யுக்ரேனுக்கு உதவ முன்வந்துள்ள 3000 அமெரிக்க தன்னார்வலர்கள்
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட வெளிநாட்டு தன்னார்வலர்களுக்கான அழைப்பை யுக்ரேன் விடுத்த நிலையில், 3,000 அமெரிக்கர்கள் பதிலளித்துள்ளனர் என்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள யுக்ரேன் தூதரகத்தின் பிரதிநிதி வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி சேவையிடம்( Voice of America news service) தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு உதவ எந்தவிதமான படைவீரர்களையும் அனுப்பாத சூழலில், போருக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றனர். அதேபோல் ரஷ்ய தொழிலதிபர்கள் மற்றும் ரஷ்ய தலைவர்களுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் பிற மூத்த யுக்ரேனிய அதிகாரிகள், போரை எதிர்த்துப் போராட உதவும் வெளிநாட்டு தன்னார்வலர்களின் "சர்வதேச படையணி"யை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுமார் 16,000 வெளிநாட்டினர் யுக்ரேனில் போராட உதவ முன்வந்ததாக யுக்ரேனிய அதிபர் குறிப்பிட்டிருந்தார்.