“மேற்கு நாடுகளின் தடைகளால் புதின் பதற்றமாக உள்ளார்” – ரஷ்ய முன்னாள் பிரதமர்

புதினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட “பேரழிவுகரமான” பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து “பதற்றமாக” இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. தமிழக பட்ஜெட் - "பெரியாரின் சிந்தனைகள் கொண்ட நூல்களின் தொகுப்பு 21 இந்திய மொழிகளில் வெளியிடப்படும்"

    பெரியார்

    பட மூலாதாரம், bbc

    2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துவருகிறார். அதன் சிறப்பம்சங்கள்:

    • தமிழ் மொழி வளார்ச்சிக்கு அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
    • தமிழ் தொல்லியல் மரபு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கவும், அம்மரபை பாதுகாக்கவும் ரூ. 10 கோடியில் புதிய அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள அருங்காட்சியகங்கள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
    • சமூநீதியை நிலைநாட்ட கடைசி வரை போராடிய பெரியாரின் சிந்தனைகள் கொண்ட நூல்களின் தொகுப்பு 21 இந்திய மொழிகளில் அச்சு மற்றும் மின்னணு வழியாக வெளியிடப்படும். இதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு
  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, 2022-2023 தமிழக பட்ஜெட் தாக்கல் தொடங்கியது: அதிமுக அமளி – வெளிநடப்பு

    பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

    பட மூலாதாரம், TN - DIPR

    படக்குறிப்பு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

    2022-2023ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தொடங்கினார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

    அவர் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்கத் தொடங்கிய நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை உள்ளிட்ட விஷயம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்காததால் அமளியில் ஈடுபட்டனர்.

    அப்போது, சபாநாயகர் அப்பாவு, “எனது அனுமதி இல்லாமல் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசிய எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது. பட்ஜெட்டை கவனியுங்கள். நீங்கள் பேசுவதற்கு பின்னர் நேரம் தரப்படும்” என கூறினார்.

    இதற்டையே, அதிமுக உறுப்பினர்களின் கூச்சலுக்கு மத்தியில் பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து வாசித்து வருகிறார்.

    இந்த நிலையில், பட்ஜெட் உரையை புறக்கணிப்பதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

  3. இந்தியாவில் பல மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்: குடியரசு தலைவர் - பிரதமர் வாழ்த்து

    ஹோலி

    பட மூலாதாரம், Getty Images

    நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஹோலி புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், "ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் இதயபூர்வ வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கு ஒரு வாழும் உதாரணம். இது வசந்த காலத்தின் வருகை பற்றிய நல்ல செய்தியைக் கொண்டு வருகிறது. இந்த விழா நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், புதிய ஆற்றலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    பிரதமர் மோதி தமது வாழ்த்துச் செய்தியில், "உங்கள் அனைவருக்கும் இனிய ஹோலி வாழ்த்துகள். பரஸ்பர அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான இந்த வண்ணங்களின் பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என்று கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  4. 2022-2023 தமிழக பட்ஜெட்: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    பழனிவேல் தியாகராஜன்

    பட மூலாதாரம், @PTRMADURAI, TWITTER

    படக்குறிப்பு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: கோப்புப்படம்

    2022-2023 தமிழக பட்ஜெட்: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணியளவில் தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வது எப்போது, பட்ஜெட் மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகள் குறித்து அதிமுக கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.

    முன்னதாக, 2021 மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டையும் அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

  5. இந்தியாவை நோக்கி சிந்து மாகாண வான்பரப்பில் பறந்த மர்ம பொருள்? எதிர்ப்பை கடுமையாக்கும் பாகிஸ்தான் தலைவர்கள்

    இந்தியா - பாகிஸ்தான்

    பட மூலாதாரம், AEROSINT DIVISION PSF

    படக்குறிப்பு, பாகிஸ்தானின் சிந்து மாகாண வான் பகுதியில் தோன்றிய மர்ம பொருள் வானில் இருந்து விழும் காட்சி

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாம்ஷோரோ என்ற பகுதி குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை (மார்ச் 17) பகல் 12 மணியளவில் அடையாளம் தெரியாத பொருள் வானில் பறந்ததாகவும் அது ஒரு ராக்கெட் அல்லது ஏவுகணையை ஒத்திருந்தது என்றும் அந்த மக்கள் கூறியதாக இந்திய செய்தி முகமையான ஏஎன்ஐ வியாழக்கிழமை நள்ளிரவு அதன் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.

  6. யுக்ரேனின் இடைவிடாத எதிர் தாக்குதல் – திணறும் ரஷ்ய படைகள்

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கார்கீவில் அழிக்கப்பட்ட ரஷ்ய டாங்கு முன்பு நடந்துசெல்லும் யுக்ரேனிய படைவீரர்.

    உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும், யுக்ரேன் படையினரின் இடைவிடாத எதிர்தாக்குதல் காரணமாகவும், ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    யுக்ரேனில் தங்கள் தாக்குதலை தொடர்வதில் ரஷ்யப் படைகள் போராடிவருவதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய உளவுத்துறை மதிப்பீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “ராணுவ தளவாட பிரச்னைகள் தொடர்வதால், யுக்ரேன் மீதான படையெடுப்பில் ரஷ்யப் படைகள் முன்னேற முடியாமல் தள்ளாடிவருகிறது,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்யப் படையினரின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் மற்றும் வான்படை பற்றாக்குறை காரணமாக, அப்படையினருக்கு “அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் எரிபொருள்” உள்ளிட்டவற்றை விநியோகிக்க இயலவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

    “இடைவிடாத யுக்ரேனிய எதிர்தாக்குதல் காரணமாக, தங்களின் விநியோகச் சங்கிலியை காப்பதற்காக அதிகளவிலான ரஷ்யப்படைகளை திசைதிருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை வியாழக்கிழமை அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், “யுக்ரேன் முழுதும் ரஷ்யப்படைகள் முடக்கப்பட்டுள்ளதாக” குறிப்பிடப்பட்டிருந்ததை பிரதிபலிக்கிறது.

  7. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவது பரணி தரன் மற்றும் நந்தினி வெள்ளைச்சாமி.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின்மூலம் தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கிய செய்திகள்:

    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரை ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று கைதட்டி வரவேற்றனர். 10 நிமிடங்கள் மட்டுமே அவர் உரையாற்றினாலும், கூர்மையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.
    • மேரியோபோல் அரங்கத்தில் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டினார். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
    • ரஷ்யாவில் பிரபல நிறுவனங்களான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர், பர்கர் கிங், மேரியட் ஹோட்டல் குழுமம், அக்கார் ஆகியவை சிக்கலான ஒப்பந்தங்களால் தங்களின் கிளைகளை மூட முடியாமல் இருக்கின்றன.
    • விராலிமலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் ஐ.ஜி., உத்தரவின்படி, விராலிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    • மேலூர் அருகே, விவசாயம் செழிக்க வேண்டியும், சாதி, மத பேதமின்றி கிராம மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும்நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல வகையான நாட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
    • திமுக ஆட்சியைப் பிடித்ததுபோல, தேமுதிகவும் ஒருநாள் ஆட்சிக்கு வரும் என, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.