“கிரைமியாவை ரஷ்ய பகுதியாக யுக்ரேன் ஏற்க வேண்டும்” – ரஷ்யா நிபந்தனை

யுக்ரேன் ரஷ்ய நிபந்தனைகளை நிறைவேற்றினால், “எந்த நேரத்திலும்” ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என்று ரஷ்யா கூறியுள்ளது. மேலும், நேட்டோ போன்ற எந்தவொரு கூட்டமைப்பிலும் இணைவதற்கான கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று பெஸ்கோவ் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

க. சுபகுணம்

  1. யுக்ரேன் படையெடுப்பை எதிர்த்து பிரசங்கம் செய்த ரஷ்ய பாதிரியார் கைது

    ரஷ்யாவில் நேற்று, யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு எதிராக பிரசங்கம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் ஆர்வலர்கள் குழுக்கள் தெரிவிக்கின்றன.

    கராபனோவோ கிராமத்தில் உள்ள ஒரு சிறிய பிரசங்க சபையில் பிரசங்கம் செய்த சிறிது நேரத்திலேயே பாதிரியார் ஜான் பர்டின் கைது செய்யப்பட்டதாக பிபிசி ரஷ்யா செய்தியாளர் ஆண்ட்ரே ஜாகரோவ் தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட பாதிரியார் யுக்ரேன் நகரங்களில் நடந்து வரும் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் சம்பந்தமாக உள்ளூர் மக்களுக்கு விவரித்துள்ளார். மேலும், படையெடுப்புக்கு எதிரான புகைப்படங்கள் மற்றும் மனுக்களை திருச்சபை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    கைது செய்யப்பட்ட பாதிரியார் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ரஷ்ய நாடாளுமன்றமான டுமாவில், 'ஆயுதப் படைகளின் பயன்பாட்டை இழிவுபடுத்துதல்' நடவடிக்கைகள் குற்றம் என்று நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மோசமான ஒடுக்குமுறை நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவில் பல நகரங்களில் உள்ள தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  2. வணக்கம் நேயர்காளே!

    நான் க.சுபகுணம். பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை லட்சுமிகாந்த் பாரதி வழங்கிக் கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவுள்ளேன்.

    யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் சில முக்கிய நகரங்களில் மீண்டும் போர் நிறுத்தம் அறிவித்த ரஷ்யா

    யுக்ரேனில் சில முக்கிய நகரங்களில் மீண்டும் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது ரஷ்யா .

    கீயவ், கார்கிவ், சுமி, மேரியோபோல் நகரங்களில் இன்று (மார்ச் 7) காலை 7 மணி முதல் பொதுமக்கள் வெளியேற வசதியாக இந்த போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று ரஷ்ய அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த போர் நிறுத்த நேரத்தில் பொதுமக்கள் வெளியேற வசதியாக மனிதாபிமான வழித்தடங்கள் செயல்படும் என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட நான்கு நகரங்களுமே கடுமையான ரஷ்யத் தாக்குதலுக்கு தற்போது இலக்காகிவருகின்றன. எனினும், இந்த போர் நிறுத்த அறிவிப்பை யுக்ரேன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    மேரியோபோல் நகரில் இப்படி மனிதாபிமான வழித்தடம் அமைக்கும் இரண்டு முயற்சிகள் ஏற்கெனவே தோற்றுள்ளன.

    ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த நேரத்திலும்கூட ரஷ்யா தொடர்ந்து குண்டு வீசித் தாக்கியதாகவும், இதனால்தான் இது தோற்றதாகவும் யுக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

  4. ரஷ்யப் படையெடுப்புக்கு நடுவில் பாட்டுப் பாடும் யுக்ரேனியர்கள்

    யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்து வரும் சூழலில், யுக்ரேனியர்கள் தங்ளை உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் பாட்டுப் பாடி, இசை மீட்டி வருகிறார்கள்.

    யுக்ரேனில் தங்குமிடம் மற்றும் பொது இடங்களில் மக்கள் பாடல்களை வாசிக்கும் காணொளிகள் சமூக வலைத் தளத்தில் அதிகமாக பகிரப்படுகிறது.

