கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - பினராயி விஜயன்
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் தென் மாவட்டங்களில் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதுவரை கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 5 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாகவும், 55 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில மீட்புப்படைகள் இணைந்து அவசர கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இடுக்கி, கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.