பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ:

    • இலங்கையில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முக்கிய தொழில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • இலங்கை நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இலங்கைக்கு இந்திய உதவியின்கீழ் மொத்தமாக 2,70,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகளவான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது என, இந்திய உயர் ஆணையரகம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
    • இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என, நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.
    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேருக்கு சிறை காவலை நீட்டித்துள்ள இலங்கை நீதிபதி, தலா ரூ.2 கோடி செலுத்தி ஜாமீனில் வெளியே வரலாம் என உத்தரவிட்டுள்ளார்.
    • கீயவ் மற்றும் செர்னிஹிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யா வெளியேறும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • யுக்ரேனிய படைகளின் எதிர்தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வடக்கு யுக்ரேனில் உள்ள கிராம மக்களை மனித கேடயமாக ரஷ்யப்படையினர் பயன்படுத்தியதாக, பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ரஷ்ய படையினருக்கு எதிராக யுக்ரேன் படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என, யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
    • மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    • ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடை நீக்கம்.
    • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது - உச்சநீதிமன்றம்
  2. யுக்ரேன் போர்: மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்த ஐ.நா. பொதுச் சபை

  3. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்

    இம்ரான்கான்

    பட மூலாதாரம், Getty Images

    பாகிஸ்தானில் தேசியப் பேரவை எனப்படும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக சபாநாயகர் அறிவித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இது இம்ரான் கானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. பிரதமர் இம்ரான் கான், நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபருக்கு அறிவுறுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

    அத்துடன், வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டவும் சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

    அந்தக் கூட்டத்தின்போது அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  4. காதல் ஆண்-பெண்ணுக்கு மட்டுமே வருவதல்ல: தன்பாலின தம்பதியின் காதல் கதை

  5. விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு அடுத்தடுத்து சர்ச்சை ஏன்?

  6. யுக்ரேனில் இன்று இதுவரை நடந்தது என்ன?

    யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்

    பட மூலாதாரம், EPA

    இந்த நேரலைப் பக்கத்தில் தற்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெற்ற நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில், யுக்ரேனுக்கான ஆதரவை வலுப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, நேட்டோ பொதுச் செயலாளர் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்தார்.
    • ஆனால், யுக்ரேனுக்கு எத்தகைய ஆயுதங்கள் வழங்கப்படும் என்ற தகவலை யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவிக்கவில்லை.
    • இந்த மாநாட்டில் பங்கேற்ற யுக்ரேன் வெளியுறவு அமைச்சர், யுக்ரேனுக்கு என்ன ஆயுதங்கள் வழங்கப்படும் என்பது விவாதம் அல்ல எனவும் வழங்கப்படும் ஆயுதங்ள் என்ன கால அளவுக்குள் வழங்கப்படும் என்பதே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேனின் புச்சா நகர் மற்றும் அந்நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற "படுகொலைகள்", சர்வதேச சட்டத்தின் கடும் விதிமீறல் என, ஜி7 நாடுகள் தெரிவித்துள்ளன.
    • கிழக்கு யுக்ரேனில் ரஷ்யப்படையினரின் கடுமையான தாக்குதலை தடுத்து நிறுத்த அதிக ஆயுதங்களை வழங்க வேண்டும் என, நேட்டோவிடம் யுக்ரேன் உதவி கோரியது.
    • யுக்ரேனிய படைகளின் எதிர்தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வடக்கு யுக்ரேனில் உள்ள கிராம மக்களை மனித கேடயமாக ரஷ்யப்படையினர் பயன்படுத்தியதாக, பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. ரஷ்ய படைவீரரை யுக்ரேன் படையினர் சுட்டதாக குற்றச்சாட்டு - யுக்ரேன் கருத்து

    யுக்ரேன் - ரஷ்யா

    ரஷ்ய படையினருக்கு எதிராக யுக்ரேன் படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என, யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், யுக்ரேனின் புச்சா நகரில் நடைபெற்ற கொடுமைகள் குறித்தும் கருத்தில் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

    "புச்சா நகரிலிருந்து வரும் புகைப்படங்களை பார்க்கும்போதும் அங்கிருந்து தப்பித்த மக்களிடம் பேசும்போதும், உங்களுக்கு அறிந்த ஒரு நபர் பல நாட்களாக தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை அறியும்போதும் ஏற்படும் உணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியாது" என அவர் தெரிவித்தார்.

    "ரஷ்யப்படையினர் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததை அறியும்போது ஏற்படும் உணர்வை உங்களால் புரிந்துகொள்ள முடியாது" என அவர் தெரிவித்தார்.

    யுக்ரேன் படையினர் ரஷ்ய படையை சேர்ந்த ஒருவரை சுடுவதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் காணொளி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு, "முன் வரிசையின் இருபுறமும் போர் விதிகளை மீறுபவர்களுக்கு இது ஒரு மன்னிப்பு அல்ல, ஆனால், நீங்கள் புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்கள் உள்ளன, மன்னிக்கவும்" என அவர் தெரிவித்தார்.

