காக்கி சட்டையை விடுத்து பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய காவல்துறை
காக்கி சட்டையை விடுத்து பாரம்பரிய உடையில் பொங்கல் கொண்டாடிய காவல்துறை
பிரசுரிக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் காவலர்கள் விடுப்பு இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.
ஆகவே, சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக காக்கி உடையை விடுத்து பாரம்பரிய வேஷ்டி, சேலை அணிந்து காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து காவலர்கள் பொங்கல் கொண்டாடினர். காவலர்களுக்குள் நடந்த உரியடி போட்டியில் பெண் காவலர் உரியடித்து பரிசைத் தட்டி சென்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



