தூத்துக்குடி துப்பாக்கி சூடு: விசாரணை ஆணையம் முன்பு முன்னாள் தலைமை செயலாளர் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் முன்பு துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார்.
தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று 36வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இந்த விசாரணைக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போது காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை செயலாளர் உள்பட 7 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து இன்று துப்பாக்கி சூடு சம்பந்தமாக முன்னாள் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்




