You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்து: ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூடு - பலர் பலி
பிரசுரிக்கப்பட்டது
பேங்காக்கின் வட கிழக்கு பகுதியில் உள்ள நாக்ஹோன் ரட்சசிமா நகரத்தில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளிவரும் காணொளிகளில் துப்பாக்கிச்சூடு நடந்த இடம் ஓர் கடை விதி என்று தெரியவருகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஓர் வாகனத்தை திருடிக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தைக் கட்டுக்குள் கொண்டு வர காவல் துறை அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: