இந்தியா இலங்கை மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்களின் முடிவில் 264 ரன்கள் எடுத்த இலங்கை, இந்தியாவுக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலி்ல் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.
அணியின் தலைவர் கருணாரத்னே 10 ரன்களும், குசால் பெரேரா 18 ரன்களும், ஃபெர்ணான்டொ 20 ரன்களும், குசால் மென்டிஸ் 3 ரன்களும் எடுத்திருந்தனர்.
பின்னர் விளையாடிய மேத்யூஸூம், திருமான்னவும் நிதானமாக விளையாடி 100 மேலான ரன்களை சேர்ந்து எடுத்தனர். இலங்கையின் ரன் குவிப்பு அதிகரிக்க இவர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.
திருமான்ன அரை சதம் கடந்து வெளியேறிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய மேத்யூஸ் சதம் கடந்து 128 பந்துகளை சந்தித்து 113 ரன்களை எடுத்தார்.
50 ஓவர்களின் முடிவில் 264 ரன்கள் எடுத்துள்ள இலங்கை, இந்தியாவுக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
முதல் நான்கு விக்கெட்டுகளை சாய்த்ததில் பெரும் பங்கு தோனிக்கு உள்ளது. விக்கெட் கீப்பராக அற்புதமான கேட்சுகளைப் பிடித்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், மென்டிஸ் விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார்.
சிறப்பாக பந்து வீசிய பும்ரா மொத்தம் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.