நெல்லையில் மணமக்களுக்கு எரிவாயு சிலிண்டரை பரிசாக வழங்கிய நண்பர்கள்
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் தொடர் விலை ஏற்றத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு எரிவாயு சிலிண்டரை மணமகனின் நண்பர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் தொடர்ச்சியான விலையேற்றம் காரணமாக மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், இதற்கு மத்திய அரசு உடனடியாக விலை குறைப்புக்கான நடவடிக்கையை எடுக்க கோரிக்கை விடுத்தும், இன்று நடந்த திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு, மணமகனின் நண்பர்கள் ஒன்றிணைந்து வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரை அன்பளிப்பாக வழங்கினர்.
மணமக்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கும் மேடையில், எரிவாயு சிலிண்டர் அளித்தது அங்கு கூடியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.