You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் தூக்கமில்லையா? என்ன செய்ய வேண்டும்?

    "நிறைய தண்ணீர் குடித்துவிட்டேன், கடந்த சில மணி நேரங்களாக மொபைலைக் கூட பார்க்கவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று என அறுநூறு வரை எண்ணிவிட்டேன். ஆனாலும் தூக்கம் வரவில்லை."

    சமீபத்தில் பலர் இவ்வாறு கூறுகின்றனர். ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் ?

    கொரோனா பரவுவதால் ஊரடங்கு நிலை அறிவித்த பிறகு தூங்க முடியவில்லை என பலர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவிற்கு முன் சரியான நேரத்தில் தூங்கியவர்கள் கூட இப்போது தூக்கமின்மை பிரச்சனையால் தவித்து வருகின்றனர்.

    சரியான நேரத்தில் தூங்குவதற்கு என்ன செய்யவேண்டும்?

  2. ஐரோப்பாவில் ஊரடங்கு தளர்த்தப்படலாம்

    கொரோனாவைரஸ் கட்டுக்குள் இருந்தால் இத்தாலியர்கள் கோடை விடுமுறையைக் கொண்டாடலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இத்தாலி பிரதமர்..

    இத்தாலி மட்டுமல்ல பிற ஐரோப்பிய நாடுகளும் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கான சமிஞ்சைகளைதர தொடங்கி உள்ளன.

    ஜெர்மன் சுற்றுலா ஆணையரும், இவ்வாறான கருத்தையே கூறி உள்ளார்.

    கொரோனா கட்டுக்குள் இருந்தால், அடுத்த எட்டு வாரங்களுக்குள் சுற்றுலா நடைமுறைகள் தளர்த்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.

  3. Zoom app மூலம் நடக்கும் திருமணங்கள்

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு

    மதுபானங்கள் மீதான கலால் வரியை 15 சதவீதம் உயர்த்தி உள்ளது தமிழக அரசு. 180 மி.லி மதுபானத்தின் சாதாரண பிராண்டுகளின் விலை 10 ரூபாயும், ப்ரீமியம் பிராண்டுகளின் விலை 20 ரூபாயும் உயரும்.

  5. முடக்கநிலைக்குப் பிந்தைய வாழ்க்கை - சீன மக்கள் பணிக்கு திரும்பியது எப்படி?

  6. ஆரோக்கிய சேது ஆபத்தானதா? - இந்திய அரசு விளக்கம்

    • ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிவதற்காக இந்திய அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது எனும் செல்பேசி செயலியில், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எத்திகல் ஹேக்கர் எலியட் ஆல்டர்சன் சுட்டிக்காட்டியதற்கு, செயலியை நிர்வகிக்கும் குழு இன்று விளக்கம் தெரிவித்துள்ளது.
    • ஆரோக்கிய சேதுவை நிர்வகிப்பவர்கள் அந்த ஹேக்கரைத் தொடர்புகொண்டு அவர் கூறிய குறைபாடுகளை கேட்டறிந்ததாகவும் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பயனாளிகளின் இருப்பிடம் குறித்த தகவல்களை அந்த செயலி சில நேரங்களில் சேகரிப்பதாக அவர் தெரிவித்ததார் என ஆரோக்கிய சேது தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
    • பயனாளர் ஒருவர் ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்யும் பொழுதும், தன் மதிப்பீட்டு பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும்போதும், தன்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து தாமாக முன்வந்து தரவுகள் கொடுக்கும் பொழுது அல்லது கோவிட் -19 இருப்பதாக உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் அந்த பயனாளி தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்படும் போதும் அவருடைய இருப்பிடம் குறித்த தரவுகள் தரவுகளை சேகரிக்கும் வகையிலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    • அவ்வாறு சேகரிக்கப்படும் இருப்பிடம் குறித்த தரவுகள் பாதுகாப்பாக மறையாக்கம் செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அந்த விளக்கத்தில் எதுவும் கூறப்படவில்லை.
    • செயலியின் நிரல்மொழி குறியீட்டில் பயனாளி இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை குறித்த விவரங்களையும், பாதிப்புக்கு உட்பட்ட பகுதியில் ஆரம் குறித்த விவரங்களையும் மாற்றுவதன் மூலம் கோவிட்-19 குறித்த புள்ளிவிவரங்களை செல்பேசியின் ஹோம் ஸ்கிரீனில் பயனாளி பெறமுடியும் என்று அந்த எதிகல் ஹேக்கர் தெரிவித்ததாகவும் அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆரோக்கிய சேது குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பயனாளி இருக்கும் இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்த தகவல்கள் ஏற்கனவே பொதுவெளியில் இருப்பதால் அது செயலியைப் பயன்படுத்துபவரின் தனிப்பட்ட விவரங்கள் எதிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்று ஆரோக்கிய சேது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தங்களது அமைப்புகளை தொடர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும் மேம்படுத்துவதாகவும் ஆரோக்கிய சேது செயலி எந்த ஒரு பயனாளியின் தனிப்பட்ட தகவலும் அபாயத்தில் இருக்கிறது என்பதை அந்த எதிகல் ஹேக்கர் நிரூபிக்கவில்லை என்று ஆரோக்கிய சேதுவை நிர்வகிக்கும் குழு தெரிவித்துள்ளது.
    • ஆரோக்கிய சேது செயலில் இருக்கும் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் தெரிந்தால் அதை உடனடியாக support.aarogyasetu@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • தங்களைத் தொடர்புகொண்டு, ஆரோக்கிய சேதுவில் உள்ள குறைகளை பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறப்பதை எதிர்த்து தி.மு.க. கூட்டணி போராட்டம்

    தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாளை இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் நாளை முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பிலிரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுவந்தன. பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நாளை போரட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. கூட்டணி அறிவித்துள்ளது.

