ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தில் சூறையாடல்

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் குண்டர்கள் புகுந்து சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. அமெரிக்காவில் தீவிரமாகும் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க பைடன் அரசு நடவடிக்கை

    இரு பாலின திருமணம்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க செனட் சபை, தனி நபர்கள் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்றியுள்ளது - இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இயற்றப்பட்ட மிக முக்கியமான துப்பாக்கி சட்டமாகும்.

    துப்பாக்கி வாங்கும் இளம் பிரிவினர் மீது கடுமையான சோதனைகளை நடத்தவும் அச்சுறுத்தலாகக் கருதப்படும் மக்களிடமிருந்து துப்பாக்கிகளை அகற்றவும் மாநிலங்களை இந்த சட்டம் ஊக்குவிக்கிறது.

    துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், 15 குடியரசு கட்சியினர் செனட்டில் ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து மசோதாவை அங்கீகரித்தனர். அதிபர் ஜோ பைடனால் சட்டத்தில் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், கீழவையின் ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது.

    இதையொட்டி, ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள (மக்கள்) பிரதிநிதிகள் சபையில் விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  2. குஜராத் கலவர வழக்கு: மோதிக்கு எதிரான மனு தள்ளுபடி - முக்கிய தகவல்கள்

  3. தாய்ப்பால் பரிசுத்தமானதா? ஃபார்முலா பாலை குழந்தைகளுக்கு தரலாமா?

  4. ஆப்கன் நிலநடுக்கம்: உணவோ, தங்குமிடமோ இல்லாமல் தவிக்கும் மக்கள்

  5. இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை: ஓ.பி.எஸ் தகவல்

    ஓ.பன்னீர்செல்வம்

    பட மூலாதாரம், O.PanneerSelvam

    படக்குறிப்பு, ஓ.பன்னீர்செல்வம்

    குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக கூட்டணி வேட்பாளர் மனுதாக்கல் செய்யும் நிகழ்விற்காகவே டெல்லி வந்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை: ஓ.பி.எஸ் தகவல் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகாரிக்கப்படுகிறது. வரும் 11ம் தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றனர். நேற்று நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால், இதை ஓபிஎஸ் தரப்பு மறுத்துள்ளது. இது குறித்து பிபிசி தமிழ் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டதற்கு, 'குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று மனுதாக்கல் செய்தார். இதற்காவே டெல்லி வந்ததாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்திடம் எந்த மனுவும் அளிக்கவில்லை.' என்று உறுதிப்படுத்தினார்.

  6. BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

  7. பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கித் தர பணம் வாங்கியதாக பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்

  8. திரௌபதி முர்மூ: பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரின் பின்னணி

  9. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்: திரெளபதி முர்மு வேட்பு மனுத்தாக்கல்

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்,

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர், பழங்குடி இன தலைவர் திரெளதி முர்மு பாரத ஜனதா கட்சி கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதையடுத்து, குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. கண்ணதாசன் இன்று இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் ஜெயித்திருப்பாரா?

    கண்ணதாசன் பிறந்த தினம் இன்று. இன்றைய சூழலில் கண்ணதாசன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளிக்கிறார் 'இசைக்கவி' ரமணன். அந்தக் காணொளி உங்களுக்காக...

  11. அதிமுக: 'ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி' - சி.வி.சண்முகம் பேட்டி

    அதிமுக பொதுக்குழு

    பட மூலாதாரம், ADMK

    அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரான சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இருந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். 'இந்த பொதுக்குழு சட்டத்திற்கு புறம்பானது. கட்சியை அழிக்க நினைக்கிறார்கள் சதிகாரர்கள்' என்று வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளும் எம்.பியுமான சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், 'கட்சியின் சட்ட விதிகள் திருத்தவும் மாற்றவும் பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. நேற்று கூட்டப்பட்ட கூட்டம் அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நீதிமன்ற உத்தரவை மீறாமல் கூட்டப்பட்டது.

    கூட்டத்தில் வைக்கப்பட்ட 23 தீர்மானங்களை முறைப்படி நிராகரித்து விட்டோம். தீர்மானங்களை ஏற்கவும் நிராகரிக்கவும் பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், இந்த பதவிகள் காலாவதியாகி ஆகிவிட்டது..'என்றார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், ''அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய தலைமை நிலையச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி.'' என்று சி.வி.சண்முகம் குறிப்பிட்டார்.

  12. "2024-க்குப் பிறகு 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் முடிவு" - உமேஷ் கட்டி

    2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்க பிரதமர் நரேந்திர மோதி முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார்.

    உமேஷ் கட்டி
  13. “இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு” – மலேசிய மனிதவள அமைச்சர்

    மலேசிய மனிதவள அமைச்சர்

    இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால் மலேசியாவில் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று மலேசிய மனிதவளஅமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

    மலேசிய நாட்டின் மனிதவள அமைச்சராக இருப்பவர் டத்தோஸ்ரீ எம் சரவணன். இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவில் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் செய்தியாளர்களிடம்பேசுகையில், இன்னும் 10 ஆண்டுகளில் 4-வது தொழில் புரட்சி ஏற்பட இருக்கிறது. இந்தத் தொழிற்புரட்சி உலகத்தையே புரட்டிப் போடப் போகிறது. இந்தத் தொழில் புரட்சியை எதிர்கொள்ள தமிழர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அனைத்துத் துறைகளும் முழுக்க முழுக்க இயந்திரமயமாகும் சூழல் ஏற்படும் என்பதால் தமிழர்கள் தங்களை அதற்குத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

