"கோட்டாபய வெளியேறினாரா? எங்களுக்கு மொத்த ராஜபக்ஷ குடும்பமும் சிறையில் இருக்க வேண்டும்' - மக்கள் கோபம், டெஸ்ஸா வோங், கொழும்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவில் தரையிறங்கிய தகவலை அந்நாட்டு விமானப்படையும் பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளன.
கொழும்பு நகரில் அரசு எதிர்ப்பாளர்களின் முக்கிய போராட்ட களமான காலி முகத்திடலில் -இன்று காலையில் திரண்ட பொதுமக்களில் சிலர், கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியிருப்பது தொடர்பாக கோபத்துடன் கருத்துக்களை பகிர்ந்தனர்.
“எங்களுக்கு இது பிடிக்கவில்லை. நாங்கள் அவரை நாட்டுக்குள்ளேயே வைத்திருக்க விரும்பினோம். எங்களின் பணம் திரும்ப வேண்டும். அனைத்து ராஜபக்ஷ குடும்பத்தினறையும் திறந்தவெளிச் சிறையில் அடைக்கவே விரும்புகிறோம் ”என்று கடந்த 43 நாட்களாக காலி முகத்திடல் மைதானத்தில் தங்கியிருந்த எதிர்ப்பாளர் ஜி.பி.நிமல் கூறினார்.
"இது நியாயம் இல்லை," என்றும் அவர் என்னிடம் கூறினார்.
நாங்கள் மற்ற போராட்டகாரர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, மாலத்தீவில் இருந்து சமீபத்தில் இலங்கைக்கு வந்ததாகக் கூறி ஒரு இளைஞனும் எங்களுடன் சேர்ந்தார்.
ராஜபக்சே தனது நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்பட்டபோது, அவர் லேசாக முணுமுணுத்து சிரித்தார். "இது மிகவும் சங்கடமானது. இது நல்லதல்ல. மாலத்தீவிலும் ஊழல் நிறைந்துள்ளது. அங்கும் இதே திசை நோக்கியே நிகழ்வுகள் செல்கின்றன," என்றார்.