    யுக்ரேன் ராணுவம் போர் சட்டங்களை கடைபிடிப்பதாக கூறிய அவர், ஆனால் "தனிப்பட்ட விதிமீறல் சம்பவங்கள் இருக்கலாம்" எனவும், அதுகுறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.

  8. எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?

  9. இந்திய வரலாறு: ஆங்கிலேயர்களால் ஆடை களையப்பட்டு முகலாய இளவரசர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கதை

    பகதூர் ஷா ஜாஃபர்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, இறுதியாக எடுக்கப்பட்ட பகதூர் ஷா ஜாஃபரின் படம்

    வரலாற்றில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில்அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப்பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் வெளியான இந்த சுவாரஸ்ய கட்டுரையை வாசியுங்கள்:

  10. திருச்சி சிறப்பு முகாமில் மரக்கன்றுகள் வளர்த்து விநியோகிக்கும் இலங்கைத் தமிழர்

  11. செந்தில்குமரன்: உலகின் சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரை தமிழர்

      • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
      • பதவி, பிபிசி தமிழ்
    உலகின் சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது

    பட மூலாதாரம், SENTHIL KUMARAN

    படக்குறிப்பு, உலக பத்திரிகை புகைப்பட விருது 2022ஐ வென்ற தொகுப்பில் இருந்து ஒரு படம்.

    நீங்கள் பார்க்கும் இந்தப் படம்தான் இந்த ஆண்டின் (2022) மிகச்சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞருக்கான விருதை பெற்றுக் கொடுத்த தொகுப்பின் ஒரு படம். விருதைப் பெற்றுக் கொடுத்தது இந்தப் படம் என்றால், பெற்றுக் கொண்டவர், ஒரு மதுரைத் தமிழன். சொல்லப்போனால், இந்த விருதைப் பெறும் முதல் தென்னிந்தியரும் இவர்தான்.

  12. பொம்மை வழி கற்பித்தல் - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

    ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொம்மை வழியில் கற்பித்தல் பணிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடத்திட்டங்களை எளிமையான முறையில்பொம்மைகள் வாயிலாக புரிந்திட செய்யும் வகையில் பயிற்சி அளிக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடத்திட்டங்களை பொம்மைகள் மூலம் கற்பிக்க செய்ய ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் அருகே களியாம்பூண்டியில் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

    ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பொம்மை வழி கற்பித்தல் பயிற்சி வகுப்பினை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பாலசுப்பிரமணியம் தொடங்கிவைத்து, பொம்மை வழி கற்பித்தலுக்கான அடிப்படைக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

    மேலும், உத்திரமேரூர் வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொம்மை வழி கல்விக்கான வழிகாட்டல்களை ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.

    பொம்மை வழி கற்பித்தல் பயிற்சி வகுப்பில் உத்திரமேரூர், மதுராந்தகம் வட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களும், ஓவிய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

  13. பீஸ்ட் திரைப்படம் சர்ச்சையில் சிக்குவது ஏன்? - விஜய் சார்பில் வெளியான அறிக்கை பின்னணி?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. தமிழக மீனவர்கள் ஜாமீனில் வெளியேவர தலா ரூ.2 கோடி செலுத்த வேண்டும் - இலங்கை நீதிமன்றம்

    தமிழக மீனவர்கள் கைது

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேருக்கு சிறை காவலை நீட்டித்துள்ள இலங்கை நீதிபதி, தலா ரூ.2 கோடி செலுத்தி ஜாமீனில் வெளியே வரலாம் என உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த மாதம் 23ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினி இளங்கோவன் மீனவர்களை வரும் 21ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, கிளிநொச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பி.ஆர். ஸ்மாத் ஜெமில் மீனவர்களை வரும் மே மாதம் 12ஆம் தேதி வரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    மேலும், "மீனவர்கள் ஜாமீனில் வெளியேவர விரும்பினால் இலங்கை பணம் தலா ரூ. 2 கோடி ரூபாய் ஜாமீன் தொகையாக செலுத்தி வெளியே வரலாம். ஆனால், சிறையில் இருந்து வெளியே வரும் மீனவர் 12ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், தவறும்பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஜாமீனில் வெளியேவர விருப்பமில்லாத மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

    ஜாமீனில் வெளியேவர விரும்பாததால் மீனவர்கள் 12 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  15. ஓசூர் அருகே சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

