கோயம்புத்தூர் - ஷீரடி தனியார் ரயில் சேவை: இன்று தொடக்கம் - தொழிற்சங்கம் எதிர்ப்பு

தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் முதல் தனியார் ரயில் கோயம்புத்தூரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் ஷீரடிக்கு இன்று மாலை புறப்படுகிறது.
கோயம்புத்தூரை சேர்ந்த எம் அண்ட் சி என்கிற நிறுவனம் இந்த ரயிலை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, 'தனியார் ரயிலின் கட்டணம் இரண்டு மடங்கு வரை அதிகமாக உள்ளதாக சர்ச்சையானது. எனவே, கோவை - ஷீரடி ரயிலை தனியார் வசம் ஒப்படைக்காமல், ரயில்வே துறையே ஏற்று நடத்த வேண்டும்.' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பினர் கோவை - ஷீரடி ரயிலை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை - ஷீரடி ரயிலை தனியாருக்கு விற்றதை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். விரைவு ரயில்களை தனியார்மயமாக்கும் முடிவுகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.










