இந்தியாவில் நேற்று தொடங்கி 24 மணிநேரத்தில் புதிதாக
30,615 பேருக்கு
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்று கண்டறிந்த தொற்று எண்ணிக்கையைவிட
11 சதவீதம் அதிகமாகும். கடந்த 24 மணிநேரத்தில் 82,988 பேர் குணமடைந்துள்ளனர். 514 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 3,70,240
தினசரி
தொற்று பாதிப்பு விகிதம்: 2.45%
குணமடைந்தோரின்
மொத்த எண்ணிக்கை: 4,18,43,446
இதுவரை
173.86 கோடி
டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,325 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று (பிப். 15) புதிதாக 1,325 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34,39,221ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 31,368 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 85,969
நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை: 84,004
தமிழ்நாட்டில் அரசு சார்பாக 69 மற்றும் தனியார் சார்பாக 264 என, மொத்தம் 333 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
நேற்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 5,894 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33,69,907ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தனியார் மருத்துவமனைகளில் 7 பேர், அரசு மருத்துவமனைகளில் 7 பேர் என, 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,946ஆக உயர்ந்துள்ளது.