இலங்கை தேர்தல் முடிவுகள்: பதவி விலகும் அமைச்சர்கள் பட்டியல்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள பின்னணியில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவிப்புக்களை விடுத்துள்ளனர்.

இதன்படி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோரே தமது பதவிகளை விலகுவதற்கான அறிவிப்பை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளிலும் இருந்து தான் விலகுவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

தனக்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பிற்கும் ஹரின் பெர்ணான்டோ தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். .

இதேவேளை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேராவும் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

உடன் அமுலுக்குவரும் வகையில் தனது பதவியை இராஜிநாமா செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: