செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புலிப்பாக்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை திடீரென அந்த நபர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியின் மீது ஏறி குதித்து தற்கொலைக்கு முயன்றார். திடீரென எதிர்பாராத இந்த சம்பவத்தால் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோர் இணைந்து லாவகமாக மீட்டு தற்கொலையில் இருந்து காப்பாற்றினார்.
காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர் பெயர் சந்திரசேகர் என்பதும் அவர் சற்று மனநிலை சரியில்லாமல் இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.










