் அதேபோல், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேருக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளனர்.

  2. மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு - சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

    மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு

    தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    இத்தீர்மானத்தின்மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தேர்த்திருவிழாவின் போது 11 பேர் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் செய்தியினை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். தேரினை திருப்ப முற்பட்டபோது தேர் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    காயமடைந்த 16 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இப்பணிகளை மேற்பார்வையிடவும் துரிதப்படுத்திடவும் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இன்று அப்பகுதிக்கு நேரில் செல்ல உள்ளேன்.

    விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது" என தெரிவித்தார்.

    இதையடுத்து, சட்டப்பேரவையில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

  3. இந்தியாவில் 3000ஐ நெருங்கிய தினசரி கொரோனா தொற்று

    இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 2,927 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,252 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,278 ஆக இருப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா நோய் தாெற்று தொடர்பாக தமிழக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  4. தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவில் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

    தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், விபத்து நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூர் செல்கிறார்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோதி இரங்கல்

    தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தமுற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, தஞ்சை அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

    தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு

    தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில், அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசி உள்ளது.

    இதனால் தேரின் மீது மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

  7. வணக்கம் நேயர்களே!

    நான் லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்க் கையகப்படுத்தினார்.
    • கட்சியில் சேர்ந்து, தேர்தலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி காங்கிரஸின் வேண்டுகோளை மறுத்துவிட்டதாக டிவிட்டரில் கூறியிருக்கிறார் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.
    • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றார்.
    • தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கோயம்புத்தூரில் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் யானையும் இளம் குட்டியும் இறந்து கிடந்தன.
    • சேலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உள்நாட்டு தடுப்பூசிகள் இரண்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • பிரசாந்த் கிசோர் உடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்ததாகவும் ''பழைய ஒயின், பழைய தங்கம், பழைய நண்பர்கள் சிறந்தவை'' என்று ட்விட்டரில் சித்து தெரிவித்துள்ளார்.
    • எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழு, கோவை அதிமுக பிரமுகர் சஜீவனிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.