You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
மலையாள சினிமாவில் தமிழர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்? 'பாண்டி' என்பதன் பின்னணி
சிக்சர் மழைக்கு நடுவே நாயகனான பௌலர்: குஜராத்தை கேகேஆர் வென்றதால் பிளேஆஃப் சுற்றுக்கு அதிகரிக்கும் போட்டி
குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கேகேஆர்
காணொளி: நீட் தேர்வு ரத்து - 22 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
காணொளி: CM விஜய் கட்டுப்பாட்டில் இத்தனை துறைகளா?
காணொளி: "பெண்களே இல்லை" ; டிரம்ப் - ஷி சந்திப்பில் என்ன சர்ச்சை?
காணொளி: குஜராத் இசை நிகழ்ச்சியில் கலைஞர்கள் மீது 'பணமழை'
காணொளி: தமிழ்நாடு எம்எல்ஏக்களின் மாத சம்பளம் எவ்வளவு?
"நான் தேவையில்லை என்றால்..." - 2027 உலகக்கோப்பை குறித்து கோலி கூறியது என்ன?
"தாடி, தொப்பியுடன் இருந்தால் குறிவைக்கிறார்கள்" - மதராஸாவுக்கு சென்ற இந்த 163 சிறுவர்கள் தடுக்கப்பட்டது ஏன்?
காணொளி: தைவான் மீதான சீனாவின் அணுகுமுறை மாறுகிறதா?
காணொளி: கடலில் இருந்து மீட்கப்பட்ட 11 பேர்
சீனாவை விமர்சிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள், அதிபரின் சீன பயணம் குறித்து கருதுவது என்ன?
இளைஞர்களை கரப்பான் பூச்சி என விமர்சித்தேனா? - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
காணொளி: “பாகிஸ்தானுக்காக போர்நிறுத்தம் செய்தோம்” - டொனால்ட் டிரம்ப்
"தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆளும் கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் 36 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொள்வார்கள் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்டாலின் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில், "தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது," என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில், "தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் தள்ளுமுள்ளு
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல்துறையினர் தலையிட்டு அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் சிவி சண்முகம் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சிவி சண்முகத்தை விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து, விழுப்புரம் அதிமுக புதிய மாவட்ட செயலாளராக பசுபதி என்பரை நியமித்தார். ஆனால் அந்த அறிவிப்பு செல்லாது என சிவி சண்முகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பசுபதி தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதிமுக அலுவலக சாவியை பெற்றுத் தர வேண்டும் எனவும் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை இருந்ததால் அதிமுக அலுவலகம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் பசுபதி தரப்பினர் உள்ளே செல்ல முயன்றனர். அதற்கு சிவி சண்முகம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவி சண்முகம் தரப்பினர் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, சிவி சண்முகம் தரப்பினரை போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அதிமுக அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.
பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கருத்து - பாகிஸ்தான் எதிர்வினை என்ன?
ரூ.2,500 உதவித்தொகை திட்டம் எப்போது அமல் ? அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பதில்
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தவெக தேர்தல் வாக்குறுதியான ரூ.2,500 உதவித்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பேசினார்.
"பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகளை பட்ஜெட்டுக்குப் பிறகு தான் செய்ய முடியும். நிதி ஆதாரங்களை சரிசெய்து பட்ஜெட்டுக்குப் பிறகு தான் கொண்டு வர முடியும். இதனை அரசாணை மூலம் செயல்படுத்த முடியாது," என அவர் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "போதைப் பொருள் பயன்பாடு, மதுபான கூடங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் மற்றும் சட்ட விரோதமாக இயங்கி வரும் குவாரிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை தயார் செய்ய வேண்டிய வேலைகளில் இருந்து வருகிறோம்." என்றார்.