காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை - ஒரு மாதத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ரியாஸ் மஸ்ரூர், பிபிசி, ஸ்ரீநகர்

பட மூலாதாரம், Khursheed Alam
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வங்கியாளர் விஜய் குமார். இவர் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வியாழக் கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் விஜய்குமார் மேலாளராக பணிபுரிந்த வங்கிக்கு சென்றுகொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு மாதத்திற்குள் விஜய்குமாருடன் நான்காவது நபர் கொல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக காஷ்மீரி இந்துவான ராகுல் பட், இஸ்லாமிய தொலைக்காட்சி நடிகை அம்ரீனா பட், ஜம்முவைச் சேர்ந்த இந்து ஆசிரியை ரஜனி பாலா ஆகியோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலைகள் பள்ளத்தாக்கு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், காஷ்மீருக்கு திரும்பியவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை தூண்டும் என்றும் அஞ்சப்படுகிறது.
“எங்களை அடைத்து வைத்துள்ளனர். இங்கு எப்படி நாங்க வேலை செய்ய முடியும்? எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக சொன்னார்கள். ஆகையால் இங்கு அரசுப் பணியில் சேர்ந்தோம், ஆனால் இப்போது நாங்கள் கொல்லப்படுகிறோம்.'' என்று அவர்கள் கூறியதாக, புட்காம் ஷேக்போரா முகாமில் போராட்டம் நடத்திய பண்டிட் ஊழியர் தெரிவிக்கிறார்.
காவல்துறை தகவல்படி, ஜனவரி முதல் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 6 பேர் சிறுபான்மை சமூகத்தினர், 12 பேர் காஷ்மீர் முஸ்லிம்கள்.
கடந்த 1990ம் ஆண்டு ஆயுதம் ஏந்தியவர்களால் பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். இதில், இந்த பள்ளத்தாக்கில் இருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட்டு, வெளியேறினர். தப்பிச் சென்ற பண்டிட்டுகளில் 5, 000 பேர். 2012ம் ஆண்டு, பிரதமர் அறிவித்த வேலை திட்டத்தால் திரும்பியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images




