நூபுர் ஷர்மா சர்ச்சை பேச்சு: காவல் துறை சம்மன் அனுப்பியது
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நூபுர் ஷர்மா வரும் 22ம் தேதி வாக்குமூலம் அளிக்க காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக, பாஜக செய்தித் தொடர்பாளர்நூபுர் ஷர்மா, அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் நூபுர் ஷர்மா மீது முதல் தகவல் அறிக்கை ( எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நூபுர் ஷர்மா வரும் 22ம் தேதி தனது வாக்குமூலத்தை அளிக்க மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு








