இரானிடம் அணுகுண்டை தயாரிக்கும் திறன் உள்ளது: இரானிய அணுசக்தி குழு தலைவர்

இரானின் அணுசக்தி முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி, தமது நாட்டுக்கு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், ஆனால் அத்தகைய திட்டங்கள் தற்போது எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் இரானின் அதிஉயர் மத குருவின் ஆலோசகரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • சர்வதேச சதுரங்கப் போட்டியான 44ஆவது செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணி வீரர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
    • உலகின் முன்னோடி சுற்றுச்சூழல் விஞ்ஞானியான ஜேம்ஸ் லவ்லாக் தனது 103 வது பிறந்தநாளில் பிரிட்டனில் இறந்தார்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பளுதூக்குதலில் மட்டும் 2 தங்கம் உட்பட இதுவரை ஐந்து பதக்கங்கள் பெற்றுள்ளது.
    • சிவ சேனை கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. அவர் தன் தாய்க்கு விடை கொடுக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • இரானின் அணுசக்தி முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி, தமது நாட்டுக்கு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், ஆனால் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
    • ஹைதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி ராமா ராவ் மகள் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
  2. கோவை: செங்கல் சூளைகளுக்கு ரூ.433 கோடி அபராதம்

    கோவை

    கோவை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைகள் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த ஆண்டு முழுவதுமாக சீல் வைக்கப்பட்டன.

    சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 177 செங்கல் சூளைகள் மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டன.

    இது தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் நடைபெற்று வருகிறது.

    இத்தனை ஆண்டுகளாக செங்கல் சூளைகள் ஏற்படுத்திய சூழலியல் பாதிப்புகளையும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட செம்மண், செங்கல் அளவையும் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க சிறப்பு குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த சிறப்பு குழு தற்போது தன்னுடைய அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில் சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகள் ஒரு கோடியே பத்து லட்சம் கன மீட்டர் அளவிலான செங்கற்களை உற்பத்தி செய்துள்ளதாக கணக்கிட்டுள்ளது.

    இதன் மூலம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கு ஈடாக ரூ.373.74 கோடி, சூழலியல் பாதிப்புகளுக்கு ரூ.59.92 கோடி என மொத்தம் ரூ.433.66 கோடி அபராதம் விதிக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல் சூலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஏதாவது அரசு நிறுவனத்தை வைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  3. இரானிடம் அணுகுண்டை தயாரிக்கும் திறன் உள்ளது - இரான் அணுசக்தி முகமை தலைவர்

    இரான்

    பட மூலாதாரம், Getty Images

    இரானின் அணுசக்தி முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி, தமது நாட்டுக்கு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், ஆனால் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரை மேற்கோள்காட்டி இரானிய செய்தி முகமையான ஃபார்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் இரானின் அதிஉயர் மத குருவின் ஆலோசகரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். இரானில் இதுபோன்ற நுட்பமான தகவல்களை உயர்நிலையில் இருப்பவர்கள் பொதுவெளியில் வெளியிடுவதில்லை.

    அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பிறகு இரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியது. எனினும், இரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கத்திற்காகவே என்று தொடர்ந்து கூறி வருகிறது.

    ஆனால், இரானின் இந்தக் கூற்றை மேற்கு நாடுகள் ஏற்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான காலம் மெல்ல, மெல்ல கடந்து கொண்டிருப்பதாக அவை கூறுகின்றன.

    இரானின் அணுசக்தி திட்டம் திரும்பபெறப்படும் நிலையை அடையக்கூடாது என்று அந்நாட்டின் அணுசக்தி முகமையின் தலைவர் மொஹம்மத் எஸ்லாமி கூறுகிறார்.

    இவரது இந்த கருத்து, சமீபத்தில் இரானின் அதி உயர் தலைவர் தலைவரின் ஆலோசகர் கமால் கராசியின் கூற்றை மீண்டும் வலியுறுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.

  4. கோவை - 'தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்’ வாசகத்துடன் பிரதமர் மோதியின் போஸ்டர்

    செஸ் ஒலிம்பியாட்

    44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் வரை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோதியின் படம் இடம்பெறாத விவகாரம் தொடர்பாக திமுக - பாஜக இடையே விவாதப் பொருளானது.

    இது தொடர்பான வழக்கில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவரின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டை மையப்படுத்தி கோவை மாநகரம் முழுவதும் பாஜகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

    அதில் தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என்கிற வாசகத்துடன் பிரதமர் நரேந்திர மோதி செஸ் விளையாடுவது போன்ற சுவரொட்டிகளை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

  5. கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: ஐந்து பேரிடம் விசாரணை

    கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்

    கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஐந்து பேரை குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி அனுமதி அளித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கடந்த 17ஆம் தேதியன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பிறகு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஜூலை 18ஆம் தேதியன்று மக்கள் அதிகார அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் பிரபு உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தது. இதனையடுத்து இவர்கள் ஐந்து பேரையும் 24 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி அனுமதி வழங்கி உள்ளார்.

  6. என்.டி ராமா ராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு உயிரிழப்பு

    ஹைதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி ராமா ராவ் மகள் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அவரது உடலை, உடல் கூராய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, மத்திய பிரதேசம் - ஜபல்பூர் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு

    மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மருத்துவமனையில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டனர் என்று ஜபல்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. "திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாது"

    தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யும் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாது என்று மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. ஜி.எஸ்.டி மூலம் ஒன்றிய அரசின் வசூல் வேட்டை அமோகம் - சு.வெங்கடேசன் ட்வீட்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    ஜி.எஸ்.டி தொடர்பான தனது கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில், மாநில உரிமைகளுக்கு எதிரானவை என்று எம்.பி சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் செய்த ட்வீட்டில், "ஜி எஸ் டி - ஒரு பக்கம் ஒன்றிய அரசின் வசூல் வேட்டை அமோகம். இன்னொரு பக்கமோ, மாநில அரசுகளுக்கு 'இழப்பீடு நீட்டிப்பு' மறுப்பு

    ‘ஜி எஸ் டி இழப்பீடு தொடருமா?’ என்ற எனது கேள்விக்கு நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல்,” என்று தெரிவித்துள்ளார்.

  10. இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்

    • சென்னையிலிருந்து 59 கி.மீ தொலைவில் உள்ள பரந்தூரில் 2 வது விமான நிலையம் அமைக்கப்படும் - வி.கே.சிங்
    • மெரினா கடற்கரையில் 134 அடி உயரமுள்ள பேனா நினைவு சின்னம் - தமிழக அரசு கடிதம்
    • மக்களவையில் 4 எம் பிக்கள் இடைநீக்கம் ரத்து - ஓம் பிர்லா
    • மக்களவையில் பதாகைகளை ஏந்தி வரக்கூடாது - சபாநாயகர் ஓம் பிர்லா
    • நீர் நிலை ஆக்கிரமிப்புக்கு எச்சரிக்கை - உயர்நீதி மன்றம்
    • ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட விழா
    • டெல்லி காவல்துறை ஆணையராக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றார்
    • இயல்பை விட வேகமாக சுழலும் பூமி 24 மணி நேரத்திற்கு முன்ன்பாகவே சுழல்கிறது - விஞ்ஞானிகள்
    • விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் அமளி - அவை அலுவல் தள்ளிவைப்பு
    • ஜி.எஸ்.டி தொடர்பான தனது கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில், மாநில உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்று எம்.பி சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.
  11. ஊரின் மொத்த குழந்தைகளையும் பேருந்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற ஆட்சியர்

    கரூர் அருகேயுள்ள கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை, பேருந்தில் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    'பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு' என்ற திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த வாலியாம்பட்டி என்ற கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக குழந்தைகளை அனுப்பாமல் இருந்துள்ளனர்.

    இதனை அடுத்து கரூர் மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வித்துறை இணைந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 'பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு' என்ற திட்டத்தின் கீழ் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியரிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தின.

    கரூர் ஆட்சியர்

    அப்போது, "பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை" என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் தங்களது குறைகளை அப்பகுதி மக்கள் கூறினர்.

    இதையடுத்து இன்று வலியாம்பட்டி கிராமத்திலிருந்து தனி வழித்தடம் அமைக்கப்பட்டு, பேருந்தில் 24 மாணவ மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் பயணித்தார். பின்னர், ஆர்.டி. மலையில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்து சென்று மாணவ மாணவிகளை சேர்த்தார்.

    இதனையடுத்து தங்களது குழந்தைகள் கல்வி கற்க முயற்சி மேற்கொண்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

    கரூர் ஆட்சியர்
  12. ஆப்கானிஸ்தான் - இரான் எல்லையில் மோதல்: ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கும் தாலிபன்

    file image

    பட மூலாதாரம், Getty images

    ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன் அமைப்பினர் இரானிய எல்லைப் படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோதல் இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

    எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக தாலிபன் தெரிவித்துள்ளது.

    இந்த மோதல் ஞாயிறன்று ஆப்கானிஸ்தானில் உள்ள நிம்ரோஸ் மாகாணத்திற்கும் இரானில் உள்ள ஹிர்மண்ட் மாகாணத்துக்கும் இடையில் நடைபெற்றது.

    இரு நாடும் ஒன்றன் மீது ஒன்று குற்றஞ்சாட்டுகிறது.

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி சுமார் ஒரு வருட காலம் ஆகிறது.

    கடந்த மாதம் இதே பகுதியில் தங்களது பாதுகாப்புப் படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக இரான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  13. ஹெல்மெட் அணிந்து வந்தால் 5% தள்ளுபடி - உணவகங்கள் அறிவிப்பு

    காவல்துறை பேரணி

    ஹெல்மெட் அணிந்து உணவகங்களுக்கு வருபவர்களுக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி என மயிலாடுதுறை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    மயிலாடுதுறையில் மாவட்ட உணவு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி இன்று பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

    மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி நிஷா பங்கேற்று விலையில்லா ஹெல்மெட்டுகளை வழங்கினார். தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

    பேருந்து நிலையத்தில் புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சலுகைகள் அறிவிக்க வேண்டும் என்று அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து, "ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு மயிலாடுதுறை நகரில் 20 சதவீதம் ஹெல்மெட் விலையில் தள்ளுபடி செய்வது என்றும் ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு விற்பனை விலையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்" என அறிவித்தனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி நிஷா, "கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 400க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

  14. ஆரத்தியுடன் விடை பெறும் சஞ்சய் ராவத்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    மகாராஷ்டிர மாநிலம் சிவ சேனை கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு கிளம்பும் முன் தாய்க்கு விடை கொடுக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  15. ஆன்லைனில் வாங்கிய ஷவர்மா கெட்டு போனதாக புகார்: தற்காலிகமாக கடையை மூட உத்தரவு

    shawarma

    பட மூலாதாரம், Getty Images

    கோவை மாவட்டம் அன்னூர் சத்தியமங்கலம் சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே செயல்பட்டு வரும் கோகுல் என்பவருக்கு சொந்தமானஷவர்மா கடையில் ஆன்லைன் மூலம் சவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதனை ஆண்ட்ரூஸ் சாப்பிட்ட போது ஒவ்வாமையால் வாந்தி வந்ததுடன், ஷவர்மாவில் கெட்டுப்போன வாசம் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து நண்பர்களை அழைத்துக் கொண்டு கடைக்கு நேரில் சென்ற ஆண்ரூஸ் அங்கு கடை ஊழியர் மற்றும் உரிமையாளர் கோகுலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அங்கிருந்த காலாவதியான மசாலா பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கடை சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக கூறி தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் உணவு பண்டங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

  16. மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: திருமாவளவன்

    திருமாவளவன்

    ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில், மின்கட்டணம் உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

    " நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் 24 உறுப்பினர்கள் கடந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பாசிச பாஜக அரசு என்பதற்கு இந்த நடவடிக்கை சான்றாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தக் கூடிய வகையில் மத்திய புலனாய்வு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அரசு அரசு சார்ந்த தலைவர்களை மத்திய புலனாய்வு நிறுவனங்களை கொண்டு அச்சுறுத்துகிறார்கள் என்று பேசினார். மேலும், " விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு, விலை வாசி உயர்வு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று விவாதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் அதுதான் ஜனநாயகம்" என்று பேசிய அவரிடம், மின்கட்டண உயர்வு குறித்து கேட்டபோது, "தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் கருத்து சொல்லி இருக்கிறார். அந்த கருத்தை நியாயப்படுத்த முடியாது. சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும் மின்கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும்" என்று கூறினார்.

  17. துப்பாக்கி எடுப்போரை துப்பாக்கியால் கையாள வேண்டும் : தமிழக ஆளுநர் பேச்சு

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    "வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது. துப்பாக்கியை பயன்படுத்துபவர் துப்பாக்கியால்தான் கையாளப்பட வேண்டும். தேசிய ஒற்றுமைக்கும் நம்பிக்கைக்கும் எதிராக பேசுவோரிடம் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. சரணடைவதானால் ஒழிய, கடந்த 8 ஆண்டுகளில், ஆயுதம் தாங்கிய எந்தவொரு குழுவிடமும் பேசவில்லை" என்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    மேலும், பாகிஸ்தான் நமக்கு நட்பா பகையா என்பதில் நமக்கு தெளிவு வேண்டும் என்றும் அவர் அங்கு பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

  18. இன்றைய நாளின் தொடக்கத்தில் சில செய்தித்துளிகள்

    • சர்வதேச சதுரங்கப் போட்டியான 44ஆவது செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணி வீரர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பளுதூக்குதலில் மட்டும் 2 தங்கம் உட்பட இதுவரை ஐந்து பதக்கங்கள் பெற்றுள்ளது.
    • கோவை அன்னூரில் ஆன்லைனில் வாங்கிய சவர்மா கெட்டு போனதாக புகார் எழுந்த நிலையில், கடையை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவு
    • சிவ சேனை கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. அவர் தன் தாய்க்கு விடை கொடுக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
    • வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது. துப்பாக்கியை பயன்படுத்துபவர் துப்பாக்கியால்தான் கையாளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
  19. வணக்கம் நேயர்களே!

    வணக்கம் நேயர்களே

    பட மூலாதாரம், Getty Images

    நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய தினம் நாடாளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் விவரங்கள், காமன்வெல்த் போட்டி போன்றவை தொடர்பான விவரங்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் ட்விட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலைப்பக்கத்தைஇந்த இணைப்பில்பார்க்கலாம்