பிரயாக்ராஜ் வன்முறை - 59 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை

கான்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுப்பிடிக்கும் நோக்கில், வன்முறை நடந்த ஆறாம் நாளில் கல்வீச்சிலும், வன்முறை போராட்டத்திலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 59 நபர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. காங்கிரஸ் அலுவலகத்தில் காவல்துறை வலுக்கட்டாயமாக புகுந்ததாக கே.சி வேணுகோபால் ட்வீட்

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மூன்றாம் நாளாக நடத்தி வரும் நிலையில், அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காவல்துறை வலுக்கட்டாயமாக புகுந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால் ட்வீட் செய்துள்ளார்.

    இது தொடர்பாக வீடியோ பதிவிட்ட அவர், இந்திய ஜனநாயகத்தை பாஜக உண்மையில் கொன்றுவிட்டது என்று கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. ராஜசேகர் உயிரிழிப்பு காயங்களால் ஏற்படவில்லை - உடல் கூராய்வு அறிக்கை

    ராஜசேகர் என்கிற அப்பு

    சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான ராஜசேகர் என்கிற அப்பு கடந்த 12ம் தேதி உயிரிழந்தார்.

    இவரது மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில், அவரது உடல் கூராய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், ராஜசேகர் மரணம் காயங்களால் ஏற்படவில்லை என்றும், வேதியியல் ஆய்வு முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, காவல்நிலையத்தில் மயக்கமடைந்த அப்பு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று காவல்துறை தரப்பு கூறியுள்ளது.

  3. கோவை - நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட இளைஞர் கைது

    நூபுர் சர்மா விவகாரம்

    பட மூலாதாரம், POLICE

    முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா முகமது நபி தொடர்பாக தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்ட இளைஞரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கோவை மாவட்டம் சென்னனூரைச் சேர்ந்த 24 வயதான கார்த்தி என்பவர் ஏ.பி.வி.பி அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவர் நூபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதவிட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கண்கானித்து வந்த கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கார்த்தி என்பவரை இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் விதத்தில் செயல்பட்டதாக 153ஏ ஐபிசி, தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  4. பழனி முருகன் கோவிலில் காணிக்கை திருட்டு எதிரொலி - 13 புதிய கட்டுப்பாடுகள்

  5. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக ஏ.என்.ஐ முகமை வெளியிட்ட செய்தியில், "அரசு அறிவுறுத்தலின்படி காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் இந்திய வரலாற்றில் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான போக்கை எப்போதும் கண்டதில்லை," என்று அக்கட்சிச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக, ஜூன் 13 தேதியன்று சுமார் 11 மணிநேரமும், நேற்று (ஜூன் 14) சுமார் 8 மணிநேரமும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  7. சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை

    மா.சுப்பிரமணியன்

    பட மூலாதாரம், MA. SUBRAMANIAN/ TWITTER

    சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த உதவி சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறித்தும், தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

    சென்னையில் தற்போது 781 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் 684 பேருக்கு மிதமான அறிகுறிகளே உள்ளன. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் இணை நோய்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் 1,622 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையில் சிகிச்சையில் உள்ள 781 பேரையும் மாநகராட்சியின் 3,418 தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

  8. அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக உள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் உள்ளே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 5,718 பேர் குணமடைந்துள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,637. தினசரி தொற்று விகிதம் 2 சதவீதமாக உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அதேபோன்று, தமிழ்நாட்டில் நேற்று ஒருநாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,632. 153 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு இல்லை.

  10. 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அமைச்சரவை ஒப்புதல்

    5ஜி அலைக்கற்றை

    பட மூலாதாரம், GETTY IMAGES

    5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    72,097.85 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. காற்று மாசுபாடு: இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 5 ஆண்டுகள் குறையும் - சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

    காற்று மாசுபாடு

    பட மூலாதாரம், AFP

    காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என, 'இந்து தமிழ் திசை' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

  12. சேலம் மல்கோவா மாம்பழத்தின் வரத்து குறைவதற்கு காரணம் என்ன?

    “மல்கோவா மாம்பழம் இந்த ஆண்டு வரத்து குறைவு என்று விவசாயிகள் கூறுகின்றனர். சீசன் நேரத்தில் பூக்கள் கொட்டிவிட்டதே அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

    ஆகவே, இதன் காரணமாக மே மாதத்தில் மாம்பழம் குறைவாக வரும் என்று கூறினார்கள். அல்ஃபோன்சா, இமாம் பசந்த் ஆகிய வகைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், மக்கள் அதிகமாக விரும்புவது சேலத்தின் மல்கோவா மாம்பழத்தைத்தான்.

    அதன் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதையே கேட்கிறார்கள். இந்த ஆண்டு அதன் வரத்து குறைவாக இருப்பதால், அதன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை,” என்று கூறுகிறார் பழ வியாபாரி, அர்ஜூன்.

    மல்கோவா மாம்பழத்தின் வரத்து குறைவதன் காரணம் என்ன?

    தயாரிப்பு: சுதாகர்

    படத்தொகுப்பு: ஜெயக்குமார்சுதந்திரபாண்டியன்

    காணொளிக் குறிப்பு, சேலம் மல்கோவா மாம்பழத்தின் இன்றைய நிலை என்ன?
  13. "அதிமுகவில் ஒற்றை தலைமையாக ஓபிஎஸ் தான் வர வேண்டும்" - தேனி, ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சுவரொட்டி

    ஓ.பன்னீர்செல்வம்
    படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

    அதிமுகவில் ஒற்றை தலைமையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என, ராமநாதபுரத்தில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    அதிமுகவில் ஒற்றை தலைமை உருவாக வேண்டும் என்பது குறித்து நேற்று சென்னையில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் விவாதம் எழுந்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுகவினர், “அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும், அது ஓபிஎஸ் தலைமையாக இருக்க வேண்டும்” என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

    அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை எவ்வாறு நடத்துவது, என்னென்ன தீர்மானங்களை கொண்டு வருவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளில் பலர் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை வைத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ராமநாதபுரத்தில் “அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும், அது ஓபிஎஸ் தலைமையாக இருக்க வேண்டும்” என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    இதேபோன்று, தேனி மாவட்டத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

  14. தூத்துக்குடி: மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்

    மீனவர்கள்

    மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் விசைப்படகுகள் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்ட 262 விசைப்படகுகள் உள்ள நிலையில், 61 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால் மீன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுழற்சிமுறையில் 130 விசைப்படகுகள் இன்றும் 132 விசைப்படகுகள் நாளையும் கடலுக்கு செல்ல முடிவு செய்ததன் அடிப்படையில் இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

  15. பிரயாக்ராஜ் வன்முறை: “அவர்கள் எங்கள் குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்” – முகமது ஜாவேதின் மகள் சுமையா

    முகமது ஜாவேதின் மகள் சுமையா
    படக்குறிப்பு, முகமது ஜாவேதின் மகள் சுமையா

    "எங்கள் வீடு இடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் தங்குவதற்கே இடமில்லை. வீட்டை எப்படியோ கட்டிவிடுவோம். எங்கேயாவது தங்கிக் கொள்வோம். ஆனால், குடும்பம்! அவர்கள் ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்" என்கிறார், முகமது ஜாவேதின் மகள் சுமையா.

    பிரயாக்ராஜில், தன்னார்வலர் முகமது ஜாவேதின் வீட்டின் மீது ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு அதிகார அமைப்பு புல்டோசர் நடவடிக்கையை மேற்கொண்டது. ஜூன் 10 நடந்த வன்முறைக்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நிர்வாகம் கூறுகிறது. அங்கு நடந்த விஷயங்கள் குறித்து, அவருடைய மகள் சுமையா பிபிசி செய்தியாளர் அனந்த் ஜனானேவுக்கு அளித்த முழு பேட்டியை படிக்க இங்கே சொடுக்குங்கள்:

  16. கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு

    ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அரசங்குளம் அருகே சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆம்னி பேருந்தின் ஒட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று செவ்வாய்கிழமை சென்னைக்கு புறப்பட்டது. ஆம்னி பேருந்தினை ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டிசெல்வம் என்பவர் ஓட்டிவந்துள்ளார். இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

    ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே அரசங்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென பேருந்து நிலை தடுமாறி தடுப்பு கம்பிகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து கயத்தார் போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நாகர்கோவிலை சேர்ந்த சிவராம், ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் பாண்டிசெல்வம் மற்றும் அடையாளம் தெரியாதவர் என 3 பேர் உயிரிழந்தாக கயத்தார் பேலீசார் தெரிவித்துள்ளனர்.

    டயர் வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பேருந்தில் பயணம் செய்தவர்கள் தெரிவிக்கின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  17. திருமாவளவனுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி கேள்வி

    ''கிறித்தவர் பி.ஏ. சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது தொல். திருமாவளவன் அவருக்கு வாக்களிக்காதது ஏன்?'' - பாஜகவின் நாராயணன் திருப்பதி கேள்வி.

    நாராயணன் திருப்பதி
  18. ஈரோடு மாவட்டத்தில் கனமழை காரணமாக பெண்கள் இருவர் உயிரிழப்பு

    சரஸ்வதி
    படக்குறிப்பு, சரஸ்வதி

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையில் இருவேறு சம்பவங்களில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இரவு முழுவதும் விடாது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் இரு வேறு இடங்களில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.

    மேல் திண்டல் கார்கில் தெருவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி. இவர் நேற்று இரவு தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல சாலையில் வந்துள்ளார். அப்போது கனமழை காரணமாக ஒரு மரத்தடியில் ஒதுங்கி உள்ளார். எதிர்பாராதவிதமாக பலத்த காற்று வீசியதால் மரம் சாய்ந்து சரஸ்வதியின் மீது விழுந்தது. இதில் சிக்கிய அவர் உயிரிழந்தார்.

    நசியனூரில் ராயப்பாளையம் ரோட்டில் வசிக்கும் கண்ணுச்சாமி மனைவி துளசியம்மா. இவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையில் கனமழைக்கு ஒதுங்கிய போது பலத்த காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக பந்தல் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த துளசியம்மா உயிரிழந்தார்.

  19. நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மூன்றாவது நாளாக ஆஜராகிறார் ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    பட மூலாதாரம், ANI

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று மூன்றாவது நாளாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.

    முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 13 அன்று 11 சுமார் 11 மணிநேரமும் நேற்று (ஜூன் 14) சுமார் 8 மணிநேரமும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    ராகுல் காந்தி விசாரணைக்காக மூன்றாம் நாளாக அழைக்கப்பட்டிருப்பது "அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை" என, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    அப்பதிவில், "என்ன குற்றத்திற்காக விசாரணை நடத்தப்படுகிறது? எஃப்.ஐ.ஆர். எங்கே?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், "ராகுல் காந்தி மீதான தவறு என்ன? அவர் அச்சப்படவில்லை. பாஜக அரசாங்கத்தை நோக்கி அவர் கேள்விகளை எழுப்புகிறார்" என தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாக நின்ற கட்சி நிர்வாகிகள், தலைவர்களை டெல்லி காவல்துறை தாக்கியதாக, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  20. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக, அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நேற்று இரண்டாம் நாளாக ஆஜரானார். விசாரணை குறித்து ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
    • தமிழ்நாடு திருச்சியில் இருந்து பலாலிக்கு விமான சேவையும் புதுச்சேரி-யாழ்ப்பாணம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு இந்திய அரசுப்பணியில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் முதல் தனியார் ரயில் கோயம்புத்தூரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் ஷீரடிக்கு இன்று மாலை புறப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கான ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் கூறியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    • குடியரசுத் தேர்தல் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி டெல்லியில் இன்று நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மமதா சந்தித்தார்.
    • தமிழ்நாட்டில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்திருப்பதாகவும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.