You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அமெரிக்க அதிபர் தேர்தல்: 120 ஆண்டுகளில் அதிக வாக்குப்பதிவு; தாமதமாகும் முடிவுகள்

அமெரிக்க தேர்தலில் வெற்றியை தக்க வைக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஆட்சியைப் பிடிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. , அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

    2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

    அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதே போன்ற நிலை, 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கையில் இல்லையா?

    ஒட்டுமொத்த உலகமுமே கூர்ந்து கவனிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், எப்படி நடக்கும், அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி, என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

  2. முக்கிய போர்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி?

    முன்னதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையோடு வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டாலும், தற்போதைய நிலவரம் அது போன்று இல்லை.

    மிக குறைந்த அளவிலான வித்தியாசத்தில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இதில் முக்கியமானவை போர்க்கள மாகாணங்கள் யார் வசம் செல்கின்றன என்பதுதான்.

    அரிசோனா, ஜோர்ஜா, விஸ்கான்சின், மிசிகன் மற்றும் பென்னிசில்வேனியாவில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

    அரிசோனா: 1996ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிக்கு ஆதரவாக இந்த மாகாணம் வெற்றி வாய்ப்பை வழங்கியதில்லை. அது ஜோ பைடனுக்கு சாதகமாக வாய்ப்பாகியிருக்கிறது. இளம் முற்போக்கு லத்தீன் அமெரிக்கர்கள் அங்கு அதிகம் வாழ்வதால் அவர்களின் ஆதரவு பைடனுக்கு சாதகமாக உள்ளது.

    விஸ்கான்சின், பென்சில்வேனியா: இந்த மாகாணங்களில் இன்னும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அதன் முடிவு தெரிய சில நாட்களாகலாம்.

    ஜோர்ஜா: முன்னதாக இந்த மாகாணத்தில் டிரம்ப் எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறியுள்ளது. டிரம்புக்கும் பைடனுக்கு இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

    புளோரிடாவை பொருத்த வரை அங்கு டொனால்ட் டிரம்பு முன்னிலை வகிக்கிறார். கியூபா-அமெரிக்கர்கள் வாழும் மியாமி டேட் பகுதி வாக்காளர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாக அறிய முடிகிறது.

    டெக்சாஸிலும் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு நிலவுகிறது. 38 தேர்தல் சபை வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணம், கடந்த 10 தேர்தல்களில் குடியரசு கட்சிக்கு சாதகமான முடிவையே அளித்து வருகிறது.

    இந்த தேர்தலில் அதிபர் பதவியை தக்க வைக்க தேவைப்படும் மேஜிக் எண் 270 வேண்டுமெனில், டொனால்ட் டிரம்புக்கு ஓஹையோ, வடக்கு கரோலைனா ஆகிய மாணாங்களின் வாக்குகளும் சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் பைடனுக்கு ஆதரவாக இருப்பதாகவே செய்திகள் வருகின்றன.

    இதுவரை இருக்கும் நிலவரப்படி ப்ளோரிடா, ஒஹையோ, டெக்சாஸ் மற்றும் ஐயோவாவில் டிரம்ப் முன்னிலை வகிக்க, அரிசோனா, பெனிசில்வேனியா, நார்த் கேரோலினா மற்றும் ஜோர்ஜாவில் கடுமையான போட்டி நிலவுகறது

  3. அமெரிக்க தேர்தல்: சமீபத்திய நிலவரம்

    யார் அடுத்த அமெரிக்க அதிபர்? இதற்கு பதில் தெரியும் அளவிற்கான வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை.

    இந்த முறை தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், முடிவுகள் தெரிய சில வாரங்கள் ஆகலாம். வாக்கு எண்ணிக்கை குறித்து யாரேனும் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றால் சரியான முடிவு தெரிய சில மாதங்கள் கூட ஆகலாம்.

    இருப்பினும், யார் வெற்றியாளராக இருக்கக்கூடும் என்ற கணிப்பு, அடுத்த அதிபர் யார் என்று தெரிந்து கொள்ள உதவும்.

    மொத்தம் 570 எலக்டோரல் குழு உறுப்பினர்கள் வாக்குகளில் 270 எடுத்தால் வெற்றி.

    அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஜோ பைடனுக்கு 224, டிரம்புக்கு 213 என்றவாறு முன்னிலை நிலவரம் உள்ளது.

  4. டிரம்ப் ட்வீட்டை திசை திருப்பல் என்று குறிப்பிட்ட ட்விட்டர்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தல் தொடர்பாக ட்விட்டரில் இட்ட பதிவு ஒன்றை திசை திருப்பல் என்று பொருள்படும் மிஸ்லீடிங் என்ற ஆங்கிலச் சொல்லால் குறிப்பிட்டுள்ளது ட்விட்டர்.

    சர்ச்சைக்குரிய அந்தப் பதிவில் எதிரணியினர் தேர்தலைத் திருட முயல்வதாக குற்றம்சாட்டியிருந்தார் டிரம்ப்.