    செம்மரக் கட்டைகள் பறிமுதல்

    ஓசூர் அருகே சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளுடன் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரியில் டைட்டான் டவுன்ஷிப் உள்ளது. இந்த பகுதியில் உள்ள எம்.ஜி. நகரில் இன்று காலை 2 கார்கள் கேட்பாரற்ற நிலையில் இருந்தன. அந்த காருக்குள் மரக்கட்டைகள் இருந்தன. இதுதொடர்பாக, சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தொடர்ந்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, போலீசார் காரை திறந்து பார்த்தபோது ஒரு காரில் 11 செம்மரக்கட்டைகளும், மற்றொரு காரில் 8 செம்மரக்கட்டைகளும் என, மொத்தம் 19 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை எடையிட்டு பார்த்தபோது 658 கிலோ எனவும் அதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும், 2 கார்களும் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார்கள் ஆகும். அதன் உரிமையாளர் ஓசூரைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, செம்மரக்கட்டைகளையும், கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் திருப்பதி சுற்றுவட்டார பகுதியில் செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன. அந்த பகுதியில் இருந்து இந்த செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மத்திகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

  16. நீட் விலக்கு மசோதா: குடியரசுத்தலைவர் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட ஆளுநர் - திமுக எம்.பி வில்சன்

  17. அழகிய தீவு தேசத்தின் பொருளாதாரம் நொறுங்கிய கதை - விளக்கும் காணொளி

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. இலங்கை தமிழர்களுக்கு உதவிட தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் விநியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டார்.

    அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

    முதலமைச்சர் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி அளித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  19. பொதுமக்களை கேடயமாக பயன்படுத்திய ரஷ்யப்படை - பிபிசியிடம் கூறிய பொதுமக்கள்

    யுக்ரேன்
    படக்குறிப்பு, மரியானான் மற்றும் அவருடைய மகள்.

    யுக்ரேனிய படைகளின் எதிர்தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வடக்கு யுக்ரேனில் உள்ள கிராம மக்களை மனித கேடயமாக ரஷ்யப்படையினர் பயன்படுத்தியதாக, பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபகாலம் வரை ரஷ்யப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கீயவின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பிபிசி நிருபர் ஜெரிமி போவென் சந்தித்துவருகிறார்.

    செர்னோபில் அணு விபத்து நிகழ்ந்த இடத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்கு அருகே தெற்கில் அமைந்துள்ள ஒபுகோவிச்சி கிராம மக்கள் அவரிடம் பேசுகையில், மார்ச் 14 ஆம் தேதி இரவு, யுக்ரேன் படையினரின் எதிர்தாக்குதலில் தங்கள் நாட்டு படையினர் மற்றும் ராணுவ வாகனங்களை ரஷ்யா இழந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, ரஷ்யப்படையினர் வீடு வீடாக சென்று துப்பாக்கி முனையில் சுமார் 150 பேரை சுற்றிவளைத்ததாகவும், நடுங்கும் குளிரில் பள்ளி ஒன்றின் உடற்பயிற்சிக்கூடத்திற்கு தங்களை காத்துக்கொள்வதற்காக அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துவது சர்வதேச மனிதநேய சட்டத்திற்கு எதிரானதாகும்.

    "பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த எங்களை கட்டாயப்படுத்தி வெளியே கொண்டு வந்தனர்," என, பேட்டியளித்த பொதுமக்களுள் ஒருவரான லிட்மிலா சுட்கோவா தெரிவித்தார்.

    "அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுள் வயது முதிர்ந்த பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் இருந்தனர். மிகவும் அச்சுறுத்துவதாக அது இருந்தது. வெளியே வருவதற்கு கதவுகளை திறக்காத அனைவருடைய வீட்டின் கதவுகளையும் ரஷ்யப்படையினர் உடைத்தனர்" என தெரிவித்தார்.

    பிபிசியிடம் பேசிய மற்றொரு பெண்ணான மரியானா, தனது மகள் இன்னும் அதுகுறித்த பதட்டத்தில் இருப்பதாக கூறினார்.

    "2 வயது சிறுமி இவற்றையெல்லாம் பார்க்கக்கூடாது," என தெரிவித்தார்.

    "உடற்பயிற்சிக் கூடத்திலேயே எங்களை சுட்டுக் கொன்று விடுவார்கள் என பயந்தோம். என் மகள் குறித்து நான் பயந்தேன். என்னிடம் வார்த்தைகளே இல்லை," என அவர் தெரிவித்தார்.

  20. தன்பாலின தம்பதி: ''கணவன் மனைவியாக வாழுறோம்; ஆனா வாடகைக்கு வீடு கூட கிடைக்காது''

    "திருமணம் செய்துகொண்ட பலரும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அதேபோல் தன்பாலின தம்பதிகளாக இணைந்து, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, நல்ல பெற்றோராக வளர்க்க எங்களுக்கும் ஆசையாக உள்ளது. அந்த உரிமையை சட்டப்பூர்வ திருமணம் அளிக்கும்." என கூறுகின்றனர் இந்த தன்பாலின தம்பதி. அவர்கள் குறித்த காணொளியை இங்கே காணுங்கள்:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு