நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நாளை காலை ஏழு மணிக்குத் துவங்குகிறது. 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இரானில் பிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்கள் - வெளியுறவுத் துறை அமைச்சர் சொன்னது என்ன?

    வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

    பட மூலாதாரம், Getty Images

    இஸ்ரேலுக்கு தொடர்புடையதாக கூறி, இரானால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் - இரான் இடையேயான மோதல் போக்கின் காரணமாக, இஸ்ரேலிய தொழிலதிபருக்கு சொந்தமான கப்பலை கடந்த சனிக்கிழமையன்று இரான் சிறைபிடித்தது.

    இந்த கப்பலில் பணியாற்றும் குழுவில் 17 இந்தியர்கள் அடங்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது.

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அதில், இரானின் வெளியுறத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பேசியதாக, சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் மாட்டியுள்ள 17 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமான சூழலை வைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலமான பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதையும் இரானிய அமைச்சரிடம் கூறியதாக தனது பதிவில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி இரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக இந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இன்றையும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  2. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சம்மன்

    நயினார் நாகேந்திரன்
    படக்குறிப்பு, தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட பணம்

    தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

    இதையடுத்து 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணத்தை எடுத்து செல்வதில் கட்டுபாடுகள் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஏப்ரல் 06ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்ட போது, 3.9 கோடி ரூபாய் பணத்தை ரயிலில் எடுத்துச் சென்ற மூவர் பிடிபட்டனர்.

    பிடிபட்ட மூவரும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை செய்து வந்ததும், அவர்களிடம் இருந்து பாஜக உறுப்பினர் அடையாள அட்டை இருந்ததும் தெரிய வந்தது.

    இந்த விவகாரத்தில் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்து சென்றதாக, அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    மேலும் தாம்பரத்தில் பணம் பிடிபட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட மூவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாஜக சட்டமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    சுமார் 4 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இந்தியா, உலகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.