யுக்ரேன்: அகதிகளுக்கு இடம் கொடுக்கும் போலந்து ஷாப்பிங் சென்டர்

போலந்தின் கிராகோவ் புறநகரில் கைவிடப்பட்ட ஷாப்பிங் சென்டர் ஒன்று, அதிக அகதிகளுக்கு தற்காலிக நிவாரண மையாக மாற்றப்பட்டுள்ளது.
ரஷ்யா-யுக்ரேன் மோதல் தொடங்கியதில் இருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமான யுக்ரேனியர்கள் போலந்திற்குள் நுழைந்துள்ளனர். மேலும், அவ்வளவு அகதிகளை தங்கள் நாட்டிற்குள் வரவேற்பதன் அழுத்தத்தை அந்நாடு உணர்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இந்த ஷாப்பிங் சென்டர், ஆரம்பக்கட்டமாக சுமார் 400 பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதை இன்னும் விரிவுபடுத்த.திறனைக் கொண்டுள்ளனர் என்று அங்கிருக்கும் பிபிசியின் டான் ஜான்சன் கூறுகிறார்.

நகரின் முனிசிபல் சமூகநல மையத்தைச் சேர்ந்த கரோல் பைட்லார்ஸ்கி கூறும்போது, “அகதிகள் மையத்தில் ஏற்கெனவே 100 பேர் உள்ளதாகவும் இன்று பிற்பகலில் நிரம்பிவிடும்” என்றார்.
மேலும், “போரிலிருந்து தப்பி வரும் மக்களுக்குச் சிறந்த உதவியை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கம். அவர்களை வீட்டில் இருப்பதைப் போல சிறிது சிறிதாக உணர வைக்க முயல்கிறோம். அவர்களுக்கு ஓய்வு கொடுக்கிறோம். அதனால், அவர்களால் இதைக் கடந்து வர முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்,” என்றார்.