    வாக்குப் பதிவு முடிந்த பிறகும் வாக்குகள் பதிவிடப்பட்டதாகவும் அதில் அவர் குற்றம்சாட்டியிருந்தார். வாக்குப் பதிவு முடிந்துவிட்டதாக குறிப்பிடுவதற்கு polls are closed என்று எழுதுவதற்குப் பதில் poles are closed என்று எழுத்துப்பிழையோடு எழுதியும் இருந்தார்.

    பிழையான எழுத்துகளோடு அவர் எழுதிய poles என்ற ஆங்கிலச் சொல் போலந்து நாட்டவரைக் குறிப்பதால் அந்நாட்டுப் பதிவர்கள், இதை கேலி செய்து பதிவு இடுகின்றனர்.

  5. தேர்தல் மோசடிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம் - டிரம்ப்

    தேர்தல் மோசடி முயற்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இன்று உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், "அனைவருக்கும் நன்றி. கடுமையான சூழ்நிலையில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. வெளியே சென்று இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று கூறினார்."இந்த அளவுக்கு இதுபோன்ற எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்து வாக்குரிமை செலுத்தியதில்லை. ஜோர்ஜாவில் நாங்கள் வென்றிருக்கிறோம். இது மிக முக்கியமானது. பென்சில்வேனியாவில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். இதுவும் முக்கியமானது. டெக்சாஸில் முடிவுகள் இறுதியாகாவிட்டாலும் அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம். மிஷிகனில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறினார்.

    "ஃபுளோரிடா, டெக்சாஸ், வடக்கு கரோலைனா என பல இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், இந்த முடிவுகளை எல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் மோசடியை செய்கிறார்கள். இதைத்தான் ஆரம்பத்திலேயே நாங்கள் கூறி வந்தோம். வெற்றி முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அனைத்தையும் நிறுத்த முற்படுகிறார்கள்."

    எனவே, நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லப்போகிறோம். என்னைப் பொருத்தவரை, நாங்கள் ஏற்கெனவே வென்று விட்டோம். எங்களுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று டிரம்ப் பேசினார்.

    ஆனால், அமெரிக்க அதிபர் கோருவதை போல இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை பணிகள், எண்ணப்படும் தருணத்திலேயே உள்ளன.

  6. வெள்ளை மாளிகையில் உரையாற்ற தயாராகும் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து முன்னிலை நிலவரம் மாறி வரும் வேளையில், வெள்ளை மாளிகையில் இருந்து பேசுவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயத்தமாகி வருகிறார்.

    அவர் என்ன பேசுவார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஏற்கெனவே தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மிகப்பெரிய வெற்றியை அவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

    தேர்தலில் பல இடங்களில் தபால் வாக்குகள் இன்னும் எண்ணப்படாத நிலையில், அது மோசடியானது என்று டிரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் தகவலையும், தவறாக வழிநடத்தக்கூடியதாக இருக்கலாம் என்ற பட்டியலில் ட்விட்டர் நிறுவனம் வகைப்படுத்தி எச்சரிக்கை குறிப்பை அதே பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

  7. தேர்தல் நிலவரம் - இதுவரை என்ன?

    அமெரிக்க தேர்தலில் முக்கிய போர்க்கள மாகாணமான ஃபுளோரிடா உள்ளிட்ட பல மாகாணங்களில் முன்னிலை நிலவரம் பல மணி நேரமாக தொடருகிறது. எனினும், ஃபுளோரிடாவில் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.

    வெள்ளை மாளிகைக்குள் செல்ல தகுதி பெறும் அதிபர் வேட்பாளருக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவை. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஜோ பைடனுக்கு 220, டிரம்புக்கு 213 என்றவாறு முன்னிலை நிலவரம் உள்ளது.

    ஆனாலும், இன்னும் பல மாகாணங்களில் இருந்து முடிவுகள் வரவேண்டியிருப்பதால், இந்த கணிப்புகள் நிலையானதல்ல. 2016ஆம் ஆண்டு முதல் இந்த மாகாணங்களில் கணிக்கப்பட்டபடி முடிவுகள் அமையவில்லை.

    தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்படும்வரை அமைதி காக்கும்படி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், தேர்தலை அபகரிக்க ஜனநாயக கட்சி முயல்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.

    ஃபுளோரிடா உள்பட தென்னக மாகாணங்களில் குடியரசு கட்சிக்கு சாதகமான முன்னிலை நிலவரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மிஷிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில் வழக்கமாக ஜனநாயக கட்சிக்கு சாதகமாக உள்ள வாக்காளர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிய வேண்டியுள்ளது. இங்குதான் 2016இல் மிகவும் எதிர்பார்ப்பு நிலவியபோதும், ஹிலாரி கிளின்டன் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.

  8. முக்கிய மாகாணங்களில் என்ன நிலவரம்?

    50 மாகாணங்கள், அதிபர் பதவிக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்கள், தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கோடிக்கணக்கான வாக்காளர்கள் என அமெரிக்க தேர்தல் பற்றிய அறிய அதிக விஷயங்கள் இருந்தாலும், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாகாணங்கள் உள்ளன. அவற்றின் நிலவரத்தை பார்க்கலாம்.ஃபுளோரிடா: டொனால்ட் டிரம்பு முன்னிலை வகிக்கிறார். கியூபா-அமெரிக்கர்கள் வாழும் மியாமி டேட் பகுதி வாக்காளர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாக அறிய முடிகிறது.

