வேட்பாளர் மரணத்தால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்டம் கொடிசியா அரங்கில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி and ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. திருவண்ணாமலை திருப்புதல் தேர்வு கசிந்த விவகாரம்: சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் - ஆணையர் எச்சரிக்கை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் கசிந்தன.

    இந்த நிலையில் தேர்வுத்துறை பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே வெளியான அட்டவணைப்படி திருப்புதல் தேர்வு எவ்வித மாற்றமின்றி அதே தேதியில் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  2. விருதுநகர் மாவட்ட வேட்பாளர் மரணத்தால் தேர்தல் ஒத்திவைப்பு

    திமுக வேட்பாளர் கனி (எ) முத்தையா
    படக்குறிப்பு, உயிரிழந்த திமுக வேட்பாளர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனி (எ) முத்தையா மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அந்த வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி (மாவட்ட ஆட்சியர்) மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

    பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்தையாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் அவரை உறவினர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி முத்தையா உயிரிழந்தார். இந்நிலையில், திமுக வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து அந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  3. அதிமுகவில் இருந்து 42 பேரை நீக்கியதாக அறிக்கை

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றது, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் என 42 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  4. தமிழ்நாட்டில் இன்று 1,634 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,634 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 7,365 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 35,951 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  5. 48 மணி நேரத்திற்குள் ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்ரேன்

    யுக்ரேன் பாதுகாப்பு படையினர்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, யுக்ரேன் பாதுகாப்பு படையினர் சமீப நாட்களில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

    தனது நாட்டு எல்லையில் தீவிரமாகி வரும் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான சந்திப்பு ஒன்றை நடத்த நடத்த ரஷ்யா மற்றும் வியன்னா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முக்கிய உறுப்பு நாடுகளை யுக்ரேன் அழைத்துள்ளது.

    எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க வேண்டும் என்றும் தாங்கள் அலுவல்பூர்வமாக விடுத்த வேண்டுகோள்களை ரஷ்யா புறக்கணித்து விட்டதாக, யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் திட்டத்தில் 'வெளிப்படைத்தன்மைக்காக' அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்நாட்டுடன் சந்திப்பு ஒன்றுக்கு வேண்டுகோள் விடுப்பதே "அடுத்த நடவடிக்கை" என அவர் தெரிவித்தார்.

  6. ஓமன் கடற்படை தளபதி இந்தியா வருகை

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஓமன் கடற்படை தளபதி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ரியர் அட்மிரல் சைஃப் அல் ரஹ்பி இந்தியாவுக்கு வருகை தந்ததை அடுத்து, பாதுகாப்பு அமைச்சக வளாகத்தில் அவருக்கு இந்திய கடற்படைையச் சேர்ந்த 50 வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். டெல்லி வருகையைத் தொடர்ந்துஅவரும் இந்திய கடற்படை அதிகாரிகளும் இரு நாட்டு கடல்சார் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

  7. மூன்று மாநில தேர்தல் நிலவரம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    கோவாவில், மாலை 5 மணி நிலவரப்படி 75.29% வாக்குகளும், உத்தராகண்டில் 59.37% வாக்குகளும் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் 2ஆம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 60.44% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலும், உத்தராகண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

  8. 15 வருஷமா தெரியும்.. ஒரு தடவை கூட "I Love You"னு சொல்லி ப்ரபோஸ் பண்ணதில்ல..

  9. டெல்லியில் 586 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    டெல்லியில் ஒரு நாள் கொரோனா பதிவு 586 ஆக பதிவாகியுள்ளது.

    டெல்லியில் ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 1,092 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது டெல்லியில் மொத்தம் 3,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று டெல்லி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  10. பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் மனைவி கமில்லாவுக்கு கொரோனா பாதிப்பு

    பிரிட்டிஷ் அரச குடும்பம்

    பட மூலாதாரம், Reuters

    பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸின் மனைவியும் கோர்ன்வால் சீமாட்டியுமான கமில்லாவுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கிளாரன்ஸ் மாளிகை தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் வியாழக்கிழமை இவரது கணவரும் இளவரசருமான சார்ல்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அவர் தாம் பங்கேற்விருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

    இதையடுத்து கமில்லா கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

    இது குறித்து கிளாரன்ஸ் ஹவுஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இந்த விஷயத்தில் நாங்கள் அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்," என்று தெரிவித்தார்.

