அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக
தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து சட்டப்பேரவை இயற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்த நிலையில் தற்போது அதிமுகவும் இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்ம ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை சட்டப்பேரவை சபாநாயகரின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளார், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சுமார் 5 மாதங்களுக்குப் பின் தமது நிலைப்பாட்டை ஆளுநர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.