    மலேசிய மனிதவள அமைச்சர்

    தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவில் வேலைக்கு வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மலேசியாவில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான எந்த பிரச்னை ஏற்பட்டாலும் புகார் தெரிவிக்க இந்த செயலியை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு இந்த செயலி மூலம் அளிக்கப்படும் புகாருக்கு 7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அண்மைக் காலமாக இந்த செயலி மூலம் அளிக்கப்பட்ட 15,000 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தமிழர்கள் உணவகம் மற்றும் மின் கம்பங்கள் பொருத்தும் பணி ஆகியவற்றில் மட்டுமே தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,

    “இந்த இரு துறைகளில் பணியாற்றுவதற்கு மட்டும்தான் இந்திய அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு மலேசிய அரசை கேட்டுக் கொண்டால் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிய தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்,” என்றார்.

  14. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இது வரை க.சுபகுணம் வழங்கி வந்த நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  15. பிஎஸ்பிபி பள்ளியில் சீட் தர பணம் வாங்கியதாக பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்

  16. ஜூன் 26ஆம் தேதி ‘புரட்சிப் பயணம்’ செல்லவிருப்பதாக வி.கே.சசிகலா அறிவிப்பு

    “தமிழ் மண்ணின் உரிமைகளைக் காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணிக் காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப் பயணத்தைத் தொடங்குகிறார்,” என்று அ.இ.அ.தி.மு.க கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி வரும் 26-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை மதியம் 12:30 மணிக்கு தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு வி.கே.சசிகலா, கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் சென்றைகிறார். பின்னர் திருத்தணி பைபாஸில் இருந்து தனது ‘புரட்சிப் பயணத்தை’ தொடங்குகிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வெளி நடப்பு செய்தனர். 'இந்த பொதுக்குழு சட்டத்திற்கு புறம்பானது. கட்சியை அழிக்க நினைக்கிறார்கள் சதிகாரர்கள்' என்றும் வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா அமைதி காத்து வந்த நிலையில், தற்போது புரட்சிப் பயணம் என்று தொண்டர்களை சந்திக்க செல்கிறார்.

    வி.கே.சசிகலா

    பட மூலாதாரம், PTI

    படக்குறிப்பு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சசிகலா
  17. இலங்கை: படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது

    இலங்கை: படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது

    பட மூலாதாரம், SRI LANKA NAVY

    இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாணந்துறை பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

    குறித்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போது, சந்தேகத்திற்கு இடமான படகொன்று பயணிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கடற்படையினர் குறித்த படகை முற்றுகையிட்டு, சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 35 பேரும், ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கை: படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது

    பட மூலாதாரம், SRI LANKA NAVY

    இவ்வாறு ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 25 ஆண்களும் 04 பெண்களும் 06 குழந்தைகளும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

    மேலும், குறித்த படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதுடன், அந்தப் படகு நீண்ட தூர பயணத்திற்கு உகந்தது கிடையாது என்பதும் உறுதியாகியுள்ளதாகக் கடற்படை குறிப்பிடுகின்றது.

    கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற சுமார் 335-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  18. இந்தியாவைக் கட்டியெழுப்ப அதானி குடும்பம் ஒதுக்கிய 60,000 கோடி ரூபாய்

    "சமமான, எதிர்காலத்துக்கு ஏற்ற இந்தியாவைக் கட்டியெழுப்ப உதவுவதற்கு அதானி குடும்பம் 60,000 கோடி ரூபாயை ஒதுக்க உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது" என்று கெளதம் அதானி ட்வீட் செய்துள்ளார்.

    அதானி குழுமம்
  19. அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்

    அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு

    பட மூலாதாரம், Getty Images

    மத்திய அரசின் ‘அக்னிபத் திட்டத்தின்’ கீழ் இந்திய விமானப்படையில் ‘அக்னிவீரர்கள்’ ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை இன்று ஜூன் 24-ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்று வெள்ளிக்கிழமை முதல், பங்கேற்பாளர்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படைக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இதில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 5, 2022.

    தேர்வுகள் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூலை 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

    விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் படிவத்தை நிரப்பலாம். இதற்கான முழுமையான தகவல்கள் இந்திய விமானப்படையின் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் மற்றும் இடைநிலை மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    ஆன்லைன் தேர்வுக்குப் பதிவு செய்யும்போது, விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக 250 ரூபாயைச் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை டிஜிட்டல் பேமென்ட் அல்லது வங்கி சலான் மூலமாக டெபாசிட் செய்யலாம்.

  20. கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் பலி

    கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் பலி

    கடலூர் மாவட்டம் எம்.புதூர் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் இருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த வசந்தா என்ற 45 வயதான பெண், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தற்போது லேசான காயத்துடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வெடி விபத்தில் உயிரிழந்த வசந்தா உடலுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வே.கணேசன், “பட்டாசு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், அரசின் முழு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பின்றி உற்பத்தியை மேற்கொள்ளும் பட்டாசு ஆலைகள் மீதும் உற்பத்தியாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    முழுமையான பாதுகாப்பு இல்லாத பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் தெரிவித்துள்ளார்.

    வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களான வனிதா, மோகன்ராஜ் தம்பதியைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.