  8. Saudi, UAE, Oman, Bahrain, Kuwait, Dubai -ல் வேலை செய்பவர்கள் நிலை?

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, கோவிட் - 19க்கு மருத்து கண்டுபிடித்ததாகச் சொன்ன திருத்தணிகாச்சாலம் கைது

    கோவிட் -19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் க. திருத்தணிகாச்சலம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் திருத்தணிகாச்சலம். இவர் தன்னை சித்த வைத்தியர்,இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார்.

    இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால்,தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு அரசில் உள்ள பலருக்கும் சவால் விடுத்தார் திருத்தணிகாச்சலம். இதையடுத்து சென்னையில் உள்ள இந்திய மருத்துவத் துறையின் இயக்குனர் காவல்துறையில் புகார் அளித்தார்.

    இந்த புகார்களை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் பிரிவு விசாரித்துவந்தது. இந்த நிலையில்,புகார் தெரிவிக்கப்பட்ட அன்றே ஒரு வீடியோவை வெளியிட்ட திருத்தணிகாச்சலம் தான் மருந்து கண்டுபிடித்ததற்காக தன்னைக் கைதுசெய்வதென்றால்கைதுசெய்யட்டும் என்று கூறினார்.

    இதற்குப் பிறகு அவரது செல்போன்'ஸ்விட்ச் - ஆஃப்'செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இந்த நிலையில்,புதன்கிழமை காலையில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.

    அவர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்54வது பிரிவு,பெருந்தொற்றுப் பரவல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு3,இந்திய தண்டனைச் சட்டத்தின்188வது பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

    அவர் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.

  10. கொரோனா நோயாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்ததா?

    மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளிகள் குறித்த தகவல்கள் கசிந்து இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுவது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மே 11 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  11. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் விமானப் பயணக் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளதா?

  12. அதிகரரிக்கும் உயிரிழப்புகள்: தாக்கு பிடிக்குமா பிரிட்டன்

  13. ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஜெர்மனி

    ஜெர்மனி பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை முன்பே தளர்த்திவிட்டது , குறிப்பாக மத நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துவிட்டது, பல கடைகளை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்துவிட்டது.

    இப்படியான சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜெர்மன் சான்சிலர்ஏஞ்சிலாமெர்கல் ஒரு வரைவு திட்டத்தைத் தீட்டி ஜெர்மனின் 16 மாகாண தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளர்.

    மெர்கலின் திட்டம் ஒப்புக் கொள்ளப்படும்பட்சத்தில் , ஒரு வாரகாலத்தில் ஒரு லட்சம் பேருக்கு 50 பேருக்கு மேல் கொரோனாவந்தால் சமூக முடக்கம் மீண்டும் பிறப்பிக்கப்படும்.

    ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, ஜெர்மனியில் 167,007 பேர் கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, மத்திய அரசு பணம் ஒதுக்கவில்லை - ப. சிதம்பரம்

    பணம் இல்லாமல் மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மத்திய அரசு தேவையான பணத்தை ஒதுக்குவதில்லை என காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டத்தில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  15. கொரோனாவைரஸ்: சமூக முடக்கம் 3.0க்கு பிறகு என்ன நடக்கும்? - மன்மோகன் கேள்வி

    காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தின் முதல்வர்களுடன் இன்று கொரோனாவின் நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டுள்ளார்.

    இதில் மாநில முதல்வர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்து கூறினர்.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “கொரோனாவின் காரணமாக 10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஊக்க தொகை தராமல் எப்படி மாநிலங்களில் ஆட்சி நடத்த முடியும்?,” என கேள்வி எழுப்பி உள்ளார்.

    மே 17க்கு பிறகு என்ன நடக்கும்? சமூக முடக்கத்தை நீட்டிக்க என்னவிதமான அளவுகோலை மத்திய அரசு வைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார் சோனியா காந்தி.

    சமூக முடக்கம் 3.0க்கு பிறகு என்ன நடக்கும் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறி உள்ளார்.

  16. 1500 புலம் பெயர் தொழிலாளர்களுடன்...

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியிலிருந்து 1500 புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து கொண்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில் பிகாருக்கு புறப்பட்டது.

  17. "தமிழகத்தில் யாரும் பட்டினியாக இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது"

  18. கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா?

    வுஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானதாக சொல்வதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ கூறியதை அடுத்து அவர் பொய் சொல்கிறார் என்கிறது சீனாவின் அரசு ஊடகம்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மைக் பாம்பேயோ இந்தக் குற்றச்சாட்டை வைத்தார். குளோபல் டைம்ஸ் என்ற அந்த செய்தித் தாளில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் பாம்பேயோ ஒரு சீரழிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஊகத்தில் சொல்லப்படுவது என்றும், இதற்கு குறிப்பான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

  19. பாலியல் ஆபாசப்படம் ஊரடங்கு காலத்தில் அதிகமாக பார்க்கப்படுவது ஏன்?, அறவாழி இளம்பரிதி, பிபிசி தமிழ்

    "ஆபாசப்படங்கள் பார்ப்பதில் எவ்வித தவறுமில்லை. அவை ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், அதற்கு அடிமை ஆகக்கூடாது. சமூகத்துக்கு முற்றிலும் எதிரான BDSM மற்றும் சிறார் ஆபாசப்படங்களை பார்ப்பதுதான் தவறு." - உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்

  20. டெல்லியில் 5000 தாண்டிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை

    டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5104 ஐ எட்டி உள்ளது. நேற்று மட்டும் 206 பேர் கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை 1468 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்தியேந்திரஜெயின் தெரிவித்துள்ளார்.