    அரிசோனா: 1996ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிக்கு ஆதரவாக இந்த மாகாணம் வெற்றி வாய்ப்பை வழங்கியதில்லை. அது ஜோ பைடனுக்கு சாதகமான வாய்ப்பாகியிருக்கிறது. இளம் முற்போக்கு லத்தீன் அமெரிக்கர்கள் அங்கு அதிகம் வாழ்வதால் அவர்களின் ஆதரவு பைடனுக்கு சாதகமாக உள்ளது.

    விஸ்கான்சின், பென்சில்வேனியா: இந்த மாகாணங்களில் இன்னும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அதன் முடிவு தெரிய சில நாட்களாகலாம்.

  9. அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னணி நிலவரம்

  10. அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னணி நிலவரம்

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, டிரம்புக்கு டெக்சாஸில் வெற்றி வாய்ப்பு

    டெக்சாஸில் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு நிலவுகிறது. 38 தேர்தல் சபை வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணம், கடந்த 10 தேர்தல்களில் குடியரசு கட்சிக்கு சாதகமான முடிவையே அளித்து வருகிறது.

  12. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முன்னணி நிலவரம்

  13. டிரம்பின் குற்றச்சாட்டு - எச்சரிக்கும் தகவலை பதிவிட்ட ட்விட்டர்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் விதிகளை மீறி வாக்குப்பதிவு முடிந்த பிறகும் வாக்குரிமை செலுத்தப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

    ஆனால், அதே பதவுக்கு மேலே தேர்தல் அல்லது பிற உள்ளூர் நடைமுறையை தவறாக வழிநடத்தும் தகவல்கள் இடம்பெறலாம் என்றும் துல்லியமான தகவலை சரிபார்த்துக் கொள்ளுமாறும் தனது பயனர்களிடம் ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக, நாங்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். அவர்கள் தேர்தல் முடிவை அபகரிக்க முயல்கிறார்கள். அதை அவர்கள் செய்ய ஒருபோதும் விட மாட்டோம். தேர்தல் முடிந்த பிறகு வாக்களிக்க முடியாது என்று டிரம்ப் கூறியிருந்தார்.

  14. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முன்னணி நிலவரம்

  15. பைடன் Vs டிரம்ப் - வெற்றி உரையாற்றும் வாய்ப்பு யாருக்கு?

    டெலவேரில் தொண்டர்கள் இடையே உரையாற்றிய ஜோ பைடன், "இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்டத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு வாக்குகளும் எண்ணி முடிக்கப்படும்வரை தேர்தல் முடியவில்லை," என்று தெரிவித்தார்.

    இதே சமயம், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "எண்ணிக்கையில் நாங்கள்தான் அதிகம். ஆனால், அவர்கள் இந்த தேர்தலில் அபகரிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதை செய்ய நாங்கள் விட மாட்டோம். தேர்தல் முடிந்த பிறகு வாக்குப்பதிவு செய்ய முடியாது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு இன்றிரவு நான் உரையாற்றுவேன்." என்று கூறியுள்ளார்.

  16. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முன்னணி நிலவரம்

  17. டிரம்ப் Vs பைடன், வெற்றியை தீர்மானிக்கும் 3 அம்சங்கள்

  18. போர்க்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி - தொடரும் இழுபறி

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இருந்தாலும் போர்க்கள மாகாணங்களாக கருதப்படும் அரிசோனா (11), விஸ்கான்சின் (10), மிஷிகன் (16), பென்சில்வேனியா (20), ஓஹையோ (18), வடக்கு கரோலைனா (15), ஜோர்ஜா (16), ஃபுளோரிடா (29) ஆகியவற்றில் ஃபுளோரிடா நீங்கலாக மற்றவற்றில் நத்தை வேகத்தில் இருவருக்கும் இடையிலான போட்டியின் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன.

    ஃபுளோரிடா மாகாணத்தில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட வேளையில், அங்கு ஜோ பைடனை விட டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

    மற்ற முக்கிய மாகாணங்களான ஜோர்ஜா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிஷிகன், ஓஹையோ, வடக்கு கரோலைனா ஆகியவற்றில் முடிவுகள் யாருக்கு வேண்டுமானாலும் மாறலாம் என்ற வகையில் கள நிலவரம் உள்ளது.

  19. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முன்னணி நிலவரம்

  20. பைடனுக்கு இல்லினோயிஸில் வெற்றி வாய்ப்பு

    இல்லினோயிஸ் மாகாணத்தில் ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாக்காளர்கள் ஜனநாயக கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறார்கள். அதுவும் 1992ஆம் ஆண்டு முதல் அனைத்து அதிபர் தேர்தல்களிலும் ஜனநாய கட்சிக்கு சாதகமாகவே வாக்குகள் கிடைத்துள்ளன. அதுவே இம்முறையும் தொடரும் நிலை நிலவுகிறது.

    2016ஆம் ஆண்டு தேர்தலில் இந்த மாகாணத்தில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றிருந்தார்.