  11. "கோவையை கலவர பூமியாக்க முயற்சி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    எடப்பாடி பழனிசாமி

    கோவையை கலவர பூமியாக்க முயற்சி செய்கிறார்கள் என்று தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்டம் கொடிசியா அரங்கில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "அமைதி பூங்காவாக இருக்கும் கோவையை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இங்கே கலவரம் செய்து அதில் ஆதாயம் தேட முற்பட்டால் மக்கள் விரட்டியடிப்பார்கள்," என்று கூறினார்.

    அதிமுகவினர் சாதுவாக இருப்பார்கள் என நினைக்க வேண்டாம். எங்களுக்கு செய்யத் தெரியும், ஆனால் மக்கள் அதற்காக எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்படுகின்றபோது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். திமுகவினர் பரிசுப் பொருட்கள் எப்படி கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, இரட்டை இலைக்கு வாக்களித்து விடுங்கள்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. தமிழக காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது. கோவை குனியமுத்தூரில், திமுகவினர் மக்களுக்கு பொருட்கள் கொடுக்க வந்தபோது புகாரளித்த அதிமுகவின் கல்யாண சுந்தரத்தை கைது செய்து, விடுவிக்காமல் வைத்திருக்கின்றனர்.

    திமுகவினர் மீது புகார் வந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் புகார் கொடுப்பவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு மிரட்டுகிறார்கள். அதிமுக சட்டத்தின் ஆட்சி நடத்தியது, திமுக கூலிப்படையை வைத்துக் கொண்டு அதிமுக வேட்பாளர்களை மிரட்டுகிறது.

    திமுகவிற்கு தில், திராணி இருந்தால் எங்களை நேரடியாக தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும். வேட்பாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்பவர்களையும் மிரட்டக்கூடாது.

    எடப்பாடி பச்சை பொய் பேசுகிறார் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். திமுக, தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றியுள்ளார்களா? நீங்கள் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு இப்போது எதையும் நிறைவேற்றாமல் உள்ளீர்கள்," என்றார் பழனிசாமி.

  12. ஒரே நாடு, ஒரே தேர்தல்: பா.ஜ.கவின் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி பேசுவது ஏன்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

  13. கோவை யூ-ட்யூபர் மீது குவியும் புகார்கள், ரூ.300 கோடி மோசடி செய்ததாக சர்ச்சை

    யூ-ட்யூபர்

    கோவையைச் சேர்ந்த யூட்யூபர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.

    யூ-ட்யூப்பில் செயல்பட்டு வரும் Mr.money என்கிற யூ-ட்யூப் சேனலை நடத்தி வருபவர் விமல். இதன் மூலம் முதலீடு செய்வது தொடர்பான ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்கியும், நேரலை நிகழ்வுகளை நடத்தியும் வந்துள்ளார்.

    இவர் தமிழகம் முழுவதும் பலரிடம் அந்நிய செலாவணி, பங்குகள், கிரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாக, ஆல்பா என்கிற பெயரில் கணக்கை தொடங்கி பணம் வசூல் செய்துள்ளார்.

    ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால், அடுத்த 10 மாதத்திற்கு ரூ.18,000 தருவதாகக் கூறி பணம் வசூலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விமலிடமிருந்து பணமும் வரவில்லை, அவரை தொடர்பு கொள்ள முடியவுமில்லை என்று முதலீடு செய்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு தமிழகம் முழுவதும் இவர் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் ரூ.300 கோடி ரூபாய் வரை விமல் வசூல் செய்து ஏமாற்றியுள்ளதாக பாதிக்கபட்டவர்கள் தற்போது கூறியுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் விமலை தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில், கோவை மாவட்டம் காளப்பட்டியில் இயங்கி வந்த அவருடைய நிறுவனம் மற்றும் அவருடைய வீடு தற்போது மூடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், விமலிடம் பணம் முதலீடு செய்தவர்கள் இன்று கோவை வந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளை மீண்டும் ரயிலில் ஏற்றி அனுப்ப நடவடிக்கை

    புது டெல்லி விவசாயிகள்
    படக்குறிப்பு, டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழ்நாடு விவசாயிகள்

    டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகளை மீண்டும் தமிழ்நாட்டுக்கே திருப்ப அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    டெல்லி வந்துள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், இன்று காலையில் சுமார் 100 விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தச் சென்றனர்.

