"நேர்மையான தலைவர்களே எங்களுக்கு தேவை" - இலங்கை போராட்டக்காரர்

இலங்கை பிரதமர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிக்சன் சந்திரநாதன் என்பவர் பிபிசியிடம் கூறுகையில், இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க, மக்களிடம் ஒத்துழைப்பை கோரியுள்ள நிலையிலும், தாங்கள் இன்னும் "போராடுவதாக" தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டத்தால் தான் "இன்று மகிழ்ச்சியாக உணர்வதாக" அவர் தெரிவித்தார். ஆனால், தலைமையில் முழு மாற்றம் வரும் வரையில் தான் முழு திருப்தியடைய போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
"கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ரணில் உள்ளிட்ட அமைச்சர்களும் வீட்டுக்கு செல்ல வேண்டும். உண்மையான, நேர்மையான தலைவர்களே இலங்கையை கட்டமைக்க எங்களுக்குத் தேவை" என அவர் தெரிவித்தார்.









