You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நியூயார்க் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு - பலர் காயம்

நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள சுரங்க ரயில் பாதை நிலையத்தில் பலர் காயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள 36வது வீதி என்ற ரயில் நிலையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. தமிழ்நாடு வரும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு உதவ வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

    இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக அடைக்கலம் கோரி வந்தவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை உடனே உறுதிசெய்ய வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தமிழ் மக்களுக்கு போதுமான உதவி வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி கேட்டு எழுதியுள்ள கடிதத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

  2. டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜர்.

    இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

  3. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஏன்? அதன் செயல்பாடுகள் என்ன ?

  4. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் என்ன பேசினார்?

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரும் இலங்கை

    சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரியுள்ளது இலங்கை.

    பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், தற்போது கடனை திரும்பி தர இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

  6. பாகிஸ்தான் அரசியலில் அமெரிக்காவின் தலையீடு உள்ளதா?

  7. கொரோனா திரிபு XE தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை

    புதிய வகை கொரோனா திரிபு தொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

    XE வகை திரிபு கொரோனாவை குறித்து நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

  8. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரைக்கு பின்பும் தொடர்ந்த போராட்டம்

  9. வணக்கம் நேயர்களே!

    நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி, பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை விஷ்ணுப்ரியா ராஜசேகர் மற்றும் ஜோ மகேஸ்வரன் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  10. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின்போது மின்சார துண்டிப்பு இல்லை

    சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை (ஏப்ரல் 13, 14 மற்றும் 14) முன்னிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட போவதில்லை என இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    அதேபோன்று 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெறும் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் நிலவும் எரிபொருள் சிக்கல் இந்தியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் சற்று தணிந்துள்ளது என்று இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்துள்ளார்.

  11. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

    தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு இன்று காலை உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.

  12. ராஜபக்சவின் உரைக்கு பின்னும் அடங்காத போராட்டம்

  13. யுக்ரேனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு - யுனிசெஃப்

    யுக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் யுக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) திங்களன்று தெரிவித்துள்ளது.

    யுக்ரேனில் இருந்து திரும்பிய யுனிசெப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மேனுவல் ஃபோன்டைன், ''யுக்ரேனின் 7.5 மில்லியன் குழந்தைகளில் 4.8 மில்லியன் பேர் மிகக் குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்திருப்பது, 31 வருட மனிதாபிமானப் பணியில் நடந்ததை பார்க்காத ஒன்று'' என்றார்.

    "தங்கள் வீடுகளில் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்ட 3.2 மில்லியன் குழந்தைகளில், ஏறக்குறைய பாதி பேர் போதிய உணவு இல்லாமல் ஆபத்தில் உள்ளனர்" என்று ஃபோன்டைன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். மேலும், ''மேரியுபோல், கெர்சன் போன்ற நகரங்களில் நிலைமை மோசமாக இருக்கலாம்'' என்று அவர் எச்சரித்தார்,

    அங்கு தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகள் இல்லை மற்றும் உணவு மற்றும் மருந்து விநியோகம் தடைபட்டுள்ளது. இதற்கிடையில், யுக்ரேனில் ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்யா 1,21,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை யுக்ரேனில் இருந்து அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறி, தத்தெடுப்பு நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் ஒரு மசோதாவைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

    அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை "எந்த ஆதாரமும் இல்லை", ஆனால் UNICEF இந்த விஷயத்தை விசாரிக்கும் என்று ஃபோன்டைன் கூறினார்.

  14. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • யுக்ரேனில் உள்ள குடிமக்களின் பாதுகாப்புக்கும் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்குவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான தமது காணொளி சந்திப்பின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
    • இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு காணொளி வாயிலாக சிங்கள மொழியில் உரையாற்றினார்.
    • பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
    • சென்னை எண்ணூரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மிக அதிகமாக உள்ளதாக அறிவியல் ஆய்வில் தகவல்.
    • ரஷ்ய படையெடுப்பால், யுக்ரேனின் தெற்கு நகரமான மேரியோபோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்
    • இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை இரண்டு கை குழந்தைகளுடன், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 19 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
    • மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைக் கைவிடக் கோரி சட்டசபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்த்த வழக்கு தள்ளுபடி.