    ஆனால், டெல்லி ரயில்வே நிலைய சந்திப்பிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தபட்டனர். இதையடுத்து ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அவர்களை பேருந்தில் ஏற்றி நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அங்கிருந்து ரயில் மூலம் தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுத்தனர். ஆனால் விவசாயிகளுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யவில்லை என்று கூறி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து போராட்டம் நடத்தினர்.

  15. "இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடோ அஞ்சலியோ பிரதமர் மோதி செலுத்தவில்லை"- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    "பிரதமர் மோதி, விவசாயிகளின் கடின உழைப்பை 2-3 தொழிலதிபர்களுக்கு கொடுக்க முயன்றதால், ஒரு வருட காலமாக பஞ்சாப் விவசாயிகள் பசியுடன் குளிரில் நின்றதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், விவசாயிகளின் போராட்டம் காரணமாக உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி கூட செலுத்த முடியவில்லை; இழப்பீடும் தரவில்லை. ஆனால் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரசுகள் அதை செய்தன," என்று ராகுல்காந்தி கூறினார்.

  16. திருமணமான மணக்கோலத்தில் மணப்பெண்ணுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்

    திமுக வேட்பாளர்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாநகராட்சிக்குட்பட்ட குமாரசாமிபட்டி பகுதி திமுக செயலாளரும், 14வது கோட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான சாந்தமூர்த்திக்கும் சேலம் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த கலையரசிக்கும் இன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த நிலையில் மணப்பெண் கலையரசியுடன் மணக்கோலத்தில், தான் போட்டியிடும் 14ஆம் கோட்டத்திற்கு உட்பட்ட வின்சென்ட், குமாரசாமிபட்டி, அங்கம்மாள் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது கணவருக்கு ஆதரவாக புது மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

  17. காதலர் தினம் பிப்ரவரி 14: மதங்களை கடந்து காதல் திருமணம் செய்த வழக்கறிஞர் இணை

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  18. "திமுக மீது ஆளுநரிடமும் புகார் தெரிவிப்போம்"- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    எஸ்.பி.வேலுமணி

    கோவை மாவட்டம் குனியமுத்தூரில் நேற்று இரவு திமுகவினர் பரிசுப் பொருள் கொடுத்ததாக அதிமுகவினர் புகார் தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திமுகவினர் கரூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து ரவுடிகளை அழைத்து வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த அதிமுகவினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்கிறது. திமுக தோல்வி பயத்தில் மக்களை அச்சுறுத்தும் வேலைகளை செய்து வருகிறது.

    இது தொடர்பாக ஆளுநரிடமும் சென்று புகார் அளிப்போம். கோவை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்கானிப்பாளரும் தலையிட்டு கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடக்க வழிவகை செய்ய வேண்டும்", என்றார்.

  19. "2019ஆம் ஆண்டு இதே நாளில், புல்வாமாவில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்"- பிரதமர் நரேந்திர மோதி

    பிரதமர் நரேந்திர மோதி
  20. ராமநாதபுரம் சரணாலயங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு

    ராமநாதபுரம்

    பட மூலாதாரம், RAMANATHAPURAM FOREST

    ராமநாதபுரம் வனத்துறை சார்பில் சரணாலயங்கள், நீர்நிலைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், கடந்த ஐந்து ஆண்டுகளை விட இந்த பருவத்தில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது என பறவைகள் கணகெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில், சித்திரங்குடி, தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனூர் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது.

    இந்த சரணாலங்களில் கடந்த இரண்டு நாட்களாக இரண்டாம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பகான்ஜக்தீஸ் சுதாகர், ராமநாதபுரம் வனசரகர், சென்னை மற்றும் மதுரையை சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த கணக்கெடுப்பின் போது சரணாலயங்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நீர் நிலை பகுதியில் பறவைகள் அதிகளவு கண்டறியப்பட்டுள்ளது.

    சிக்கல் பகுதியில் உள்ள கண்மாய்களில் பிளமிங்கோ பறவைகள் காணப்பட்டன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 75 சதவீத கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் இரண்டு மூன்று முறை பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    நத்தை கொத்தி நாரை, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள் கொக்குகள் உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்தாண்டு கணக்கெடுப்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் காணப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது என ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.