மணிப்பூர் தேர்தல்: பாஜக முன்னிலை
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆரம்பகட்ட நிலவரப்படி, பாஜக கூட்டணி 12 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மத்திய, மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த ஆட்சி நிர்வாகம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த வெற்றி என்று கூறியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
க. சுபகுணம்
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆரம்பகட்ட நிலவரப்படி, பாஜக கூட்டணி 12 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
காலை 9 மணி நிலவரப்படி, உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 24 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதேவேளையில், காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
பாஜக கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
117 தொகுதிகள் அடங்கிய பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளில், பாஜக 16 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உத்தரப் பிரதேசத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், “மக்கள் வெல்கின்றனர், ரவுடித்தனம் தோற்கிறது” என, உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோவாவின் தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ தத்தா கோயிலில் வழிபட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கிறது. காலை 8.30 மணி வரை உள்ள முடிவுகளின்படி, சமாஜ்வாதி கட்சி 4 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இந்த தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல்ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம் என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியாயின. அதில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூரில் பாஜகவுக்கு சாதகமான நிலையும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பும், கோவாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
கிட்டத்தட்ட கருத்துக் கணிப்புகளை நடத்திய ஊடகங்கள் மற்றும் தனியார் நிறுவன ஆய்வுகளும் இதே கருத்துக் கணிப்புகளையே வெளியிட்டுள்ளன. அவை உண்மையாகுமா பொய்யாகுமா, அவற்றின் நம்பகத்தன்மை என்ன போன்ற விவாதங்கள் வழக்கம் போல இந்த முறையும் சில கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
உத்தராகண்டின் 70 தொகுதிகள் , பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள் மற்றும், கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில் ஒரே காட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
மணிப்பூரின் 60 தொகுதிகள் இரு கட்டங்களாகத் தேர்தலைச் சந்தித்தன.
உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.
பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்டமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்டமாக நிறைவடைந்தது.
இன்று காலை 11 மணியளவில் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் பெரும்பாலும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
நாங்கள் விக்னேஷ்.அ மற்றும் லட்சுமி காந்த் பாரதி.
ஐந்து இந்திய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.
உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.
நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்: