நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறோம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய செய்தித் துளிகள் இதோ...
- இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவராகியுள்ளார்.
- இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் சத்திய பிரமானம் செய்துகொண்டுள்ளார்.
- மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு பிரசாரங்கள் கோவையில் தொடக்கம்
- கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் விடுதி அரசின் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மிதமான அறிகுறிகள் தென்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- தான்சானியாவிலிருந்து வந்த நபரிடமிருந்து 8.86 கோடி ரூபாய் மதிப்பிலான 1.266 கிலோ ஹெராயினை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
- அமலாக்கத்துறை சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் இன்று விசாரணை நடந்தியது.