    2013 ஆம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் ( Frozen) திரைப்படத்தின் பிரபலமான ஒரு பாடலை, வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் மறைவிடத்தில் இருந்து பாடும் காணொளி ஒன்று வைரல் ஆனது.

    மற்றொரு காணொளியில் பெண் ஒருவர் வயலின் வாசித்தபடி வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகும் இடத்தைப் பற்றி விவரிக்கிறார்.

    சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த காணொளிகள் பிபிசியால் சரி பார்க்கப்படவில்லை.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  5. எல்லை தாண்டிய விருந்தோம்பல்: யுக்ரேன் அகதிகளை வீட்டில் தங்கவைக்கும் போலந்து பெண்

    காணொளிக் குறிப்பு, எல்லை தாண்டிய விருந்தோம்பல்: யுக்ரேனிய அகதிகளை வீட்டில் தங்கவைக்கும் போலந்து பெண்

    மனதை நெகிழ வைக்கும் இந்த விருந்தோம்பல் குறித்த கதையை இந்தக் காணொளியில் காணுங்கள்.

  6. யுக்ரேனில் இருந்து செல்லப் பிராணிகளுடன் வர அனுமதி வாங்கிய இந்தியர்

    யுக்ரேனில் இருந்து இன்று காலை ரஞ்சீத் ரெட்டி, என்ற இந்தியர் தனது செல்லப்பிராணியுடன் வந்துள்ளார்.

    இது சம்பந்தமாக அவர் கூறுகையில் "இந்திய தூதரகத்தின் முயற்சிகளை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள் முழுவதும் மிகவும் உதவியாக உள்ளனர். எனது நாய்க்காக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் சிறப்பு அனுமதி பெற்றிருந்தேன். எங்களுடன் 5 செல்லப்பிராணிகளை கொண்டு வந்தோம்" என்று தெரிவித்தார் என ஏ.என்.ஜ செய்து முகமை ட்வீட் செய்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. யுக்ரேன் vs ரஷ்யா: புதின் பதவியிழப்பார், ஸெலென்ஸ்கி தப்பியோடுவார் - இந்த போர் முடிவதற்கான 5 சாத்தியங்கள் என்னென்ன?

    GETTY IMAGES

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் போர் எப்படி முடியக்கூடும் என்பதை யூகிப்பது கடினம்தான். போரின் இழப்புகள், இடம் பெயர்ந்தவர்கள், போரை நிறுத்துவதற்கான குரல்கள் எனப் பலவும் இப்போது உலகத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இவற்றுக்கு இடையே இந்தப் போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது குறித்த சில சாத்தியங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மிகக் கடினமானவை. மிகவும் இருண்டவை.

    இப்போதைய சூழலில் அழிவுகரமான தாக்குதல்களுடன் ரஷ்யா தனது ராணுவப் படையெடுப்பை முடுக்கிவிட்டுள்ளது. விமானப் படை இன்னும் முழு வீச்சில் தாக்குதலில் ஈடுபடவில்லை. ஆனால் போர் தீவிரமாகும்போது விமானங்கள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தும். நாடெங்கும் பரவலாக சைபர் தாக்குதல்கள் நடத்தப்படும். எரிசக்தி மற்றும் மின்சார வழித்தடங்கள் துண்டிக்கப்படும்.

    தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரலாம். கீயவ் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும். யுக்ரேனின் அதிபர் ஸெலன்ஸ்கி கொல்லப்படலாம் அல்லது வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக்கூடும்.. வெளிநாட்டில் இருந்தபடியே அவர் நாடுகடந்த யுக்ரேனிய அரசை ஏற்படுத்தி அதை வழிநடத்தலாம்.

  8. கீயவ் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா: யுக்ரேன் தகவல்

    ரஷ்ய

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்ய படைகள் யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக யுக்ரேன் கூறியுள்ளது.

    ரஷ்யப் படைகள் கீயவ் நகரத்தின் மீதான தாக்குதலுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும்,

    டாங்கர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படை பிரிவுகள் மூலம் கீயவ் நகரின் இர்பின் பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் யுக்ரேன் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.

    ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் எரிபொருளை கப்பல் மூலம் தங்கள் படைகளுக்கு, பெலாரூஸிலிருந்து செர்னோபிள் விலக்கு மண்டலம் வழியாக அனுப்பி வருகின்றனர் என்றும்.

    கிழக்கு நகரங்களான கார்ஹிவ், செர்னிஹிவ், சுமி மற்றும் தெற்கு நகரமான மைகோலாயிவ் ஆகிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

  9. ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரர், ரஷ்ய ராணுவத்தின் 'Z' சின்னதை தனது சட்டையில் அணிந்திருந்ததால் விசாரணை

    ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரரான இவான் குலியாக் சனிக்கிழமை கத்தாரில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டி மேடையில் யுக்ரேனிய போட்டியாளருக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் 'Z' என்ற சின்னதை தனது சட்டையில் அணிந்திருந்ததை அடுத்து அவர் மேல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அப்பாரடஸ் உலகக் கோப்பை போட்டி (Apparatus World Cup) தோஹாவில் நடந்து வரக்கூடிய சூழலில் ரஷ்ய வீரரான இவான் குலியாக்கின் இந்த நடவடிக்கை "அதிர்ச்சியூட்டும் நடத்தை" என்று கூறி, அவருக்கு எதிராக ஒழுக்க மீறல் விசாரணையை சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு (FIG) தொடங்கியுள்ளது.

    ஜிம்னாஸ்டிக் பேரலல் பார்ஸ் இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்ற ரஷ்ய வீரர், தனது மார்பில் 'Z' என்ற எழுத்தை பொரித்த சட்டையை, உக்ரேனிய வீரர் அருகில் இருந்தபோது அணிந்திருந்தாக FIG அமைப்பினர் தெரிவித்தனர்.

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக இந்த வார இறுதி வரை மட்டுமே ரஷ்ய மற்றும் பெலாரூஸ் வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதன் பிறகு அவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. யுக்ரேன் மீதான படையெடுப்பை எதிர்த்து ரஷ்யாவின் நட்பு நாடான கஜகஸ்தானில் மக்கள் போராட்டம்

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் நட்பு நாடான கஜகஸ்தானில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டம் கஜகஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் நடைபெற்றது எனவும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. கஜகஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ரஷ்ய படையெடுப்பு சம்பந்தமாக தாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் சார்பற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

  11. வணக்கம் நேயர்களே!

    நாங்கள் அ.தா.பாலசுப்ரமணியன் மற்றும் லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • யுக்ரேனில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, அவர்களுடைய மன உறுதியை உடைக்கும் முயற்சி என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததுள்ளது.
    • டான்பாஸ் பகுதியில் 7 கி.மீட்டருக்கு, பல சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களைக் கைப்பற்றியவாறு முன்னேறியுள்ளதாக ரஷ்யா கூறியது.
    • யுக்ரேன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணம் செலுத்தும் நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகிய நிறுவனங்கள் ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறுகின்றன என அறிவித்தது.
    • போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள் இதுவரை 88 விமானங்கள் மற்றும் ஹெல்காப்டர்களை இழந்துள்ளன என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
    • நேற்று காலையில் போர் நிறுத்தம் மற்றும் புதிய வெளியேற்ற முயற்சியை அறிவித்த மேரியோபோல் நகர சபை, அதற்கான திட்டங்கள் கைவிடப்பட்டதை உறுதி செய்தது.
    • யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, நேற்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், உலகத் தலைவர்களிடம் யுக்ரேன் வானில் “விமானங்கள் பறக்கத் தடை மண்டலம்” அறிவிக்க வேண்டுமென்ற தனது வேண்டுகோளை முன்வைத்தார்.
    • யுக்ரேன் தாக்குவதை நிறுத்த வேண்டும், ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் அப்போதுதான் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தும் என துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானிடம் தொலைப்பேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார் என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனில் போருக்கு எதிராக ரஷய் மக்களை ஆர்ப்பாட்டம் செய்ய அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிப் பிரமுகர் அலெக்ஸெய் நேவெல்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பிபிசியின்டிவிட்டர் பக்கத்தில்அண்மைய செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.