கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - பினராயி விஜயன்

பட மூலாதாரம், ANI
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் தென் மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதுவரை கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 5 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாகவும், 55 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில மீட்புப்படைகள் இணைந்து அவசர கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இடுக்கி, கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
