1. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தேர்வு தெரிவித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 257, 454 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,04,305 ஆகவும் உள்ளது. பலி எண்ணிக்கையில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலவரப்படி 49,391 பேர் கோவிட்- 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.
2. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களுக்குள் இக்குழு கலைக்கப்படும் என துணை அதிபர் மைக் பென்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். உலகிலேயே அதிகமானவர்கள் கோவிட் -19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை சுமார் 12 லட்சம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நபர் சுட்டுக் கொலை
கொரோனாவைரஸ் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அவரை சுட்ட நபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிங் லியூ எனும் அந்த ஆராய்ச்சியாளர் கொரோனா குறித்து பல முக்கியமான விஷயங்களைக் கண்டுபிடிக்கும் இறுதிக்கட்டத்தில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பீட்ஸ்பெர்க்கில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அவர் உடல் கிடந்ததாக கூறும் அதிகாரிகள், ஒரு கிலோமீட்டர் தொலைவில் காரில் ஹவோ எனும் நபர் உடல் கிடைத்ததாகவும் கூறுகிறார்கள் போலீஸார். ஆராய்ச்சியாளர் பிங் லியூவௌ சுட்டுவிட்ட்ய் பின் ஹவோவும் தன்னைத்தானே சுட்டு இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.
4. ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பை சந்தித்த நாடாக பிரிட்டன் உருவெடுத்துள்ளது.
இதுவரை அதிகமான உயிரிழப்புகளை சந்தித்த நாடாக இருந்த இத்தாலியில் 29,315 பேர் கோவிட்- 19 தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரிட்டனில் சமீபத்திய நிலவரப்படி 29,501 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடி அதிகமான உயிரிழப்புக்களை சந்தித்த நாடு ஆகியுள்ளது பிரிட்டன்
5. கோவிட் -19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் தணிகாசலம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர்,இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார். இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால்,தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
6. மே 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுபானம் விற்பனை செய்யப்பட்ட உள்ள நிலையில் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் மதுபானத்தின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக்-ல் விற்பனை செய்யப்படும் மதுபானம் மீது 15 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.