காஷ்மீர்: செல்ஃபோன் இணைய சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

காஷ்மீரில் செல்ஃபோன் இணைய சேவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக கூறுகிறது பி.டி.ஐ செய்தி முகமை.

சட்டப்பிரிவு 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவை 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காஷ்மீரில் காலவரையறையின்றி இணையதளத்தை முடக்கி வைப்பதை அனுமதிக்க முடியாது என்று, தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து ஜனவ்ரி 18 ஆம் தேதி, முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்பேசி சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அப்போதும் இணையதள சேவைகள் தொடங்கப்படவில்லை.

இப்படியான சூழலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செல்பேசி இணையதள சேவைகள், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: