"யுக்ரேனிய பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்"- ராஜ்நாத் சிங்
"யுக்ரேனிய பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்," என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து கூறிய அவர், "ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் பைடனுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று நான் நம்புகிறேன். சர்வதேச அளவில் அமைதி நிலைநாட்டப்படுவதையே இந்தியா விரும்புகிறது" என்று தெரிவித்தார்.