உலகப் புகழ்
பெற்ற சேலம் மாம்பழத்தின் இந்த ஆண்டு சீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழப்பிரியர்கள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால்
வியாபாரிகளோ பெரும் சோகத்தில் உள்ளனர் .
ஏன் இப்படி? இந்த மாழ்பழ சீசனில் என்னதான் நடக்கிறது?
முக்கனிகளில்
முதல் கனியான மாம்பழம், பழங்களின் ராஜா என்று போற்றப்படுகிறது.மா ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது.
ஆண்டுக்கு
சுமார் 1.10 கோடி டன்கள் மாம்பழம் இந்தியாவில் இருந்து
உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம்தான் அதிகளவில் மாங்கனிகளை
உற்பத்தி செய்கிறது என்றாலும் தென்னிந்திய அளவில் ருசியும், வாசனையும் மிகுந்த மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து மட்டுமே
உற்பத்தியாகின்றன.
மாவில் 60-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தபோதிலும் அதிகளவில் விளையும் தோத்தாபுரி
எனப்படும் பெங்களூரா (கிளி மூக்கு) மாங்காய்களே அதிகமானவர்களால் அறியப்பட்டுள்ளது.
இந்த வகை பழங்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகளவில்
விளைகின்றன.
ஆனால் சேலம், சுற்றுப் பகுதிகளான கருமந்துறை, தும்பல், பேளூர், வாழப்பாடி, சன்னியாசிகுண்டு, மல்லூர்,வரகம்பாடிபனைமரத்துப்பட்டி, சங்ககிரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேட்டூர், மேச்சேரி ஓமலூர், ஏற்காடு அடிவாரம், ஆடையூர் சுற்று வட்டார பகுதிகளில் விளையும்
சேலம் பெங்களூரா, குண்டு (எ) அல்போன்ஸா, மல்கோவா, இமாம்பசந்த், நடுசாளை, செந்தூரா, குதாதத், மல்லிகா ஆகிய வகையான மாம்பழங்கள் மட்டுமே பொதுமக்கள், குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுபவைகளாக உள்ளன.
எந்த பகுதி
மாங்கனிக்கும் இல்லாத சிறப்பாக சுவையுடன் கூடிய மணமும் கொண்டிருப்பவை சேலம்
மாங்கனிகள் ஆகும். வீட்டுக்குள் மாம்பழம் வைத்திருந்தால் அதன் வாசனை வீதி வரை
நுழைந்துவிடும் என்று கூறுவது வழக்கம். சேலத்தில் நிலவும் தட்பவெப்பநிலையும், மண் வளமுமே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
இந்த வகை
மாம்பழங்கள் சேலத்தில் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் டன்
விளைகின்றன.
ஆனால்
வழக்கத்துக்கு மாறாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரானா வைரஸ் தாக்கத்திதால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது .
இருப்பினும்
ருசி மிகுந்த மாம்பழங்கள் சேலம் கடை வீதியில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களுக்கு வரத்தொடங்கியுள்ளன.
அதே சமயம்
தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் வெளி
மாநில மாம்பழங்களும் வரத் தொடங்கியுள்ள நிலையில் ஞாயிறு மற்றும் புதிய இரவு நேர
ஊரடங்கு அமலில் உள்ளதால் மாம்பழ வியாபாரிகளை இது சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து
சேலம் மாங்காய், பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் சீனிவாசன்கூறுகையில், “வழக்கமாக மார்ச் மாதத்தில் மாம்பழ சீசன்
தொடங்கும். இந்த ஆண்டு தாமதாகத் தொடங்கினாலும் மே மாதத்தில் வரத்து மிகவும்
அதிகமாக இருக்கும். ஆனால் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு , தினசரி இரவு
ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளதால் ,
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் , வடமாநிலங்களுக்கும் , மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க முடியவில்லை .
சேலம்
அருகேயுள்ள வரகம்பாடியில் விளையும் ருசியும் வாசனையும் மிகுந்த மாம்பழங்கள்
பிரிட்டிஷ் காலத்தில் இங்கிலாந்து அரண்மனைக்கு அனுப்பப்படுவது வழக்கமாக
இருந்துள்ளது.
மேலும்
மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் விளையும் மாம்பழம் குண்டு (எ) அல்போன்ஸா
மாம்பழம்தான் சிறப்பு வாய்ந்தவை.
அந்தரத்தினகிரிக்கே மாங்கன்றுகள் சேலத்தில் இருந்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுச் செல்லப்பட்டன.
இப்படிபல்வேறு பெருமைகள் கொண்ட சேலம் மாம்பழங்களின் விற்பனை கடந்த ஆண்டு கொரானாவால் பாதிக்கப்பட்டது
இந்த ஆண்டாவதுஅமோகமாக விற்றனையாகும் என்று வியாபாரிகளும் , விவசாயிகளும் நம்பினோம் .ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளஊரடங்கால் வியாபாரம் முடங்கி பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது” என்றார் .